ஐங்குறு நூறு
106 - 110 of 500 பாடல்கள்
106. அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்
துதிக்கால்
அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தன்கடல்
வளையினும் இலங்கும்இவள்
அம்கலிழ்
ஆகம் கண்டிசின் நினைந்தே.
விளக்கவுரை :
107. அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி
சுடர்நுதல்
பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
தண்கடல்
படுதிரை கேட்டொறும்
துஞ்சாள்
ஆகுதல் நோகோ யானே.
விளக்கவுரை :
108. அன்னை வாழிவேண் டன்னை கழிய
முண்டக
மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள்
துறந்தனன் ஆயின்
எவன்கொல்
மற்றவன் நயந்த தோளே.
விளக்கவுரை :
109. அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
நீர்படர்
தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள்
துறந்த காலை எவன்கொல்
பன்னாள்
வரும்அவன் அளித்த போழ்தே.
விளக்கவுரை :
110. அன்னை வாழிவேண் டன்னை புன்னை
பொன்னிறம்
விரியும் பூக்கெழு துறைவனை
என்னை
என்றும் யாமே இவ்வூர்
பிறதொன்
றாகக் கூறும்
ஆங்கும்
ஆக்குமோ வழிய பாலே.
விளக்கவுரை :
