ஐங்குறு நூறு
121 - 125 of 500 பாடல்கள்
13. கிழவற்கு உரைத்த பத்து
121. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக்
கோதை நனையத்
தெண்டிரைப்
பௌவம் பாய்ந்துநின் றோளே.
விளக்கவுரை :
122. கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை
உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங்
குருகை வினைவு வோளே.
விளக்கவுரை :
123. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல்
ஆயம் ஆர்ப்பத்
தண்ணென்
பெருங்கடல் திரைபாய் வோளே.
விளக்கவுரை :
124. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற்
பாவை வெளவலின்
நுண்பொடி
அளைஇக் கடல்தூர்ப் போளே.
விளக்கவுரை :
125. கண்டிகும் அல்லமோ கொண்கநின்
தெண்டிரை
பாவை வெளவ
ஊண்கண்
சிவப்ப அழுதுநின் றோளே.
விளக்கவுரை :
