சீவக சிந்தாமணி 2891 - 2895 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2891. மஞ்சு இவர் மணி வரை அனைய மாதவன்
வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய் மொழி
அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே

விளக்கவுரை :

2892. வார் அணி மணித் துடி மருட்டும் நுண் இடைக்
கார் அணி மயில் அனார் சூழக் காவலன்
ஏர் அணி மணி முடி இறைஞ்சி ஏத்தினான்
சீர் அணி மாதவர் செழும் பொன் பாதமே

விளக்கவுரை :

[ads-post]

2893. நலத் திரு மட மகள் நயந்த தாமரை
நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல்
உலப்பு அருந் தவத்தினால் ஓங்கு சாரணர்
செலத் திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே

விளக்கவுரை :

தாயத் தீர்வு

2894. சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
வார் அணி வன முலை வஞ்சிக் கொம்பு அனார்
போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே

விளக்கவுரை :

2895. பொன் வரை நிலாக் கதிர் பொழிந்து போர்த்த போல்
தென் வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
இன் உரை கொடான் கொடிக் கோயில் எய்தினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2886 - 2890 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2886. நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை
பொன் பொறி கழல எல்லாப் பொறிகளும் கழல்வதே போல்
சொல் பொறி சோர எல்லாப் பொறிகளும் சோர்ந்து நம்பன்
இல் பொறி இன்பம் நீக்கி இரு ஆயிரர் சூழச் சென்றான்

விளக்கவுரை :

2887. தணக்கு இறப் பறித்த போதும் தான் அளை விடுத்தல் செல்லா
நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும்
மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆகக்
கணைக் கவின் அழித்த கண்ணார்த் துறந்து போய்க் கடவுள் ஆனான்

விளக்கவுரை :

[ads-post]

2888. துமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும்
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதித் திருவும் ஆர்ந்த
காமம் மாசு உண்ட காதல் கதிர் வளைத் தோளினாரும்
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார்

விளக்கவுரை :

2889. ஆசாரம் நாணத் தவம் செய்து அலர்க் கற்பகத் தார்ச்
சாசாரன் என்னும் தகை சால் ஒளித் தேவர் கோவாய்
மாசாரம் ஆய மணி வான் உலகு ஆண்டு வந்தாய்
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான்

விளக்கவுரை :

2890. மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்த அதனால்
பொன் ஆர மார்ப சிறைப் பட்டனை போலும் என்றான்
இன்னாப் பிறவிப் பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2881 - 2885 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2881. மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல
ஒப்புடைக் காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்துப் பாவம்
இப்படித்து இது என்று அஞ்சிப் பிறவி நோய் வெருவினானே
மைப்படு மழைக் கண் நல்லார் வாய்க் கொண்ட அமுதம் ஒப்பான்

விளக்கவுரை :

2882. ஆளியால் பாயப் பட்ட அடு களி யானை போல
வாளி வில் தடக்கை மைந்தன் வாய் விட்டு புலம்பிக் காம
நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன்
தோளியர்த் துறந்து தூய்தாத் தவம் செய்வல் அடிகள் என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2883. சிறுவன் வாய் மொழியைக் கேட்டே தேர் மன்னன் தானும் சொன்னான்
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடித் தாயம் எய்தி
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம்
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான்

விளக்கவுரை :

2884. கொலைச் சிறை உய்ந்து போகும் ஒருவனைக் குறுக ஓடி
அலைத்தனர் கொண்டு பற்றி அருஞ் சிறை அழுத்துகின்றார்
தொலைப்ப அருஞ் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
விலைப் பெரு மணியை முந்நீர் நடுக்கடல் வீழ்த்தது ஒத்தான்

விளக்கவுரை :

2885. காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள்
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனிக் கொளும் உடம்பினானும்
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூந்
தாது அலர் மார்பன் அற்புத் தளை அறப் பரிந்திட்டானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2876 - 2880 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2876. அல்லித் தாள் அற்ற போதும் அறாத நூலதனைப் போலத்
தொல்லைத் தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக் கொண்டு உயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்று
எல்லையில் துன்ப வெம் தீச் சுட்டு எரித்திடுங்கள் அன்றே

விளக்கவுரை :

2877. அறவிய மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அருளைச் செய்யின்
பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரோடு ஆடி
மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையின் கறக்கும் தம்மால் காமுறப் பட்ட எல்லாம்

விளக்கவுரை :

[ads-post]

2878. நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர்த்
தொடு மணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதே போல்
கடுமணிக் கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து
அடு மணி ஆவி நீப்பார் அறிவினால் சிறிய நீரார்

விளக்கவுரை :

2879. வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால்
சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி
ஆறு இழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் செம் பொன்
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார்

விளக்கவுரை :

2880. துன்னி மற்று அறத்தைக் கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல்
மின்னுத் தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகிப் பெண்பால்
அன்னப் பார்ப்பு அன்று கொண்ட தடத்து இடை விடுவித்து இட்டான்
பின்னைத் தன் கிளைகள் கூட்டம் பெருந் தகை வித்தினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2871 - 2875 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2871. மடத்தகைய நல்லார் மனம் கரிய மாற்றார்
பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின்
எடுப்ப அரிய துன்பத்து இடைப் படுவர் இன்னா
நடுக்கு உடைய காமம் விடுத்திடுதல் நன்றே

விளக்கவுரை :

2872. தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்குச் செம்பொன்
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
அருளும் நக வையம் நக ஐம் பொறியும் நையப்
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2873. பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம்
மை படும் வினைத் துகள் வழக்கு நெறி மாயம்
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செந் தீக்
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான்

விளக்கவுரை :

2874. காமம் உடையார் கறுவொடு ஆர்வம் உடையாரும்
தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார்
ஏமம் உடையார்கள் இவர் அல்லர் இவை இல்லா
வாமன் அடி அல்ல பிற வந்தியன்மின் என்றான்

விளக்கவுரை :

2875. பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பல் மா
யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கிக்
காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப்
போவர் புகழ் நம்பி இது பொற்பிலது கண்டாய்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2866 - 2870 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2866. அணி சேர் இடக்கை விரலால் வலத் தோள்
மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையாப்
பணியா முடியால் பணிந்தான் இளையோன்

விளக்கவுரை :

2867. கிளைப் பிரிவு அருஞ் சிறை இரண்டும் கேட்டியேல்
வினளக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு எனத்
திளைக்கும் மா மணிக் குழை சுடரச் செப்பினான்
வளைக் கையார் கவரி கொண்டு எறிய மன்னனே

விளக்கவுரை :

[ads-post]

2868. அறம் பெரிய கூறின் அலங்கல் அணி வேலோய்
மறம் புரி கொள் நெஞ்சம் வழியாப் புகுந்து ஈண்டிச்
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
உறும் பெரிய துன்பம் உயிர்க் கொலையும் வேண்டா

விளக்கவுரை :

2869. மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும்
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர்
பொய் உரையும் வேண்டா புறத்து இடுமின் என்றான்

விளக்கவுரை :

2870. முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும்
விளைவு அரிய மா துயரம் வீழ் கதியுள் உய்க்கும்
களவு கடன் ஆகக் கடிந்திடுதல் சூதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2861 - 2865 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2861. விரும்பு பொன் தட்டிடை வெள்ளிக் கிண்ணம் ஆர்ந்து
இருந்தன போன்று இள அன்னப் பார்ப்பு இனம்
பொருந்து பொன் தாமரை ஒடுங்கிப் புக்கு ஒளித்து
இருந்த கண்டான் இளங் கோக்கள் நம்பியே

விளக்கவுரை :

2862. உரிமையுள் பட்டிருந்து ஒளிக்கின் றார்களைப்
பெரும நீ கொணர்க எனப் பேசு காஞ்சுகி
ஒரு மகற்கு ஈந்தனன் கோயில் புக்கனன்
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே

விளக்கவுரை :

[ads-post]

2863. வட மலைப் பொன் அனார் மகிழ்ந்து தாமரைத்
தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே
வட முலை என நடாய் வருடிப் பால் அமுது
உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார்

விளக்கவுரை :

2864. கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன்
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே
கொண்டு ஈங்கு வம்மின் கொலை வேலவன் தன்னை என்றான்

விளக்கவுரை :

2865. படு கண் முழவும் பசும் பொன் மணி யாழும் ஏங்க
இடுகும் நுசுப்பினவர் ஆட இருந்த நம்பி
அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2856 - 2860 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2856. பைங் கழல் மன்னர் மன்னன் பவணமா தேவன் என்பான்
சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி
ஐங் கணைக் காமன் அன்னான் அசோதரன் அரச சீயம்
தங்கிய கேள்வியாற்குத் தையலார்ச் சேர்த்தினாரே

விளக்கவுரை :

2857. இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகிக்
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
விளை மதுத் தேறல் மாந்தி வெற்றிப் போர் அநங்கன் ஆனான்

விளக்கவுரை :

[ads-post]

2858. இலங்கு அரி பரந்த வாள் கண் இளையவர் புலவி நீங்கச்
சிலம்பு எனும் வண்டு பாடச் சீறடிப் போது புல்லி
அலங்கல் வாய்ச் சென்னி சேர்த்தி அரிமதர் மழைக் கண் பில்க
நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாம் உறக் கழிக்கும் மாதோ

விளக்கவுரை :

2859. மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
பங்கயப் பனித் தடம் சேரப் பார்ப்பு அனம்
செங் கயல் பேர் இனம் இரியச் செவ்வனே
பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே

விளக்கவுரை :

2860. வேய்ந்த வெண் தாமரைக் கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
ஆய்ந்த முகில் ஆடைத் திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல்
தோய்ந்த தன் காதலன் பற்ற அற்றுச் சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை
பாய்ந்து துகைப்பக் கிழிந்த கூழைப் பனித் தாமரை சூழ் பகல் கோயிலே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2851 - 2855 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2851. முழு நீர் வளை மேய்தலின் முத்து ஒழுகிப்
பொழி நீர் நிலவின் இருள் போழ்ந்து அரிசிக்
கழு நீர் ஒழுகக் கழு நீர் மலரும்
தழு நீரது தாதகி என்று உளதே

விளக்கவுரை :

2852. கயல் பாய்ந்து உகளக் கடி அன்னம் வெரீஇ
வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல்
அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும்
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே

விளக்கவுரை :

[ads-post]

2853. அவணத்தவர் கூந்தல் அகில் புகையைச்
சிவணிச் சிறுகால் கமுகம் பொழில் சேர்ந்து
உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும்
பவணத்து ஒரு பாங்கினதால் அளிதோ

விளக்கவுரை :

2854. மதியும் சுடரும் வழி காணல் உறாப்
பொதியும் அகிலின் புகையும் கொடியும்
நிதியின் கிழவன் இனிதா உறையும்
பதி பொன் நகரின் படி கொண்டதுவே

விளக்கவுரை :

2855. ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
காம வல்லி கிடந்தன போன்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2846 - 2850 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2846. கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல்
நீடிய வினை மரம் நிரைத்துச் சுட்டிட
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே

விளக்கவுரை :

2847. கடை இலா அறிவொடு காட்சி வீரியம்
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும்
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
அடைதலான் மேல் உலகு அறியப் பட்டதே

விளக்கவுரை :

[ads-post]

பிறவிகள் அறவுரை

2848. மாதவன் எனப் பெயர் வரையின் அவ்வரை
ஏதம் இல் எயிறு அணி பவள வாய்த் தொடுத்து
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான்

விளக்கவுரை :

2849. எல்லை இல் அறவுரை இனிய கேட்ட பின்
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும்
வல்லையே பணிமின் அம் அடிகள் என்றனன்
மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான்

விளக்கவுரை :

2850. கதிர் விடு திருமணி அம் கைக் கொண்டது ஒத்து
எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும்
அதிர்வு அறு தவ விளக்கு எறிப்பக் கண்டவன்
பதர் அறு திருமொழி பணிக்கும் என்பவே

விளக்கவுரை :
Powered by Blogger.