ஐங்குறு நூறு
166 - 170 of 500 பாடல்கள்
166. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண்
தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம்
புலம்பன் தேறி
நல்ல
வாயின நல்லோள் கண்ணே.
விளக்கவுரை :
167. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன்
போலக் கூறி
நல்கான்
ஆயினும் தொல்கே என்னே.
விளக்கவுரை :
168. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி
யம்பி அகமனை ஈனும்
தண்ணந்
தூறைவன் நல்கி
ஒள்நுதல்
அரிவை பாலா ரும்மே.
விளக்கவுரை :
169. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார்
ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம்
பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து
உண்மை யறிந்தும்
என்செயப்
பசக்கும் தோழியென் கண்ணே.
விளக்கவுரை :
170. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன்
என்றி யாயின்
பல்லிதழ்
உண்கண் பசத்தல்மற் றெவனோ.
விளக்கவுரை :