சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3101. பரிநிர்வாணம்
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்ப்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகமே

விளக்கவுரை :

3102. மீன் தயங்கு திங்கள் முக நெடுங் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செந் நாவின் சில் மென் கிளிக் கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி அரோ
கான் தயங்கி நில்லா கருவினை கால் பெய்தனவே

விளக்கவுரை :

[ads-post]

3103. மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழுக் குணங்கள் ஏத்தித்
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்

விளக்கவுரை :

3104. ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்திச்
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்பத் துதி ஓதித்
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி எனக் கொற்றவனும் சொன்னான்

விளக்கவுரை :

3105. இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books