ஐங்குறு நூறு
241 - 245 of 500 பாடல்கள்
25. வெறிப்பத்து
241. நம்முறு துயரம் நோக்கி அன்னை
வேலன்
தந்தா ளாயின்அவ் வேலன்
வெறிகமழ்
நாடன் கேண்மை
அறியுமோ
தில்ல செறியெயிற் றோயே.
விளக்கவுரை :
242. அறியா மையின் வெறியென மயங்கி
அன்னையும்
அருந்துயர் உழந்தனள் அதனால்
எய்யாது
விடுதலோ கொடிதே நிரையிதழ்
ஆய்மலர்
உண்கண் பசப்பச்
சேய்மலை
நாடன் செய்த நோயே.
விளக்கவுரை :
243. கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா
வேலன் வெறியெனக் கூறும்
அதுமனம்
கொள்குவை அனையிவள்
புதுமலர்
மழைக்கண் புலம்பிய நோய்க்கே.
விளக்கவுரை :
244. அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண்
சோலை நாடுகெழ நெடுந்தகை
குன்றம்
பாடான் ஆயின்
என்பயஞ்
செய்யுமோ வேலற்குஅவ் வெறியே.
விளக்கவுரை :
245. பொய்யா மரபின் ஊர்முகு வேலன்
கலங்குமெய்ப்
படுத்துக் கன்னந் தூக்கி
முருகென
மொழியும் ஆயின்
கெழுதகை
கொல் இவள் அணங்கி யோற்கே.
விளக்கவுரை :