சீவக சிந்தாமணி 1031 - 1035 of 3145 பாடல்கள்
1031. பொன் குன்று ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇச்
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான்
விளக்கவுரை :
1032. சேலை வென்ற கண்ணாட்கு இவை செப்ப அரிது
ஓலை ஒன்று எழுதிப் பணி நீ என
மாலை மார்பன் கொடுப்பத் தினைக் குரல்
ஓலையோடு கொண்டு ஓங்கிப் பறந்ததே
விளக்கவுரை :
[ads-post]
1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள்
பொருந்து பூம் பொய்கைப் போர்வையைப் போர்த்து உடன்
கருங் கண் பாவை கவின் பெற வைகினாள்
விளக்கவுரை :
1034. மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல்
கறங்க ஏகித் தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர்ச் சென்னியின் நீக்கினான்
நிறைந்தது இன்ப நெடுங் கணிக்கு என்பவே
விளக்கவுரை :
1035. தன் துணைவி கோட்டியினின் நீங்கித் தனி இடம் பார்த்து
இன் துணைவன் சேர்வான் இருந்தது கொல் போந்தது கொல்
சென்றது கொல் சேர்ந்தது கொல் செவ்வி அறிந்து உருகும்
என் துணைவி மாற்றம் இஃது என்றது கொல் பாவம்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1031 - 1035 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books