சீவக சிந்தாமணி 811 - 815 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 811 - 815 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

811. செங்கண் மால் தெழிக்கப் பட்ட வலம்புரித் துருவம் கொண்ட
சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழப் பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே

விளக்கவுரை :
812. அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப் பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்

விளக்கவுரை :

[ads-post]

813. முளி மரக்காடு மேய்ந்த முழங்கல் போன்று மைந்தன்
தெளி நலக் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே

விளக்கவுரை :

814. உறுபடை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றிச்
சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே
உறுபுலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே

விளக்கவுரை :

815. நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books