ஏலாதி 61 - 65 of 80 பாடல்கள்
61. ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஒர்வமே
செய்யும் உலோபமே - சீர்சாலா
மானமே
மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
ஊனமே
தீர்ந்தவர் ஒத்து.
விளக்கவுரை :
62. கூத்தும் விழவும் மணமும்
கொலைக்களமும்
ஆர்த்த
முனையுள்ளம் வேறிடத்தும் - ஒத்தும்
ஒழுக்கம்
உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம்
இழவும் தரும்.
விளக்கவுரை :
63. ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும்
எண்ணும் எழுத்திலை மாணொடு
கேட்டெழுதி
ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத
வாழ்வார் விரிந்து.
விளக்கவுரை :
64. உயர்ந்தான் தலைவனென்(று)
ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல்
ஓதி ஒடுங்கி - உயர்ந்தான்
அருந்தவம்
ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம்
செய்தார் பெரிது.
விளக்கவுரை :
65. காலனார் ஈடறுத்தால் காண்குறின்
முற்றுணர்ந்த
பாலனார்
நூலமர்ந்து பாராது - வாலிதா
ஊறுபா(டு)
இல்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமோ
மேலுலகம் ஓர்ந்து.
விளக்கவுரை :
