சீவக சிந்தாமணி 3141 - 3145 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3141. புருவச் சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
உருவத் துடி இடையார் ஊடல் உப்பு ஆகத்
திருவின் திகழ் காமத் தேன் பருகித் தேவர்
பொருவற்கு அரிய புலக் கடலுள் ஆழ்ந்தார்

விளக்கவுரை :

3142. முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய்ச் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடுபால் விம்மிப்
பகடு பட அடுக்கிப் பண்ணவனார் தம் ஒளி மேல் நின்றால் போலும்
தகடு படு செம் பொன் முக் குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே

விளக்கவுரை :

[ads-post]

3143. ஓம் படை
முந் நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற
மெய்ந் நீர்த் திருமுத்து இருபத்து ஏழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
செந் நீர்த் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இந் நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூந் தாமரையாள் காப்பாளாமே

விளக்கவுரை :

3144. செந்தாமரைக்குச் செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
அந் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்திச்
சிந்தா மணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தா விளக்குச் சுடர் நல் மணி நாட்டப் பெற்றே

விளக்கவுரை :

3145. செய் வினை என்னும் முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேம் கொள்
மைவினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
மொய்வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொல் பூக் கை தொழுது ஏத்தினனே

விளக்கவுரை :

வாழ்த்து

3146. திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3136 - 3140 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3136. காது அணிந்த தோடு ஒரு பால் மின்னு வீசக் கதிர் மின்னுக் குழை ஒரு பால் திருவில் வீசத்
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோரத் தாமரைக் கண் தாம் இரங்கப் புருவம் ஆட
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்கப்
போது அணிந்த தார் உடையப் பொருது பொங்கிப் புணர்முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே

விளக்கவுரை :

3137. முழுது ஆரம் மின்னும் முலைக் குவட்டினால் மொய்ம் மார்பில் குங்குமச் சேறு இழுக்கி வீழ
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணிக் குவளைக் கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
இழுதார் மென் பள்ளிப் பூந் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே

விளக்கவுரை :

[ads-post]

3138. மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மாமணியாழ் தீம் குழல்கள் இரங்கப் பாண்டில்
பண் கனியப் பாவைமார் பைம் பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
விண் கனியக் கிண் கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரிபுருவ வேல் நெடுங் கண் விருந்து செய்யக்
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காமக் கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே

விளக்கவுரை :

3139. முருகு உடைந்த பூங் கோதை முத்து அணிந்த தோளார்
ஒரு குடங்கைக் கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்

விளக்கவுரை :

3140. நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
கலவித் தூது ஆகிய காமக்கை காய்த்திப்
புலவிப் படை பயிலப் பூச் செய்த கோலம்
உலவித் துறக்கம் ஒளி பூத்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3131 - 3135 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3131. வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
தம்மைத் தாம் மகிழ்ந்து உறைய இத்தலைச்
செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்

விளக்கவுரை :

3132. நந்தட்டன் தோழன்மார் நோற்று உயர்வு
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
காளை நந்தனும் தோழன் மார்களும்
நாளும் நாளினும் நடுங்க நல்தவம்
தாளின் ஈட்டினார் தம்மைத் தாம் பெற்றார்

விளக்கவுரை :

[ads-post]

3133. பாவனை மரீஇப் பட்டினி யொடும்
தீ வினை கழூஉம் தீர்த்தன் வந்தியாப்
பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்

விளக்கவுரை :

3134. கருவில் கட்டிய காலம் வந்தென
உருவ வெண் பிறைக் கோட்டின் ஓங்கிய
அருவிக் குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்

விளக்கவுரை :

3135. அனங்கனைத் தவம் செய அழன்று கண்டவர்
மனங்களைக் கவர்ந்திடும் மணிக் கண் வெம் முலைப்
பொனம் கொடி மயில் அனார்ப் புல்ல மாப் பிடி
இனம் பயில் கடாக் களிற்று இன்பம் எய்தினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3126 - 3130 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3126. தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும்
குவளைக் கண் மலர்க் கோலம் வாழ்த்தியும்
இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனாத்
திவளத் தே மலர்க் கண்ணி சேர்த்தியும்

விளக்கவுரை :

3127. பல் மணிக் கதிர்ப் பரவை மேகலை
மின் அணிந்து உகத் திருத்தி வெம் முலைப்
பொன் அணிந்து பூஞ் சுண்ணம் தைவர
நல் மணிக் குழை இரண்டும் நக்கவே

விளக்கவுரை :

[ads-post]

3128. செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
எய்தி யாவையும் உணர்க என்ப போல்
மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
நைய நின்று எலாம் நாண நக்கவே

விளக்கவுரை :

3129. செல்வக் கிண் கிணி சிலம்பத் தேன் சொரி
முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந் நலம்
புல்லிப் பூண்ட தார் புரள மேகலை
அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே

விளக்கவுரை :

3130. இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினைக் கை செய்து ஐ என
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3121 - 3125 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3121. ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர் களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்

விளக்கவுரை :

3122. காம வல்லிகள் கலந்து புல்லிய
பூ மென் கற்பகப் பொன் மரங்கள் போல்
தாம வார் குழல் தையலார் முலை
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

3123. கலவி ஆகிய காமத்தின் பயன்
புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே

விளக்கவுரை :

3124. பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் எனக்
காவிக் கண் கடை இடுகக் கால் சிலம்பு
ஆவித்து ஆர்த்தன அம்மென் குஞ்சியே

விளக்கவுரை :

3125. நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூங்
குஞ்சி ஏற்றது குறிக் கொள் நீ எனாப்
பஞ்சின் மெல்லடிப் பாவை பூ நுதால்
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3116 - 3120 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3116. முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல்
திளைத்து எழு கொடிகள் செந்தீத் திருமணி உடம்பு நுங்க
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து
வளைப் பொலி கடலின் ஆர்த்து வலம் கொண்டு நடந்த அன்றே

விளக்கவுரை :

3117. கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
பூ அலர் முல்லைக் கண்ணிப் பொன் ஒரு பாகம் ஆகக்
காவலன் தான் ஓர் கூறாக் கண் இமையாது புல்லி
மூ உலகு உச்சி இன்பக் கடலினுள் மூழ்கினானே

விளக்கவுரை :

[ads-post]

3118. பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா
அரிவையைப் புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன்
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய்
விரிபுகை விளக்கு விண்ணோர் ஏந்த மற்று உறையும் அன்றே

விளக்கவுரை :

3119. தேவிமார் நோற்று உயர்வு வல்லவன் வடித்த வேல் போல்
மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண் மெல்லவே உறவி ஓம்பி
ஒதுங்கியும் இருந்தும் நின்றும் முல்லை அம் சூட்டு வேயின்
முரிந்து போம் நுசுப்பின் நல்லார் மல்லல் குன்று ஏந்தி
அன்ன மாதவம் முற்றினாரே

விளக்கவுரை :

3120. சூழ் பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
ஏழைப் பெண் பிறப்பு இடியச் சிந்தித்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3111 - 3115 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3111. மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
பிணி உயிர் இறுதியாப் பேசினேன் இனித்
துணிமினம் எனத் தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்

விளக்கவுரை :

3112. விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
தௌ நிலாத் திரு மதி சொரியத் தே மலர்
மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே

விளக்கவுரை :

[ads-post]

3113. பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
வான் இடை முழக்கின் கூறி வால் அற அமிழதம் ஊட்டித்
தேன் உடை மலர்கள் சிந்தித் திசை தொழச் சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ளச் சாமி நாள் சார்ந்தது அன்றே

விளக்கவுரை :

3114. உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு உய்யப் போகல் வேண்டித்
தொழு வித்தி அறத்தை வைத்துத் துளங்கு இமில் ஏறு சேர்ந்த
குழவித் தண் திங்கள் அன்ன இருக்கையன் ஆகிக் கோமான்
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே

விளக்கவுரை :

3115. துந்துபி கறங்க ஆர்த்துத் துகில் கொடி நுடங்க ஏந்தி
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டிக் கிளர் முடி உறுத்தினரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3106 - 3110 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3106. வாள் கை அம் மைந்தர் ஆயும் வனமுலை மகளிர் ஆயும்
வேட்கையை மிகுத்து வித்திப் பிறவி நோய் விளைத்து வீயாத்
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய்ச் செற்றப் புன் தோல்
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழுமின் என்றான்

விளக்கவுரை :

3107. தன் உயிர் தான் பரிந்து ஓம்பு மாறு போல்
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன் உயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே

விளக்கவுரை :

[ads-post]

3108. நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப் புரிக் கொண்டு போய்ப் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெந் எரியுள் வீழுமே

விளக்கவுரை :

3109. மழைக் குரல் உருமு உவா ஓத மாக் கடல்
பிழைத்த ஓர் அருமணி பெற்றது ஒக்குமால்
குழைத் தலைப் பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
தழைத் தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே

விளக்கவுரை :

3110. மல்கு பூங் கற்பக மரத்தின் நீழலான்
நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவாச் சிந்தை செய்யுமோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3101 - 3105 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3101. பரிநிர்வாணம்
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்ப்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகமே

விளக்கவுரை :

3102. மீன் தயங்கு திங்கள் முக நெடுங் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செந் நாவின் சில் மென் கிளிக் கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி அரோ
கான் தயங்கி நில்லா கருவினை கால் பெய்தனவே

விளக்கவுரை :

[ads-post]

3103. மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழுக் குணங்கள் ஏத்தித்
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்

விளக்கவுரை :

3104. ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்திச்
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்பத் துதி ஓதித்
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி எனக் கொற்றவனும் சொன்னான்

விளக்கவுரை :

3105. இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 3096 - 3100 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

3096. நல்லனவே என நாடி ஓர் புடை
அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலைத் தாய் பயந்தார் அவர்
சொல்லுவ நீ சுகதா உரையாயே

விளக்கவுரை :

3097. மதி அறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி
நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லாத்
துதி அறையாத் தொழுதார் மலர் சிந்தா
விதி அறியும் படி வீரனை மாதோ

விளக்கவுரை :

[ads-post]

3098. தீ வினைக் குழவி செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள்
வீ வினை இன்றிக் காம முலை உண்டு வளர்ந்து வீங்கித்
தா வினை இன்றி வெம் நோய்க் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நாக் கோதையர்க் கூறல் உண்டே

விளக்கவுரை :

3099. நல் வினைக் குழவி நல் நீர்த் தயா எனும் செவிலி நாளும்
புல்லிக் கொண்டு எடுப்பப் பொம் என் மணி முலை கவர்ந்து வீங்கிச்
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே

விளக்கவுரை :

3100. மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
இணை மலர்ச் சேவடி கொடுத்த என்பவே

விளக்கவுரை :
Powered by Blogger.