சீவக சிந்தாமணி 1101 - 1105 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1101 - 1105 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1101. நெய்த் தலைக் கருங்குழல் நிழன்று எருத்து அலைத்தர
முத்து அலைத்து இள முலை முகம் சிவந்து அலமரக்
கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண்
மைத்தலை நெடுந் தடம் கண் மங்கையர் மயங்கினர்

விளக்கவுரை :

1102. கோதை கொண்ட பூஞ்சிகை கொம்மை கொண்ட வெம்முலை
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து
ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம்பனி உகுத்து
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர்

விளக்கவுரை :

[ads-post]

1103. செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும்
அம்பொன் மாலை யோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர்
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார்

விளக்கவுரை :

1104. பூ அலர்ந்த தாரினான் பொற்பு வாடும் ஆயிடின்
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடுங் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அவ் வயிறு அதுக்கினார்

விளக்கவுரை :

1105. தேன் மலிந்த கோதை மாலை செய் கலம் உகுத்து உராய்க்
கால் மலிந்த காம வல்லி என்னது அன்னர் ஆயரோ
பால் மலிந்த வெம் முலைப் பைந்துகில் அரிவையர்
நூல்மலிந்த நுண்ணுசுப்பு நோவ வந்து நோக்கினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books