சிறு பஞ்ச மூலம் 1
- 5 of 98 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
1. முழுதுணர்ந்து மூன்றொழித்து
மூவாதான் பாதம்
பழுதின்றி
ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய
ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா
உரைப்பன் சில.
விளக்கவுரை :
நூல்
2. ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)
ஒத்த
இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச
மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச
மூலஞ் சிறந்து.
விளக்கவுரை :
3. பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான்
கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான்
பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான்
பிறர்செவிக்கு உய்த்து.
விளக்கவுரை :
4. கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி
னான்அமிர்து
நற்புடைய
நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய
மேகமே
சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே
செய்யின் அமிர்து.
விளக்கவுரை :
5. கல்லாதான் தான்காணும் நுட்பமும்
காதிரண்டும்
இல்லாதாள்
ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப்
பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
நல்லவர்கள்
கேட்பின் நகை.
விளக்கவுரை :
