சீவக சிந்தாமணி 3141 - 3145 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3141. புருவச் சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
உருவத் துடி இடையார் ஊடல் உப்பு ஆகத்
திருவின் திகழ் காமத் தேன் பருகித் தேவர்
பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார்

விளக்கவுரை :

3142. முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய்ச் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடுபால் விம்மிப்
பகடு பட அடுக்கிப் பண்ணவனார் தம் ஒளி மேல் நின்றால் போலும்
தகடு படு செம் பொன் முக் குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே

விளக்கவுரை :

[ads-post]

3143. ஓம் படை
முந் நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற
மெய்ந் நீர்த் திருமுத்து இருபத்து ஏழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
செந் நீர்த் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இந் நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூந் தாமரையாள் காப்பாளாமே

விளக்கவுரை :

3144. செந்தாமரைக்குச் செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
அந் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்திச்
சிந்தா மணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தா விளக்குச் சுடர் நல் மணி நாட்டப் பெற்றே

விளக்கவுரை :

3145. செய் வினை என்னும் முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேம் கொள்
மைவினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
மொய்வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொல் பூக் கை தொழுது ஏத்தினனே

விளக்கவுரை :

வாழ்த்து

3146. திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3136 - 3140 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3136. காது அணிந்த தோடு ஒரு பால் மின்னு வீசக் கதிர் மின்னுக் குழை ஒரு பால் திருவில் வீசத்
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோரத் தாமரைக் கண் தாம் இரங்கப் புருவம் ஆட
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்கப்
போது அணிந்த தார் உடையப் பொருது பொங்கிப் புணர்முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே

விளக்கவுரை :

3137. முழுது ஆரம் மின்னும் முலைக் குவட்டினால் மொய்ம் மார்பில் குங்குமச் சேறு இழுக்கி வீழ
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணிக் குவளைக் கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
இழுதார் மென் பள்ளிப் பூந் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே

விளக்கவுரை :

[ads-post]

3138. மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மாமணியாழ் தீம் குழல்கள் இரங்கப் பாண்டில்
பண் கனியப் பாவைமார் பைம் பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
விண் கனியக் கிண் கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரிபுருவ வேல் நெடுங் கண் விருந்து செய்யக்
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காமக் கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே

விளக்கவுரை :

3139. முருகு உடைந்த பூங் கோதை முத்து அணிந்த தோளார்
ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்

விளக்கவுரை :

3140. நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
கலவித் தூது ஆகிய காமக்கை காய்த்திப்
புலவிப் படை பயிலப் பூச் செய்த கோலம்
உலவித் துறக்கம் ஒளி பூத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3131 - 3135 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3131. வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய இத்தலைச்
செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்

விளக்கவுரை :

3132. நந்தட்டன் தோழன்மார் நோற்று உயர்வு
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
காளை நந்தனும் தோழன் மார்களும்
நாளும் நாளினும் நடுங்க நல்தவம்
தாளின் ஈட்டினார் தம்மைத் தாம் பெற்றார்

விளக்கவுரை :

[ads-post]

3133. பாவனை மரீஇப் பட்டினி யொடும்
தீ வினை கழூஉம் தீர்த்தன் வந்தியாப்
பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்

விளக்கவுரை :

3134. கருவில் கட்டிய காலம் வந்தென
உருவ வெண் பிறைக் கோட்டின் ஓங்கிய
அருவிக் குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்

விளக்கவுரை :

3135. அனங்கனைத் தவம் செய அழன்று கண்டவர்
மனங்களைக் கவர்ந்திடும் மணிக் கண் வெம் முலைப்
பொனம் கொடி மயில் அனார்ப் புல்ல மாப் பிடி
இனம் பயில் கடாக் களிற்று இன்பம் எய்தினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3126 - 3130 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3126. தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும்
குவளைக் கண் மலர்க் கோலம் வாழ்த்தியும்
இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனாத்
திவளத் தே மலர்க் கண்ணி சேர்த்தியும்

விளக்கவுரை :

3127. பல் மணிக் கதிர்ப் பரவை மேகலை
மின் அணிந்து உகத் திருத்தி வெம் முலைப்
பொன் அணிந்து பூஞ் சுண்ணம் தைவர
நல் மணிக் குழை இரண்டும் நக்கவே

விளக்கவுரை :

[ads-post]

3128. செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
எய்தி யாவையும் உணர்க என்ப போல்
மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
நைய நின்று எலாம் நாண நக்கவே

விளக்கவுரை :

3129. செல்வக் கிண் கிணி சிலம்பத் தேன் சொரி
முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந் நலம்
புல்லிப் பூண்ட தார் புரள மேகலை
அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே

விளக்கவுரை :

3130. இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினைக் கை செய்து ஐ என
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3121 - 3125 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3121. ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர் களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்

விளக்கவுரை :

3122. காம வல்லிகள் கலந்து புல்லிய
பூ மென் கற்பகப் பொன் மரங்கள் போல்
தாம வார் குழல் தையலார் முலை
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

3123. கலவி ஆகிய காமத்தின் பயன்
புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே

விளக்கவுரை :

3124. பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் எனக்
காவிக் கண் கடை இடுகக் கால் சிலம்பு
ஆவித்து ஆர்த்தன அம்மென் குஞ்சியே

விளக்கவுரை :

3125. நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூங்
குஞ்சி ஏற்றது குறிக் கொள் நீ எனாப்
பஞ்சின் மெல்லடிப் பாவை பூ நுதால்
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3116 - 3120 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3116. முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல்
திளைத்து எழு கொடிகள் செந்தீத் திருமணி உடம்பு நுங்க
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து
வளைப் பொலி கடலின் ஆர்த்து வலம் கொண்டு நடந்த அன்றே

விளக்கவுரை :

3117. கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
பூ அலர் முல்லைக் கண்ணிப் பொன் ஒரு பாகம் ஆகக்
காவலன் தான் ஓர் கூறாக் கண் இமையாது புல்லி
மூ உலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினானே

விளக்கவுரை :

[ads-post]

3118. பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா
அரிவையைப் புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன்
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய்
விரிபுகை விளக்கு விண்ணோர் ஏந்த மற்று உறையும் அன்றே

விளக்கவுரை :

3119. தேவிமார் நோற்று உயர்வு வல்லவன் வடித்த வேல் போல்
மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண் மெல்லவே உறவி ஓம்பி
ஒதுங்கியும் இருந்தும் நின்றும் முல்லை அம் சூட்டு வேயின்
முரிந்து போம் நுசுப்பின் நல்லார் மல்லல் குன்று ஏந்தி
அன்ன மாதவம் முற்றினாரே

விளக்கவுரை :

3120. சூழ் பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
ஏழைப் பெண் பிறப்பு இடியச் சிந்தித்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3111 - 3115 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3111. மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
பிணி உயிர் இறுதியாப் பேசினேன் இனித்
துணிமினம் எனத் தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்

விளக்கவுரை :

3112. விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
தௌ நிலாத் திரு மதி சொரியத் தே மலர்
மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே

விளக்கவுரை :

[ads-post]

3113. பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
வான் இடை முழக்கின் கூறி வால் அற அமிழதம் ஊட்டித்
தேன் உடை மலர்கள் சிந்தித் திசை தொழச் சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ளச் சாமி நாள் சார்ந்தது அன்றே

விளக்கவுரை :

3114. உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு உய்யப் போகல் வேண்டித்
தொழு வித்தி அறத்தை வைத்துத் துளங்கு இமில் ஏறு சேர்ந்த
குழவித் தண் திங்கள் அன்ன இருக்கையன் ஆகிக் கோமான்
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே

விளக்கவுரை :

3115. துந்துபி கறங்க ஆர்த்துத் துகில் கொடி நுடங்க ஏந்தி
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டிக் கிளர் முடி உறுத்தினரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3106 - 3110 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3106. வாள் கை அம் மைந்தர் ஆயும் வனமுலை மகளிர் ஆயும்
வேட்கையை மிகுத்து வித்திப் பிறவி நோய் விளைத்து வீயாத்
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய்ச் செற்றப் புன் தோல்
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழுமின் என்றான்

விளக்கவுரை :

3107. தன் உயிர் தான் பரிந்து ஓம்பு மாறு போல்
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன் உயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே

விளக்கவுரை :

[ads-post]

3108. நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப் புரிக் கொண்டு போய்ப் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெந் எரியுள் வீழுமே

விளக்கவுரை :

3109. மழைக் குரல் உருமு உவா ஓத மாக் கடல்
பிழைத்த ஓர் அருமணி பெற்றது ஒக்குமால்
குழைத் தலைப் பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
தழைத் தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே

விளக்கவுரை :

3110. மல்கு பூங் கற்பக மரத்தின் நீழலான்
நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவாச் சிந்தை செய்யுமோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3101. பரிநிர்வாணம்
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்ப்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகமே

விளக்கவுரை :

3102. மீன் தயங்கு திங்கள் முக நெடுங் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செந் நாவின் சில் மென் கிளிக் கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி அரோ
கான் தயங்கி நில்லா கருவினை கால் பெய்தனவே

விளக்கவுரை :

[ads-post]

3103. மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழுக் குணங்கள் ஏத்தித்
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்

விளக்கவுரை :

3104. ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்திச்
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்பத் துதி ஓதித்
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி எனக் கொற்றவனும் சொன்னான்

விளக்கவுரை :

3105. இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3096 - 3100 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3096. நல்லனவே என நாடி ஓர் புடை
அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலைத் தாய் பயந்தார் அவர்
சொல்லுவ நீ சுகதா உரையாயே

விளக்கவுரை :

3097. மதி அறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி
நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லாத்
துதி அறையாத் தொழுதார் மலர் சிந்தா
விதி அறியும் படி வீரனை மாதோ

விளக்கவுரை :

[ads-post]

3098. தீ வினைக் குழவி செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள்
வீ வினை இன்றிக் காம முலை உண்டு வளர்ந்து வீங்கித்
தா வினை இன்றி வெம் நோய்க் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நாக் கோதையர்க் கூறல் உண்டே

விளக்கவுரை :

3099. நல் வினைக் குழவி நல் நீர்த் தயா எனும் செவிலி நாளும்
புல்லிக் கொண்டு எடுப்பப் பொம் என் மணி முலை கவர்ந்து வீங்கிச்
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே

விளக்கவுரை :

3100. மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
இணை மலர்ச் சேவடி கொடுத்த என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3091 - 3095 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3091. சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகித்
துறவு நெறிக் கடவுள் அடி தூமமொடு தொழுதார்

விளக்கவுரை :

3092. பால் அனைய சிந்தை சுடரப் படர் செய் காதி
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகிக்
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
கோல மலர்ச் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்

விளக்கவுரை :

[ads-post]

3093. முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தித் தொழுதும் யாம்

விளக்கவுரை :

3094. ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
நாத் தழும்ப ஏத்தித் தவ நங்கையவர் நண்ணித்
தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார்

விளக்கவுரை :

3095. செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
மொய்ம் மலர் தூய் முனியாது வணங்குதும்
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3086 - 3090 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3086. குளித்து எழு வயிர முத்தத் தொத்து எரி கொண்டு மின்ன
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு
வளிப் பொர உளரும் திங்கள் கதிர் எனக் கவரி பொங்கத்
தெளித்து வில் உமிழும் செம் பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே

விளக்கவுரை :

3087. மணியரும் பதம்
மணி உமிழ் திருக் கேசம் வானவர் அகில் புகையும்
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓடக் கமழுமால்
துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
அணிதிகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ

விளக்கவுரை :

[ads-post]

3088. முழங்கு திரு மணிமுறுவல் முருக்கு இதழ் கொடிப் பவழத்து
தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம்
வழங்கு பொன் வரை வளரும் பைங்கண் மா உரையாதோ

விளக்கவுரை :

3089. உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
குறைத்து அடுக்கிக் குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால்
வெறுத்து இரு வினை உதிர்த்தாற்கு அது வண்ணம் விளம்பலாம்
கறுப்பு ஒழிந்த கனை எரிவாய்க் கார் இரும்பே கரி அன்றே

விளக்கவுரை :

3090. வானோர் ஏந்து மலர் மாரி வண்ணச் சாந்தம் பூஞ்சுண்ணம்
கான் ஆர் பிண்டிக் கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும்
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்பத் திகைகள் மணம் நாறி
ஆனா கமழும் திருவடிப் போது அமரர் முடி மேல் அணிந்தாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3081 - 3085 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3081. புணரி போல் சிறு புன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார்
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கிலத் தியானம் என்னும்
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழப் பட்டார்

விளக்கவுரை :

3082. காதிப் போர் மன்னர் வீழக் கணை எரி சிதறி வெய்யோன்
ஓதிய வகையின் ஒன்றி உலகு உச்சி முளைத்ததே போல்
வீதி போய் உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி
ஆதி அந்த அகன்ற நான்மைக் கொடியெடுத்து இறைமை கொண்டான்

விளக்கவுரை :

[ads-post]

3083. பசும் பொனின் உலகில் தேவர் பயிர் வளை முரசம் ஆர்ப்ப
அசும்பு சேர் களிறு திண்தேர் அலை மணிப் புரவி வேங்கை
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார்

விளக்கவுரை :

3084. நறு மலர் மாலை சாந்தம் பரூஉத் துளித் துவலை நல்நீர்க்
கறை முகில் சொரியக் காய் பொன் கற்பக மாலை ஏந்திச்
சிறகு உறப் பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி
நிறை கடல் விஞ்சை வேந்தர் நீள் நில மன்னர் சேர்ந்தார்

விளக்கவுரை :

3085. விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல்
மண் எலாம் பைம் பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி
எண் இலாத் தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடிக்
கண் முழுதும் உடம்பில் தோன்றிச் சுதஞ்சணன் களிப்புற்றானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3076 - 3080 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3076. தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர் எண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறுவகைத் துவர்ப்பும் பேசின்
அளிபடு சிந்தை என்னும் ஆழிவாய் வீழ்ந்த அன்றே

விளக்கவுரை :

3077. மயக்கப் போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ
வியப்புறு வேத வில்வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்யக்
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி
விலக்கித் திண் வெறுப்பு வாளால் விரைந்து உயிர் அவனை உண்டான்

விளக்கவுரை :

[ads-post]

3078. கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகைப் போழ்கள் போன்றும்
அரும் பொறிப் பகைவர் தம்மை உறுப்பு அறத் துணித்தும் ஈர்ந்தும்
மருந்து எறி பிணியைக் கொல்லும் மருத்துவன் போன்று மாதோ
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே

விளக்கவுரை :

3079. செழு மலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம்
கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்கக்
கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்று உயிர் உண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாழ் நாள் வீழ்ந்து உக வெம்பினானே

விளக்கவுரை :

3080. குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை உலோபன் என்பார்
விரோதித்து விரலின் சுட்டி வெருவரத் தாக்க வீரன்
நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலைப் பேரோர்
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3071 - 3075 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3071. பார்க் கடல் பருகி மேகம் பாம்பு இனம் பதைப்ப மின்னி
வார்ப் பிணி முரசின் ஆர்த்து மண்பக இடித்து வானம்
நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான்
மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும் முனிக் களிறு அனைய கோமான்

விளக்கவுரை :

3072. திங்கள் நான்கு அவையும் நீங்கத் திசைச் செல்வார் மடிந்து தேம்கொள்
பங்கயப் பகை வந்து என்னப் பனி வரை உருவி வீசும்
மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே

விளக்கவுரை :

[ads-post]

3073. வடி மலர் நெடுங் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு
அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான்
கடி மலர்க் கமலத்து அன்ன கையினை மறித்துக் கொள்ளான்
முடிதவக் கடலை நீந்தி இன்னணம் முற்றினானே

விளக்கவுரை :

3074. ஒளிறு தேர் ஞானம் பாய் மா இன் உயிர் ஓம்பல் ஓடைக்
களிறு நல் சிந்தை காலாள் கருணை ஆம் கவசம் சீலம்
வெளிறு இல் வாள் விளங்கு செம் பொன் வட்டம் மெய்ப் பொருள்களாகப்
பிளிறு செய் கருமத் தெவ்வர் பெரு மதில் முற்றினானே

விளக்கவுரை :

3075. உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவத் திண் தேர்
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள்
திறப்படப் பண்ணிப் பொல்லாச் சிந்தனை வாயில் போந்து
சுறக் கடல் அனைய தானை துளங்கப் போர் செய்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3066 - 3070 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3066. செம்பொன் பின்னிய போல் தினைக் காவலர்
வெம்பு மும் மத வேழம் விலக்குவார்
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து
உம்பர் மீன் எனத் தோன்றும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3067. யானை குங்குமம் ஆடி அருவரைத்
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன்
கான மாப் பிடி கன்றொடு நாடகம்
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

[ads-post]

3068. வரிய நாக மணிச்சுடர் மல்கிய
பொரு இல் பொன் முழைப் போர்ப்புலிப் போதகம்
அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்
உருவம் தோன்ற உறங்கும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3069. பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
விழுக் குலைக் கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன்
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர் பால் எலாம்

விளக்கவுரை :

3070. நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின்
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம்
தெளி கடல் சுடுவது ஒத்துத் தீ உமிழ் திங்கள் நான்கும்
விளிவரும் குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3061 - 3065 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3061. சீவகன் திருவினம் ஆக யாம் என
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று அரோ
காவலன் ஆதியாக் கணங்கள் கை தொழப்
பாவம் இல் சுதன்மரால் பாடப் பட்டதே

விளக்கவுரை :

கேவலோற் பத்தி

3062. முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும்
கொல்லை சூழ் குன்றத்து உச்சிக் குருசில் நோற்று உயர்ந்த வாறும்
வில் உமிழ்ந்து இலங்கு மேனி விழுத் தவ நங்கை மார்கள்
மல்லல் அம் குமரர் வான் மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன்

விளக்கவுரை :

[ads-post]

3063. முழுதும் முந்திரிகைப் பழச் சோலைத் தேன்
ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத்
தொழுதிக் குன்றம் துளும்பச் சென்று எய்தினான்
பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் என்பவே

விளக்கவுரை :

3064. நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇக்
துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான்
மணியின் மேல் மணி கட்டியது ஒத்து அதற்கு
அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான்

விளக்கவுரை :

3065. குன்றின் வீழ் அருவிக் குரல் கோடு அணைச்
சென்று எலாத் திசையும் சிலம்பின் மிசை
நின்றனன் இறை வம்மின நீர் என
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3056 - 3060 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3056. மன்னவ கேள்மதி வானில் வாழ்பவர்
பொன் இயல் கற்பகப் போக பூமியார்
என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே

விளக்கவுரை :

3057. அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்க்
கடி கமழ் தாமரைக் கண்ணினான் இவன்
வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
ஒடிவறு பேர் ஒளி உட்கத் தக்கதே

விளக்கவுரை :

[ads-post]

3058. திருவினோடு அகன்ற மார்பின் சீவக சாமி என்பான்
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்

விளக்கவுரை :

சேணிகன் வினா

3059. மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும்
ஏதம் இன்று இயம்புமின் அடிகளோ எனப்
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான்
காதலின் கணம் தொழக் காவல் மன்னனே

விளக்கவுரை :

3060. பாட்டு அரும் கேவலப் பரவை மாக் கடல்
கூட்டு அரும் கொழுந் திரை முகந்து மா முனி
மோட்டு இரு மணி முகில் முழங்கிப் பெய்தலின்
ஊட்ட அரும் அற அமிர்து உலகம் உண்டதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3051 - 3055 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3051. கனை கடல் கவரச் செல்லும் கண மழைத் தொகுதி போலும்
நனை மலர்ப் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றிப்
புனை முடி மன்னர் ஈண்டிப் பொன் எயில் புறத்து விட்டார்
வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே

விளக்கவுரை :

3052. வண்டு சூழ் பூப்பலி சுமந்து தான் வலம்
கொண்டு சூழ்ந்து எழுமுறை இறைஞ்சிக் கோன் அடி
எண்திசை அவர்களும் மருள ஏத்தினான்
வெண் திரைப் புணரி சூழ் வேலி வேந்தனே

விளக்கவுரை :

[ads-post]

3053. பகல் வளர் பவழச் செந்தீப் பருதி முன் பட்டதே போல்
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
முகில் கிழி மதியம் போலும் முனிக்குழாம் நோக்கினானே

விளக்கவுரை :

3054. கண் வெறி போக ஆங்கு ஓர் கடுந் தவன் உருவம் நோக்கி
ஒண் நெறி ஒருவிக் கோமான் ஒளி திரண்டு இருந்ததாம் கொல்
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே

விளக்கவுரை :

3055. விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
இளங் கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம்
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
துளங்கினன் எனத் தொழுது இறைஞ்சினான் அரோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3046 - 3050 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3046. தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
தேம் பாய சாந்தம் மெழுகிக் கலன் தேறல் மாலை
தாம் பால தாங்கிப் புகழ் தாமரைக் குன்றம் அன்ன
ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே

விளக்கவுரை :

3047. எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணிச் செப்பு வெள்ளம்
பொறிவரி வண்டு பாடும் பூஞ் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
அறிவரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம்
செறி இரும் பவழச் செப்புத் தெண்கடல் திரையின் நேரே

விளக்கவுரை :

[ads-post]

3048. வந்து தேன் மயங்கி மூசு மலயச் செஞ் சாந்தம் ஆர்ந்த
சந்தனச் செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றாச்
சுந்தரம் பெய்த யானைத் தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
அந்தரத்து அலர்ந்த பல் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ

விளக்கவுரை :

3049. மை பொதி குவளை வாள் கண் மல்லிகைக் கோதை நல்லார்
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
கொய் சுவல் புரவி மான்தேர் குழுமணி ஓடை யானை
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரைப் பலி சுமந்த அன்றே

விளக்கவுரை :

3050. கொடிக் குழாம் குஞ்சி பிச்சக் குழாம் நிறை கோல மாலை
முடிக் குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
குடைக் குழாம் இவற்றின் பாங்கர்க் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
படைக் குழாம் பாரில் செல்லும் பால் கடல் பழித்த அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3041 - 3045 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

சேணிகன் வரவு

3041. மட்டு அலர் வன மலர்ப் பிண்டி வாமனார்
விட்டு அலர் தாமரைப் பாதம் வீங்கு இருள்
அட்டு அலர் பருதியின் அளிக்கச் செல்லும் நாள்
பட்டது ஓர் பொருளின் இனிப் பழிச்சு கின்றதே

விளக்கவுரை :

3042. கயல் இனம் உகளிப் பாய முல்லை அம் பொதும்பில் காமர்
புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பிக் குன்றத்து
அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
வயல் வளர் கரும்பில் பாயும் மகத நாடு என்பது உண்டே

விளக்கவுரை :

[ads-post]

3043. இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்ச்
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதிப்
பெருங் கடி நகரம் பேசின் இராசமா கிருகம் என்பர்
அருங் கடி அமரர் கோமான் அணிநகர் ஆயது ஒன்றே

விளக்கவுரை :

3044. எரி மிடைந்த அனைய மாலை இன மணி திருவில் வீசும்
திருமுடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
அருமுடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே

விளக்கவுரை :

3045. பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
மின் ஆர் மணிப் பூணவன் மேவி விண்காறும் நாறும்
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
மன் ஆர வாய்க் கொண்டு உமிழ்ந்தான் மணிமாலை வேலோன்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3036 - 3040 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3036. ஏவா இருந்த அடிகள் இவர் வாய்ச் சொல்
கோவா மணி கொழித்துக் கொண்டாலே போலுமால்
சாவா கிடந்தார் செவிச் சார்த்தின் அப்பொழுதே
மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே

விளக்கவுரை :

3037. தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்துச்
சூளா மணியாய்ச் சுடர இருந்தானை
வாள் ஆர்முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும்
தாள் ஆர ஏத்திப் போய்த் தன் கோயில் புக்கானே

விளக்கவுரை :

[ads-post]

3038. புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர்
தொக்காலே போலும் தன் தேவிக் குழாம் சூழ
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம்பால்
தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே

விளக்கவுரை :

3039. பற்று ஆர்வம் செற்றம் முதலாகப் பாம்பு உரி போல்
முற்றத் துறந்து முனிகளாய் எல்லாரும்
உற்று உயிர்க்குத் தீம்பால் சுரந்து ஓம்பி உள்ளத்து
மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே

விளக்கவுரை :

3040. கோமான் அடி சாரக் குஞ்சரங்கள் செல்வன போல்
பூ மாண் திருக் கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தித்
தாம் ஆர்ந்த சீலக் கடல் ஆடிச் சங்கு இனத்துள்
தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3031 - 3035 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3031. அம் சுடர்த் தாமரைக் கையினான் மணிக்
குஞ்சி வெண் படலிகைக் குமரன் நீப்பது
செஞ் சுடர்க் கருங் கதிர்க் கற்றை தேறு நீர்
மஞ்சுடை மதியினுள் சொரிவது ஒத்ததே

விளக்கவுரை :

3032. வேலைவாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
காலை வாய்க் கற்பக மரத்தின் காவலன்
மாலை வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின்
சோலை வாய்ச் சுரும்பு இனம் தொழுது சொன்னவே

விளக்கவுரை :

[ads-post]

3033. தம் கிடை இலாத் திருக் கேசம் தன்னையும்
கொங்கு உடைக் கோதையும் கொய்து நீக்கினாய்
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம்
எம் கிடையவர் இனி எங்குச் செல்பவே

விளக்கவுரை :

3034. என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு
சென்றன விடுக்கிய செல்வன் பொன் மயிர்
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே

விளக்கவுரை :

3035. மேல் படு கற்பக மாலை வேய்ந்து பொன்
ஏற்பு உடைப் படலிகை எடுத்துக் கொண்டு போய்
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிடப்
பால் கடல் பனிமதி போல வீழ்ந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3026 - 3030 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3026. ஒத்து ஒளி பெருகிய உருவப் பொன் நகர்
வித்தகன் வலம் செய்து விழுப் பொன் பூமி போய்
மத்தக மயிர் என வளர்த்த கைவினைச்
சித்திரக் காவகம் செல்வன் எய்தினான்

விளக்கவுரை :

3027. ஏம நீர் உலகம் ஓர் இம்மிப் பால் என
நாம வேல் நரபதி நீக்கி நன்கலம்
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான் அரோ
காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே

விளக்கவுரை :

[ads-post]

3028. மணி உறை கழிப்பது போல மங்கலப்
பணி வரு பைந்துகில் நீக்கிப் பால் கடல்
அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் எனத்
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான்

விளக்கவுரை :

3029. மலிந்த நல் மாலைகள் வண்ணப் பூந்துகில்
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலைப்
பொலிந்தது ஓர் கற்பகம் போலத் தோன்றினான்

விளக்கவுரை :

3030. திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே
இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல்
சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன்
எரிந்து எழும் இளஞ் சுடர் இலங்கும் மார்பினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3021 - 3025 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3021. செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தித் திருவார் வைரம் நிரைத்து அதனுள்
கொழுந்து மலரும் கொளக் குயிற்றிக் குலாய சிங்கா தனத்தின் மேல்
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே
அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் அருவாய்ப் போதல் அழகிதோ

விளக்கவுரை :

3022. குண்டலமும் பொன் தோடும் பைந்தாரும் குளிர் முத்தும்
வண்டு அலம்பு மாலையும் மணித் தொத்தும் நிலம் திவள
விண்டு அலர் பூந் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த
வண்டு அலர் பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்

விளக்கவுரை :

[ads-post]

3023. நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அற ஆழி
அலகை இலாக் குணக் கடலை அகல் ஞான வரம்பானை
விலை இலா மணி முடியான் விண் வியப்ப இறைஞ்சினான்

விளக்கவுரை :

3024. தூய்த் திரள் மணித் தாமம் சொரிந்து பொன் நிலம் நக்கப்
பூத்திரள் மணி மாலைப் போர்ச் சிங்கம் போதகம் போல்
ஏத்த அரிய குணக் கடலை இகல் இன்ப வரம்பானைத்
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சித் துறப்பேன் என்று எழுந்து இருந்தான்

விளக்கவுரை :

3025. முடி அணி அமரரும் முலை நல்லார்களும்
புடை பணிந்து இருந்த அப் புலவன் பொன் நகர்
கடி மலர்க் கற்பகம் காம வல்லியோடு
இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3016 - 3020 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3016. மன்னவன் துறவு எனத் துறத்தல் மாண்பு எனப்
பொன் வரை வாய் திறந்த ஆங்குப் புங்கவன்
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே

விளக்கவுரை :

சீவகன் துறவு

3017. காய் களிற்றின் இடை மருப்பின் கவளம் போன்று ஏமாராக் கதியுள் தோன்றி
ஆய் களிய வெவ் வினையின் அல்லாப்பு உற்று அஞ்சினேன் அறிந்தார் கோவே
வேய் களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின்
வாய் ஒளியே பெற நடந்த மலர் அடியை வலம் கொண்டார் வருந்தார் போலும்

விளக்கவுரை :

[ads-post]

3018. சேடு ஆர் பொன் திருமணி வைரத் தொத்து அணிந்து உலகு ஓம்பும்
வாடா மாலை வார் தளிர்ப் பிண்டி வாம நின் குணம் நாளும்
பாடாதாரைப் பாடாது உலகம் பண்ணவர் நின் அடிப் பூச்
சூடாதார் தாள் சூடார் மாலைச் சுடர் மணி நெடு முடியே

விளக்கவுரை :

3019. வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார்
வெய்ய வெம் நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்பக் கடல் அழுந்தி
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே

விளக்கவுரை :

3020. தொழுதிப் பல் மீன் குழாம் சூழத் துளும்பாது இருந்த திங்கள் போல்
முழுதும் வையம் உடன் ஏத்த முதுவாய் வலவையாய் இருந்து
அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள்
பழுதுஇல் நறு நெய்க் கடல் சுடர்போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3011 - 3015 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3011. மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
அணி மயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார்
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
பணி மணிக் கார் இருள் பருகு கின்றதே

விளக்கவுரை :

3012. முழாத் திரள் மொய்ம் மலர்த் தாமம் தாழ்ந்து மேல்
வழாத் திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
குழாத்தொடும் இறை கொளக் குனிந்து கூய்க் குயில்
விழாக் கொள விரிந்தது வீரன் பிண்டியே

விளக்கவுரை :

[ads-post]

3013. பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
உண்டு இவண் அற அமிர்து உண்மினோ எனக்
கொண்டன கோடணை கொற்ற முற்றமே

விளக்கவுரை :

3014. வானவர் மலர் மழை சொரிய மன்னிய
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான் அரோ

விளக்கவுரை :

3015. குரு குலம் சீவக குமரன் கோத்திரம்
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3006 - 3010 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3006. மல்லன் மாக் கடல் அன்ன கிடங்கு அணிந்து
ஒல் என் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
செல்வ நீர்த் திருக் கோயில் இம் மண்மிசை
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே

விளக்கவுரை :

3007. விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்த்
துளங்கு ஒளி மணி வணன் தொழுது துன்னினான்
வளம் கெழு மணிவரை நெற்றிப் பால் கடல்
இளங் கதிர்ப் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்

விளக்கவுரை :

[ads-post]

3008. வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
வனை கதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார்
கனை கதிர்த் திருமுகம் அருக்கன் ஆக வான்
புனை மலர்த் தாமரை பூத்தது ஒத்தவே

விளக்கவுரை :

3009. இரிந்தன இருவினை இலிர்த்த மெய்ம் மயிர்
சொரிந்தன கண் பனி துதித்துக் காதலால்
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்த்
திரிந்தனன் வல முறை திலக மன்னனே

விளக்கவுரை :

3010. முத்து ஒளிர் தாமமும் உருவ மாமணித்
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
தத்து நீர்த் தண் கடல் பவழத் தாமமும்
வைத்த பூந் தாமமும் மலிந்து தாழ்ந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3001 - 3005 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3001. திலக முக் குடைச் செல்வன் திருநகர்
பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
குலவு பல்லியம் கூடிக் குழுமி நின்று
உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே

விளக்கவுரை :

3002. கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
தேன் நிரைத்தன செம் பொன் நெடு மதில்
மேல் நிரைத்தன வெண் கொடி அக் கொடி
வான் உரிப்பன போன்று மணந்தவே

விளக்கவுரை :

[ads-post]

3003. கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
சூலம் நெற்றிய கோபுரத் தோற்றமும்
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று அரோ
காலம் உற்று உடன் கண் உற்ற போன்றவே

விளக்கவுரை :

3004. வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே

விளக்கவுரை :

3005. செய்ய தாமரைப் பூவினுள் தேம் கமழ்
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
ஐயம் செய்து அடு பால் நிறப் புள் இனம்
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2996 - 3000 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2996. என்பு அரிந்து எரிதலைக் கொள்ள ஈண்டிய
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
பொன் சொரி தாமரைப் போது போன்றவே

விளக்கவுரை :

2997. பூந் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மாமணி
காந்திய கற்பகக் கானம் ஆயினான்
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே

விளக்கவுரை :

[ads-post]

2998. தேய் பிறை உருவக் கேணித் தேறு நீர் மலர்ந்த தேனார்
ஆய் நிறக் குவளை அஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாள் கண்
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையைத் தொழுது வாழ்த்திச்
சேய் நிறச் சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே

விளக்கவுரை :

சமவ சரண வருணனை

2999. நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
விருந்து பட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
சுரந்தன சுடர் மணிப் பாண்டில் என்பவே

விளக்கவுரை :

3000. மங்குலாய் அகில் புகை மணந்து கற்பகப்
பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
தங்கி இத் தரணியும் விசும்பும் தாமரோ
செங் கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2991 - 2995 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

தேவிமார் துறவு

2991. தெண் திரை நீத்தம் நீந்தித் தீம் கதிர் சுமந்து திங்கள்
விண் படர்ந்த அனைய மாலை வெண் குடை வேந்தர் வேந்தன்
கண் திரள் முத்த மாலைக் கதிர் முலை நங்கைமாரை
வெண் திரை வியக்கும் கேள்வி விசயைகண் அபயம் வைத்தான்

விளக்கவுரை :

2992. கடி மலர் நிறைந்து பூத்த கற்பகக் கொம்பும் காமர்
வடிமலர் மலர்ந்த காம வல்லியும் தம்மைத் தாமே
உடை மலர் கொய்து போக உகுத்திடு கின்றது ஒத்தார்
படை மலர் நெடுங் கண் நல்லார் பாசிழை நீக்கு கின்றார்

விளக்கவுரை :

[ads-post]

2993. தழுமலர்த் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
செழுமணி நிலத்துச் செம் பொன் திரு முத்த விதான நீழல்
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ

விளக்கவுரை :

2994. நறும் புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ணம்
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைங் கூந்தலாய் பொன்
நிறம் தரு கொம்பு நீலக் கதிர்க் கற்றை உமிழ்வவே போல்
செறிந்து இருந்து உகுத்துச் செம்பொன் குணக்கொடி ஆயினாரே

விளக்கவுரை :

பெரிய யாத்திரை

2995. இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
கலம் சொரி காவலன் கடகக் கை இணை
புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2986 - 2990 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2986. ஆற்றிய மக்கள் என்னும் அருங் தவம் இலார்கள் ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
வேற்றுவர் என்று நில்லா விழுப் பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்மின் நீரும் என்றான்

விளக்கவுரை :

2987. காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற
மாதரார் நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார்
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடுங் கணாரே

விளக்கவுரை :

[ads-post]

2988. தூமம் சால் கோதை யீரே தொல் வினை நீத்தம் நீந்தி
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்மின் என்றான்
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சனக் குன்றம் அன்னான்

விளக்கவுரை :

2989. நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
ஆடகக் கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்

விளக்கவுரை :

2990. சாந்தம் கிழிய முயங்கித் தட மலரால்
கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
காய்ந்து அருளல் கண்டாய் எனத் தொழுதார் காரிகையார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2981 - 2985 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2981. நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானைத்
தேர் முழங்கு தானைத் திருமாலின் முன் துறப்பான்
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே

விளக்கவுரை :

துறவு வலி உறுத்தல்

2982. கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த கூர் இலை
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்

விளக்கவுரை :

[ads-post]

2983. நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
பற்றொடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்

விளக்கவுரை :

2984. உப்பு இலிப் புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏகக்
கைப் பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
மைப் பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
இப் பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்மின் என்றான்

விளக்கவுரை :

2985. கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர்த் தறுகண் ஆளி
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
பல் வினை வெள்ளம் நீந்திப் பகா இன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2976 - 2980 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2976. கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
முலை உலாய் நிமிர்ந்த மொய்தார் முழவு முத்து உரிஞ்சி மின்னச்
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக் கூறிற்று அன்றே

விளக்கவுரை :

2977. கூந்தல் அகில் புகையும் வேள்விக் கொழும் புகையும்
எந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே

விளக்கவுரை :

[ads-post]

2978. புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
கல்லா இளையர் கலங்காச் சிரிப்பு ஒலியும்
கொல் யானைச் சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே

விளக்கவுரை :

2979. பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே

விளக்கவுரை :

2980. தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கித்
தூம்பு ஆர் நெடுங் கைம்மாத் தீம் கரும்பு துற்றாவாய்
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர் பிறர் ஆய்க்
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2971 - 2975 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

நகர விலாவணை

2971. நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
பார் நிறை அடிகில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே

விளக்கவுரை :

2972. கோள் புலிச் சுழல் கண் அன்ன கொழுஞ் சுவைக் கருனை முல்லை
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவைத் தயிரொடு ஏந்தி
வேட்டவரப் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2973. மைந்தர் தம் வண்கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
பைந் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும் பொன் மாலை
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்ச்
சந்தனச் சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே

விளக்கவுரை :

2974. தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெருங் குவளைக் கண்ணார்
மூழி வாய் முல்லை மாலை முலைமுகம் முரிந்து நக்க
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
ஊழி வாய்க் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே

விளக்கவுரை :

2975. அருங்கலம் நிறைந்த அம்பூம் பவழக்கால் திகழும் பைம்பொன்
பெருங் கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி மெல்ல
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல் என்
கருங் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2966 - 2970 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2966. கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறிச்
செழுநீர் மணிக் கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
அழுநீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே

விளக்கவுரை :

2967. பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து பல் மணியாழ் மழலை நீங்கிப்
புண்ணார் புனை குழலும் ஏங்கா புனை பாண்டில் இரங்கா வான்பூங்
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா
மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கிக் கோன் கோயில் மடிந்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2968. அணியார் மணி அரக்கு வட்டு அழுத்தி வைத்த அனைய செங்கண் மாத்தாள்
பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
பணியார் கமழ் கடாத்து அண்ணல் அரசுவாப் பண்ணார் பாய்மா
இணையாதும் இல்லாத கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே

விளக்கவுரை :

2969. கழித்த கடிப் பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும்
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி
விழித்து வியன் கோயில் பல் மீன் பரந்து இமைக்கும் பனியார் வானம்
பழித்துப் பசும் பொன் உலகு குடி போயிற்று ஒத்தது அன்றே

விளக்கவுரை :

2970. அழலார் சுரை எயிற்று வெம் சின ஐந் தலை சுமந்த வெகுளி நாகம்
நிழலார் திருமணியும் தேவர் திரு முடி மேல் நிலவி வீசும்
சுழல் ஆர் பசும் பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
கழலான் நகரம் அமுது கடை கடல் போல் கலங்கிற்று அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2961 - 2965 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2961. பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடுங் கண்
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப் பட்டீர்க்கு
இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ

விளக்கவுரை :

2962. செங்கச்சு இள முலையார் திண் கறைஊர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
பங்கயமே போல்வாளைப் பார்ப்பான் ஆய்ப் பண் அணைத்துத்
தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ

விளக்கவுரை :

[ads-post]

2963. புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ

விளக்கவுரை :

கோயில் விலாவணை

2964. கல்லோ மரனும் இரங்கக் கலுழ்ந்து உருகி
எல்லாத் திசை தோறும் ஈண்டி இன மயில் போல்
சொல்லாத் துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
அல்லாந்து அகன் கோயில் ஆழ்கடல் போல் ஆயிற்றே

விளக்கவுரை :

2965. பூப் பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
நீப்பிர் எனப் புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
ஏப் பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரைக்
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2956 - 2960 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2956. விண்ணோர் மட மகள் கொல் விஞ்சை மகளே கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவ தத்தை என்று
எண் ஆய வான் நெடுங் கண் மெய் கொள்ள ஏமுற்றுப்
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே

விளக்கவுரை :

2957. கொல் வேல் நெடுங் கண் குணமாலை குஞ்சரத்தால்
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்துப்
புல்லிப் புணர் முலையின் பூங் குவட்டின் மேல் உறைந்தாய்
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ

விளக்கவுரை :

[ads-post]

2958. தூம்பு உடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்
பாம்பு உடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்பு உடைய இன் அமுதாச் சேர்ந்தாய்க்கு இனி அதுவே
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே

விளக்கவுரை :

2959. தாழ்ந்து உலவி மெல் முலை மேல் தண் ஆரம் வில் விலங்கப்
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏப் பெற்றுப் போகலாய்
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ

விளக்கவுரை :

2960. கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ அமுதோ பிணையோ எனப் பிதற்றித்
துண் என் சிலைத் தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
புண் மேல் கிழிபோல் துறத்தல் பொருள் ஆமோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2951 - 2955 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2951. மாக் கவின் வளரத் தீண்டி மணி நகை நக்கு நாளும்
பூக் கவின் ஆர்ந்த பைந்தார் புனை மதுத் தேனொடு ஏந்தித்
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்

விளக்கவுரை :

2952. அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவளச் செந் நா
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2953. பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலைக் கண்கள் தம்மைப்
பேணி நீர் எழுதி ஓம்பிப் பேர் இன்பம் கொண்டு தந்தீர்
காண்மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்

விளக்கவுரை :

2954. சென்னி மேல் மிதித்த அம் செஞ் சீறடித் திருவில் வீச
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
இன்னகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்

விளக்கவுரை :

2955. வீங்கு பால் கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
தீம் கதிர்த் திங்கள் செந் தீச் சொரிந்ததால் திசைகள் எல்லாம்
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர் காளோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2946 - 2950 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2946. குலிக அம் சேற்றுள் நாறிக் குங்கும நீருள் ஓங்கிப்
பொலிக என வண்டு பாடப் பூத்த தாமரைகள் போலும்
ஒலி கழல் அடிகள் நும் கீழ்ப் பிழைத்தது என் உரைமின் என்னப்
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்

விளக்கவுரை :

2947. அருந் தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயா உயிர்த்த ஆண்மைப்
பெருந் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதா மே
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
விருந்தினர் போல நின்றீர் வெற்றுடல் காண்மின் என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2948. கோதையும் துகிலும் ஏந்திக் குங்குமம் எழுதிக் கொய் பூந்
தாது கொண்டு அளகத்து அப்பித் தட முலை வருடிச் சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகிக் கோமான் எண்ணமே எண்ணி னீரே

விளக்கவுரை :

2949. பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சிக்
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவிக் கொள்ளீர்
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்

விளக்கவுரை :

2950. முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய்க் கிடந்து மின்ன
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
நட்பு விட்டு ஒழியும் ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2941 - 2945 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2941. குஞ்சரம் அயா உயிர்த்து அனைய குய் கமழ்
அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம்
இஞ்சி மா நகர் இடும் பிச்சை ஏற்றலால்
அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே

விளக்கவுரை :

அந்தப்புர விலாவணை

2942. ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணிப்
பரிய கண் படா முலைப் பைம் பொன் கொம்பு அனீர்

விளக்கவுரை :

[ads-post]

2943. காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
ஏதிலம் என்ற சொல் செவிச் சென்று எய்தலும்
மாதரார் மழை மலர்த் தடம் கண் மல்குநீர்
போது உலாம் மார்பின் வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே

விளக்கவுரை :

2944. செருக்கி நிணம் தின்று சிவந்து மன்னர் உயிர் செற்ற
நெருப்புத் தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணிப்பூண்
பரப்பினிடைப் பாய்ந்து குளம் ஆய்ப் பால் ஆர் படா முலையை
வருத்தி மணி நெடுங் கோட்டு அருவி போல வீழ்ந்தனவே

விளக்கவுரை :

2945. அழல் ஏந்து வெம் கடுஞ் சொல் உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
நிழல் ஏந்து பூம் கொடிகள் நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
கழல் ஏந்து சேவடிக் கீழ்க் கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்பக்
குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் கோதை மடவாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2936 - 2940 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2936. மந்திர மருந்து இவை இல்லையாய் விடின்
ஐந் தலை அரவினை யாவர் தீண்டுவார்
சுந்தரச் சுரும்பு சூழ் மாலை இல்லையேல்
மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார்

விளக்கவுரை :

2937. பொன் துலாம் பொன் அனீர் தருதும் பாகுநீர்
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
வென்று உலாம் வேல்கணீர் விழுத்தக்கீர்களே

விளக்கவுரை :

[ads-post]

2938. மெய்ப் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும்
கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா
ஐப் படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல்
பொய்ப் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால்

விளக்கவுரை :

2939. அனிச்சத்து அம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி
இனிச் செத்தாம் பிறந்த போழ்தே என்று நாம் இதனை எண்ணித்
தனிச் சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கிப்
பனித்தும் என்று உற்ற போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்

விளக்கவுரை :

2940. நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கிப்
பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
வேல் நிற மழைக் கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி
தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2931 - 2935 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2931. புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள
கள் அவிழ் கோதையீர் காண்மின் நல் வினை
ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது என்னன்மின்
தௌளியீர் அறத் திறம் தெரிந்து கொள்மினே

விளக்கவுரை :

2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும்
தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால்
வாய் புகப் பெய்யினும் வழுக்கி நல்லறம்
காய்வது கலதிமைப் பாலது ஆகுமே

விளக்கவுரை :

[ads-post]

2933. புள்ளி நீர் வீழ்ந்தது பெருகிப் புன் புலால்
உள் வளர்ந்து ஒரு வழித் தோன்றிப் பேர் அறம்
உள்குமேல் முழுப் புலால் குரம்பை உய்ந்து போய்
வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே

விளக்கவுரை :

2934. பால்துளி பவள நீர் பெருகி ஊன் திரண்டு
ஊற்று நீர்க் குறும் புழை உய்ந்து போந்த பின்
சேற்று நீர்க் குழியுளே அழுந்திச் செல் கதிக்கு
ஆற்று உணாப் பெறாது அழுது அலறி வீழுமே

விளக்கவுரை :

2935. திருந்திய நல் அறச் செம் பொன் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்
கரும்பு எனத் திரண்ட தோள் கால வேல்கணீர்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2926 - 2930 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2926. நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
பெரும் பலிச் சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும்
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை வயின் தூண் தொறு ஊட்டும்
அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர்

விளக்கவுரை :

2927. அற்றவர் வருத்தம் நீக்கி ஆர் உயிர் கொண்டு நிற்கும்
துற்ற அவிழ் ஈதல் செம் பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும்
முற்று உயிர் ஓம்பித் தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2928. மாலைப் பந்தும் மாலையும் ஏந்தி மது வார் பூஞ்
சோலை மஞ்ஞைச் சூழ் வளையார் தோள் விளையாடி
ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணாச்
சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே

விளக்கவுரை :

2929. மாசித் திங்கள் மாசின சின்னத் துணி முள்ளின்
ஊசித் துன்னம் மூசிய ஆடை உடை ஆகப்
பேசிப் பாவாய் பிச்சை எனக் கை அகல் ஏந்திக்
கூசிக் கூசி நிற்பர் கொடுத்து உண்டு அறியாதார்

விளக்கவுரை :

2930. காட்டு அகத்து ஒரு மகன் துரக்கும் மாக்கலை
ஓட்டு உடைத் தாம் எனின் உய்யும் நங்களை
ஆட்டியிட்டு ஆர் உயிர் அளைந்து கூற்றுவன்
ஈட்டிய விளை மதுப் போல உண்ணுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2921 - 2925 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2921. இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்னப்
பொன் அரிய கிண்கிணியும் பூஞ் சிலம்பும் ஏங்க
மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார்

விளக்கவுரை :

2922. கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண்
இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
உலவும் மனம் வைத்து உறுதி கேண்மின் இது என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2923. வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி
வேய் அழத் திரண்ட மென் தோள் வெம் முலைப் பரவை அல்குல்
தோய் பிழி அலங்கலார் தம் தொல் நலம் தொலைந்து வாடிக்
காய் அழல் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை ஒத்தார்

விளக்கவுரை :

2924. கருங் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும் காலைப்
பெருங் குளத்து என்றும் தோன்றா பிறைநுதல் பிணை அனீரே
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந் தவம் தெரியின் மண் மேல்
மருங்கு உடையவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே

விளக்கவுரை :

2925. விட்டு நீர் வினவிக் கேள்மின் விழுத்தகை அவர்கள் அல்லால்
பட்டது பகுத்து உண்பார் இப் பார் மிசை இல்லை கண்டீர்
அட்டு நீர் அருவிக் குன்றத்து அல்லது வைரம் தோன்றா
குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2916 - 2920 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2916. நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில்வலான் தோழர் மக்கள்
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆகப்
பால் கடல் கேள்வி யாரைப் பழிப்பு அற நாட்டி னானே

விளக்கவுரை :

2917. காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
தூ அலர் ஒலியலார் தம் வலக் கண்கள் துடித்த அன்றே

விளக்கவுரை :

[ads-post]

துறவு உணர்த்தல்

2918. செம் பொனால் செறிய வேய்ந்து திருமணி முகடு கொண்ட
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர்த் தம்மின் என்றான்
பைம் பொனால் வளர்க்கப் பட்ட பனை திரண்டு அனைய தோளான்

விளக்கவுரை :

2919. தின் பளித மாலைத் திரள் தாமம் திகழ் தீம் பூ
நன்கு ஒளி செய் தாமம் நறும் பூ நவின்ற தாமம்
பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம்
மின்தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம்

விளக்கவுரை :

2920. ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து இடை எங்கும்
மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல்
தோன்றும் மணிக் கால் அமளித் தூ அணையின் மேலார்
மூன்று உலகம் விற்கும் முலை முற்று இழையினாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2911 - 2915 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2911. குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
அடி வழிப் படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்திக்
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்

விளக்கவுரை :

2912. சேல் நடந்தாங்கும் ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள் கண்
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
கால் நடந்த அனைய மான் தேர்க் காளையைக் காவல் மன்னன்
தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே

விளக்கவுரை :

[ads-post]

2913. கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங் கனிக் கோலச் செவ்வாய்
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
சீர் உடைச் செம் பொன் கண்ணிச் சிறுவனைச் செம் பொன் மாரி
பேர் அறைந்து உலகம் உண்ணப் பெரு நம்பி ஆக வென்றான்

விளக்கவுரை :

2914. தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனைத் தந்து போற்றி
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தி னானே

விளக்கவுரை :

2915. நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் நித்திலம் விளைந்து முற்றி
நலம் செய்த வைரக் கோட்ட நாறும் மும் மதத்த நாகம்
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2906 - 2910 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2906. பால் வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம்
கோல் வளையாமல் காத்து உன் குடை நிழல் துஞ்ச நோக்கி
நூல் விளைந்து அனைய நுண்சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்

விளக்கவுரை :

2907. வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
வாய்ப்படல் இன்றிப் பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

2908. நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள்கை
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்

விளக்கவுரை :

2909. ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணித் தேரை வல்லான்
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே

விளக்கவுரை :

2910. காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறுபோல
ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2901 - 2905 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2901. ஊன் உடைக் கோட்டு நாகு ஆன் சுரிமுக ஏற்றை ஊர்ந்து
தேன் உடைக் குவளைச் செங் கேழ் நாகு இளந் தேரை புல்லிக்
கான் உடைக் கழனிச் செந்நெல் கதிர் அணைத் துஞ்சும் நாடு
வேல் மிடைத் தானைத் தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்

விளக்கவுரை :

2902. கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடும்
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்

விளக்கவுரை :

[ads-post]

2903. குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
சென்று மொய்த்து இமிரும் யானைச் சீவகற்கு இளைய நம்பி
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணிக் குவடு அனைய தோளான்
ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே

விளக்கவுரை :

2904. பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இவ் உடம்பு என்று எண்ணி
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தடக்கை வையாது
ஒலி உடை உருமுப் போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
கலி கடிந்து உலகம் காக்கும் காளையைக் கொணர்மின் என்றான்

விளக்கவுரை :

2905. கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
விழுமணிப் பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 2896 - 2900 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2896. அம் சுரை பொழிந்த பால் அன்ன மெல் மயிர்ப்
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க வைகினார்
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே

விளக்கவுரை :

2897. வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேகப்
புள் வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
கள் வயிற்று அலர்ந்த கோதைக் கலாப வில் உமிழும் அல்குல்
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2898. கிளிச் சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்கக்
குளித்து நீர் இரண்டு கோலக் கொழுங் கயல் பிறழ்பவே போல்
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே

விளக்கவுரை :

2899. புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை உரிவை போர்த்த
துனை குரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான்
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்

விளக்கவுரை :

2900. கொடி அணி அலங்கல் மார்பில் குங்குமக் குன்றம் அன்னான்
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்னப்
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே

விளக்கவுரை :
Powered by Blogger.