ஐங்குறு நூறு 401 - 405 of 500 பாடல்கள்



ஐங்குறு நூறு 401 - 405 of 500 பாடல்கள்

41. செவிலி கூற்றுப் பத்து

401. மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி
நீல்நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே.

விளக்கவுரை :

402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே.

விளக்கவுரை :

403. புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே
அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலில் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே.

விளக்கவுரை :

404. வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
தானவன் சிறுபுறம் கவையினன் நன்று
நறும்பூம் தண்புற அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே.

விளக்கவுரை :

405. ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன் தாயே.

விளக்கவுரை :

ஐங்குறு நூறு, கூடலூர் கிழார், ainkurunooru, koodalur kizhaar, ettu thogai, tamil books