சீவக சிந்தாமணி 806 - 810 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 806 - 810 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

806. கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழித் தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்புத் திண்கை அபர காத்திரங்கள் தம்மால்
கொடாம் பிற குமரிப் போருள் பிறர்க்கு எனக் கொன்றது அன்றே

விளக்கவுரை :

807. மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கித் தேர் தடக்கை தன்னால் முழங்கிப் பாய் மாக்கள் காலின்
நெரித்திடாக் கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கிப் பேய் பாடி ஆட உறுசிலை உடன்று கொண்டான்

விளக்கவுரை :

[ads-post]

808. கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவக் களிற்று உச்சி மேலும்
வண் தார்ப் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே

விளக்கவுரை :


809. பைம் பொன் புளகப் பருமக் களியானை ஈட்டம்
செம் பொன் நெடுந் தேர்த் தொகை மாக் கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம்பொன் மணிப் பூண் அரசும் இலை என்று நக்கான்

விளக்கவுரை :


810. ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அருவரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கிக் கொண்டார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books