ஐங்குறு நூறு
156 - 160 of 500 பாடல்கள்
156. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பதைப்ப
ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப்
பரக்கும் துரைவன்
எனக்கோ
காதலன் அனைக்கோ வேறே.
விளக்கவுரை :
157. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
காலை
யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல்
சேர்ப்பனொடு வாரான்
தான்வந்
தனன்எம் காத லோனே.
விளக்கவுரை :
158. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கானலம்
பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந்
துறைவன் கண்டிக்கும்
அம்மா
மேனிஎம் தோழியது துயரே.
விளக்கவுரை :
159. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பசிதின
அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று
இரக்குவன் அல்லேன்
தந்தனை
சென்மோ கொண்டஇவள் நலனே.
விளக்கவுரை :
160. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
நொந்ததன்
தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின்
மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி
பெரும மய்ங்கினள் பெரிதே.
விளக்கவுரை :