சீவக சிந்தாமணி 2751 - 2755 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2751 - 2755 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2751. வில்லின் மாக் கொன்று வெள் நிணத் தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே

விளக்கவுரை :

2752. கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள்
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள்
கருவில் காய்த்திய கட்டளைப் படிமையில் பிழையாது
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே

விளக்கவுரை :

[ads-post]

2753. காமன் அன்னது ஓர் கழிவனப்பு அறிவொடு பெறினும்
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி
வாமன் நூல் நெறி வழு அறத் தழுவினர் ஒழுகல்
ஏம வெண் குடை இறைவ மற்று யாவதும் அரிதே

விளக்கவுரை :

நிலையாமை

2754. இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே

விளக்கவுரை :

2755. வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது
ஒண்மை வாள் மதி உருவொடு திரு எனத் தோன்றிக்
கண் அனார் அழக் கவிழினும் கவிழும் மற்று அறி நீ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books