சீவக சிந்தாமணி 821 - 825 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 821 - 825 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

821. செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே

விளக்கவுரை :

822. கருமணி அழுத்திய காமர் செங் கதிர்த்
திருமணிச் செப்பு எனச் செறிந்த வெம் முலை
அருமணி அலம் வரும் அம்பொன் கொம்பு அனாள்
பெரு மணக் கிழமை யாம் பேசுகின்றதே

விளக்கவுரை :

[ads-post]

823. நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர்மருள்
கோன் தொறுக் காவலன் கொண்டு முன்னினான்

விளக்கவுரை :

824. வளை நிற வார் செந் நெல் அரிசிப் பண்டியோடு
அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்

விளக்கவுரை :

825. சினைத் துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங் கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books