ஐங்குறு நூறு 386 - 390 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 386 - 390 of 500 பாடல்கள்

386. புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே.

விளக்கவுரை :

387. அறம்புரி அருமறை நவின்ற நாவில்
திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று
ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை
இந்துணை இனிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே.

விளக்கவுரை :

388. நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக்
கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச்
சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப்
பொன்னேர் மேணி மடந்தையொடு
வென்வேல் விடலை முன்னிய சுரனே.

விளக்கவுரை :

389. செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்
மையணல் காளையொடு பைய இயலிப்
பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே.

விளக்கவுரை :

390. நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது
பல்லூழ் மறுகி வனவு வோயே
திண்தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books