ஐங்குறு நூறு 471 - 475 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 471 - 475 of 500 பாடல்கள்

48. பாணன் பத்து

471. எவ்வளை நெகிழ மேனி வாடப்
பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்
அதுமற்று உண்ர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என்அவர் தகவே.

விளக்கவுரை :

472. கைவல் சீறியாழ் பாண நுமரே
செய்த பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினும் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே.

விளக்கவுரை :

473. பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்
செலவுநீ நய்னதனை யாயின் மன்ற
இன்னா அரும்படர் எம்வயின் செய்த
பொய்வ லாளர் போலக்
கைவல் பாணஎம் மறாவா தீமே.

விளக்கவுரை :

474. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு
கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே.

விளக்கவுரை :

475. நொடிநிலை கலங்க வாடிய தோளும்
வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்
பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்
எம்வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேரன் பினனே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books