ஏலாதி 71 - 75 of 80 பாடல்கள்
71. நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி
னார்க்(கு)ஊண்
கிடப்பார்க்(கு)ஊண்
கேளிர்க்(கு)ஊண் கேடின்று உடல்சார்ந்த
வானகத்தார்க்(கு)
ஊணே மறுதலையார்க்கு ஊண்அமைத்தான்
தானகத்தே
வாழ்வான் தக.
விளக்கவுரை :
72. உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்
உணரான்
வினைப்பிறப்புச் செய்யும் - உணராத
தொண்டுஇருந்
துன்பம் தொடரும் பிறப்பினால்
மண்டிலமும்
ஆகும் மதி.
விளக்கவுரை :
73. மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும்
மாண்ட
வினைவாழ்க்கை
யாக விழைப - மனைவாழ்க்கை
பற்றுதல்
இன்றி விடுதல்முன் சொல்லுமேல்
பற்றுதல்
பாத்தில் தவம்.
விளக்கவுரை :
74. இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில்
வனப்பும்
நடைவனப்பும்
நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின்
வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின்
வனப்பே வனப்பு.
விளக்கவுரை :
75. அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு
பற்றி
மறுவரவு
மாறான நீக்கி - மறுவரவின்
மாசா
ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா
ரியன(து) அமைவு.
விளக்கவுரை :
