சீவக சிந்தாமணி 826 - 830 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 826 - 830 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

826. மரகத மணிப் பசும் காய் கொள்வான் குலை
கவர் பழுக் காய்க் குலை கனியக் கா உறீஇ
இவர் தரு மெல் இலைக் காவும் ஏந்திய
உவரியாய்ச் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்

விளக்கவுரை :


827. சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாசப் பூச் சுமை
கொண்டவர் குழாம் பொலிவு உற்றது ஆங்கு ஓர் பால்

விளக்கவுரை :

[ads-post]

828. ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழுமரப் பறவை ஒத்தவே

விளக்கவுரை :

829. கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்றன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்னச் சென்றதே

விளக்கவுரை :

830. வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books