ஐங்குறு நூறு
161 - 165 of 500 பாடல்கள்
17. சிறுவெண் காக்கைப் பத்து.
161. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப்
புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல்
அழியச் சாஅய்
நயந்த
நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.
விளக்கவுரை :
162. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர்
இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ்
பொதும்பர்ச் சேக்கும்
துறைவன்
சொல்லோ பிறவா யினவே.
விளக்கவுரை :
163. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித்
துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன்
துறந்தெனத் துறந்துஎன்
இறையேர்
முன்கை நீக்கிய வளையே.
விளக்கவுரை :
164. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி
மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந்
துறைவன் தகுதி
நம்மோடு
அமையாது அலர்பயந் தன்றே.
விளக்கவுரை :
165. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச்
சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன்
சொல்லிய சொல்என்
இறையோர்
எல்வளை கொண்டுநின் றதுவே.
விளக்கவுரை :