சீவக சிந்தாமணி 2786 - 2790 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2786 - 2790 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2786. எரி வளைப்ப வெம்புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும்
அரி வளைப்பக் குஞ்சரமும் ஆலி போல் நீராம்
வரி வளைக்கும் வெண் மயிர்க்கும் முத்திற்கும் மாந்தர்
திரு வளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்

விளக்கவுரை :

2787. வேள்வி வாய்க் கண்படுத்தும் வெவ் வினை செய் ஆடவர் கை
வாளின் வாய்க் கண் படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல்
கோள் இமிழ்ப்பு நீள் வலை வாய்க் கண்படுத்தும் இன்னணமே
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம்

விளக்கவுரை :

[ads-post]

2788. கொல்வாரும் கூட்டுள் செறிப்பாரும் ஆடவர்கள்
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே
அல்லாத பைங் கிளியும் பூவையும் ஆதியா
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏம் உறு நோய் செய்பவே

விளக்கவுரை :

2789. மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும்
பல்லவரே அன்றிப் பகுத்து உணாப் பாவிகளும்
அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார்
வில் பொரு தோள் மன்னா விலங்காய்ப் பிறப்பவே

விளக்கவுரை :

மக்கள் கதித் துன்பம்

2790. தம்மை நிழல் நோக்கித் தாங்கார் மகிழ் தூங்கிச்
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
கொம்மைக் குழகு ஆடும் கோல வரை மார்பர்
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books