சீவக சிந்தாமணி 3091 - 3095 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3091 - 3095 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3091. சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகித்
துறவு நெறிக் கடவுள் அடி தூமமொடு தொழுதார்

விளக்கவுரை :

3092. பால் அனைய சிந்தை சுடரப் படர் செய் காதி
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகிக்
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
கோல மலர்ச் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்

விளக்கவுரை :

[ads-post]

3093. முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தித் தொழுதும் யாம்

விளக்கவுரை :

3094. ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
நாத் தழும்ப ஏத்தித் தவ நங்கையவர் நண்ணித்
தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார்

விளக்கவுரை :

3095. செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
மொய்ம் மலர் தூய் முனியாது வணங்குதும்
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books