சீவக சிந்தாமணி 746 - 750 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

746. வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
பந்தணி விரலினாள் தன் படா முலைப் போகம் வேண்டிக்
கந்து எனத் திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கல் உற்றார்

விளக்கவுரை :

747. பண்ணியல் யானை மேலான் பது முகன் பரவைத் தானை
கண்ணியது உணர்ந்து கல்லாக் கட்டியங் காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்று கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

748. இசையினில் இவட்குத் தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே
திசை முகம் படர்க வல்லே தீத் தொட்டால் சுடுவது அன்றே

விளக்கவுரை :


749. தோளினால் மிடைந்து புல்லும் தொண்டைவாய் அமிர்தம் வேட்டோர்
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும் மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப் பெற்றீர்
தாளினால் நொய்யீராகித் தரணிதாம் விடுமின் என்றான்

விளக்கவுரை :


750. நாறும் மும் மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
ஊறித் தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 741 - 745 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

741. வெள் இலை வேல் கணாளைச் சீவகன் வீணை வென்றான்
ஒள்ளியன் என்று மாந்தர் உவாக் கடல் மெலிய ஆர்ப்பக்
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்

விளக்கவுரை :

742. வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகுமின் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

743. மல்லுப் பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்துச்
செல்வப் பூ மகளும் நாளை அவன் உழைச் செல்லும் என்றான்
முல்லைப் பூம் பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக்
கொல்லைப் பூங் குன்றம் செய்தீர் குங்குமக் குழங்கல் மாலை

விளக்கவுரை :

744. திருமகள் இவளைச் சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி
இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும்
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங் காரன் அன்றே

விளக்கவுரை :

745. அனிச்சப் பூங் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சிப்
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணித்
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூமணிச் சிவிறி நீர் தூய்த்
தனிக் கயத்து உழக்கி வென்றீர் தையலைச் சார்மின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 736 - 740 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

736. மையார் நெடுங் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
நையா நடு நடுங்கா நனி நாணம் மீது ஊராப்
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன்மாலை
பெய் பூங் கழலாற்குப் பெண் அரசி ஏந்தினளே

விளக்கவுரை :


737. மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
நல்ல பெடையன்னம் நாண அடி ஒதுங்கி
ஒல்லென் உயர்தவமே செய்ம்மின் உலகத்தீர்
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே

விளக்கவுரை :


[ads-post]

738. நாகத்துப் படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்துப் பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்துப் பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்

விளக்கவுரை :

739. செம்மலர் அடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி
வெம் முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி
விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல ஆகி
மைம்மலர்த் தடங் கண் நங்கை மரைமலர்த் தேவி என்றான்

விளக்கவுரை :

740. கோதையும் தோடும் மின்னக் குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்பக்
காதல் அம் தோழி மார்கள் கருங் கயல் கண்ணினாளை
ஏதம் ஒன்று இன்றிப் பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 731 - 735 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

731. கோதை புறம் தாழக் குண்டலமும் பொன் தோடும்
காதின் ஒளிர்ந்து இலங்கக் காமர் நுதல் வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
கீதம் கிடை இலாள் பாடத் தொடங்கினாள்

விளக்கவுரை :


732. இலையார் எரிமணிப் பூண் ஏந்து முலையும்
சிலையார் திருநுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :


[ads-post]

733. பிறையார் திருநுதலும் பேரமர் உண் கண்ணும்
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறைவேல் உண் கண்ணினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :

734. அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார் கொல் கேள்வர்

விளக்கவுரை :

735. பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளைக் கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
விண் நின்று இயங்கி மிடறு நடு நடுங்கி
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 726 - 730 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

726. வானம் மீன் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்

விளக்கவுரை :


727. அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல் தவழ்ந்த வாறும்
பண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்

விளக்கவுரை :

[ads-post]

728. வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை
சூழ் மணிக் கோட்டு வீணைச் சுகிர் புரி நரம்பு நம்பி
ஊழ் மணி மிடறும் ஒன்றய்ப் பணி செய்தவாறு நோக்கித்
தாழ் மணித் தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே

விளக்கவுரை :


729. விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம் மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப் பட்ட பாவை போல் ஆயினாரே

விளக்கவுரை :


730. பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார்ச் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 721 - 725 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

721. தீந் தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதிப்
பூந் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்டத்
தேங் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான்

விளக்கவுரை :


722. பணிவரும் பைம் பொன் பத்தர் பல்வினைப் பவள ஆணி
மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீம்தேன்
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல்யாழ்
கணிபுகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கல் உற்றான்

விளக்கவுரை :

[ads-post]

723. குரல் குரல் ஆகப் பண்ணிக் கோதை தாழ் குஞ்சியான் தன்
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு எனத் தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇப் பாடுகின்றான்

விளக்கவுரை :

724. கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன் நாண் பொருத முலை என்கோ யான்

விளக்கவுரை :


725. கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோ யான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 716 - 720 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

716. தடங் கணாள் பணியினால் தான் அவ்வீணை ஒன்றினை
நெடுங் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
கிடந்த ஞானத்து எல்லையைக் கிளக்கல் உற்று நோக்கினான்

விளக்கவுரை :

717. சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
பரந்த கேள்வித் துறை போய பைந்தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து எனத் தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்

விளக்கவுரை :


[ads-post]

718. நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்

விளக்கவுரை :

719. கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காமத் தீயால் வெந்தவர்போல்
கொல்லை உழவர் சுடப் பட்டுக் குரங்கி வெந்தது இது களிறு
புல்ல முரிந்தது எனப் போக்கித் தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்

விளக்கவுரை :

720. இரு நில மடந்தை ஈன்றது இருவிசும்பு என்னும் கைத்தாய்
திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால்
ஒருநலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
அருநலம் கவினி வாள்வாய் அரிந்து இது வந்தது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 711 - 715 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

711. நலத்தை மத்து ஆக நாட்டி நல்வலி இளமை வாராக்
குலப் பிறப்பு என்னும் கையால் கோலப் பாசம் கொளுத்திக்
கலக்கி இன் காமம் பொங்கக் கடைந்திடுகின்ற காளை
இலைப்பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும் கொல்லோ

விளக்கவுரை :

712. தீங் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
பூங் குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்

விளக்கவுரை :

[ads-post]

713. கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
பெண் எனும் உழலை பாயும் பெருவனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவன் ஆம் கொல் என் இதில் படுத்த ஏந்தல்
ஒண்ணிற உருவச் செந்தீ உருவுகொண்ட அனைய வேலான்

விளக்கவுரை :


714. யாவனே யானும் ஆக அருநிறைக் கதவம் நீக்கிக்
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னி மாடம் புகுந்து
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலை யாலே
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்

விளக்கவுரை :

715. கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து இடைப் பிணையின் மாழ்கி
விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கித் தன்தோழி கூந்தல்
இழுக்கி வண்டு இரியச் சேர்ந்து ஓர் கொடிப் புல்லும் கொடியின் புல்லி
எழில்தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்துக் கொடுமோ என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 706 - 710 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

706. முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இந்நகர்
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்

விளக்கவுரை :

707. முனைத் திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகனிவன்
கனைத்து வண்டு உளர்ந்த தார்க் காளை சீவகன் அரோ

விளக்கவுரை :


[ads-post]

708. பொன்னை விட்ட சாயலாள் புணர் முலைத் தடத்தினால்
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு அரோ எழுதி நங்கை ஆட் கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே

விளக்கவுரை :

709. இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்

விளக்கவுரை :

710. குட்ட நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக்
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையைக் கைபோய்
இட்ட நாண் வேலி உந்திக் கடல் என எழுந்த வேட்கை
விட்டுஎரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 701 - 705 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

701. விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண்தேர்
கடு நடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி காய்ந்து
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே

விளக்கவுரை :


702. தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே

விளக்கவுரை :

[ads-post]

703. சுறா நிறக் கொடுங் குழை சுழன்று எருத்து அலைத்தர
அறா மலர்த் தெரியலான் அழன்று நோக்கி ஐ எனப்
பொறா மனப் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால்
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே

விளக்கவுரை :

704. குனி கொள்பாக வெண் மதிக் கூர் இரும்பு தான் உறீஇப்
பனி கொள் மால்வரை எனப் படு மதக் களிறு இரீஇ
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்

விளக்கவுரை :

705. புதிதின் இட்ட பூந் தவிசின் உச்சிமேல் நடந்து அவண்
புதிதின் இட்ட மெல் அணைப் பொலிந்த வண்ணம் போகுஉயர்
மதியது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
உதயம் என்னும் மால்வரை உவந்து இருந்தது ஒத்ததே

விளக்கவுரை :
Powered by Blogger.