சீவக சிந்தாமணி 926 - 930 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 926 - 930 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

926. திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதித் துகிலின் உறையைக் கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவத் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே

விளக்கவுரை :


927. பலகை செம்பொன் ஆகப் பளிங்கு நாயாப் பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருளக்
குலவும் பவழ உழக்கில் கோதை புரளப் பாடி
இலவம் போது ஏர் செவ்வாய் இளையோர் பொருவார்க் காண்மின்

விளக்கவுரை :

[ads-post]

928. தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணப் புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண்பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடித் தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின்

விளக்கவுரை :

929. அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமைக் கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூமக் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காமக் கலனும் காண்மின்

விளக்கவுரை :


930. தாய் தன் கையின் மெல்லத் தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளித் துஞ்சும் அணி ஆர் குழவி போலத்
தோயும் திரைகள் அலைப்பத் தோடு ஆர் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books