சீவக சிந்தாமணி 2956 - 2960 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2956 - 2960 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2956. விண்ணோர் மட மகள் கொல் விஞ்சை மகளே கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவ தத்தை என்று
எண் ஆய வான் நெடுங் கண் மெய் கொள்ள ஏமுற்றுப்
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே

விளக்கவுரை :

2957. கொல் வேல் நெடுங் கண் குணமாலை குஞ்சரத்தால்
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்துப்
புல்லிப் புணர் முலையின் பூங் குவட்டின் மேல் உறைந்தாய்
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ

விளக்கவுரை :

[ads-post]

2958. தூம்பு உடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்
பாம்பு உடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்பு உடைய இன் அமுதாச் சேர்ந்தாய்க்கு இனி அதுவே
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே

விளக்கவுரை :

2959. தாழ்ந்து உலவி மெல் முலை மேல் தண் ஆரம் வில் விலங்கப்
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏப் பெற்றுப் போகலாய்
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ

விளக்கவுரை :

2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ அமுதோ பிணையோ எனப் பிதற்றித்
துண் என் சிலைத் தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
புண் மேல் கிழிபோல் துறத்தல் பொருள் ஆமோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books