ஐங்குறு நூறு 361 - 365 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 361 - 365 of 500 பாடல்கள்

37. முன்னிலைப் பத்து

361. உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தை இய மடவரல் மகளே
கண்ணினும் கதவநின் முலையே
முலையினும் கதவநின் தடமென் தோளே.

விளக்கவுரை :

362. பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை உறுபகை நினையாது
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே.

விளக்கவுரை :

363. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவல் எயினர் தங்கைநின் முலைய
சுணங்கென நினைதி நீயே
அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே.

விளக்கவுரை :

364. முளமா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வெள்வேல் விடலை விரையா தீமே.

விளக்கவுரை :

365. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்
நலமாண் எயிற்றி போலப் பலமிகு
நல்நலம் நயவர உடையை
என்நோற் றனையோ மாஇன் தளிரே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books