சீவக சிந்தாமணி 996 - 1000 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

996. பூமியும் பொறை ஆற்ற அருந் தன்மையால்
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல்
தாம மார்பனைச் சீவகச் சாமியைக்
காமனைக் கடிதே தம்மின் தேவிர்காள்

விளக்கவுரை :

997. கையினால் சொலக் கண்களின் கேட்டிடும்
மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன்
செய்தவம் புரியாச் சிறியார்கள் போல்
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம் கொலோ

விளக்கவுரை :

[ads-post]

998. கண்ணும் வாள் அற்ற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலாப்
பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே

விளக்கவுரை :

999. சோலை வேய் மருள் சூழ் வளைத் தோளி தன்
வேலை மாக் கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலைக்
கால வேல் தடங் கண்ணி கருதினாள்

விளக்கவுரை :

1000. உய்யுமாறு உரை உன்னை அல்லால் இலேன்
செய்ய வாய்க் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இந் நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 991 - 995 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

991. கம்மப் பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்மப் பல்கலம் நொய்ய மெய் அணிந்து
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம்
கொம்மை மட்டித்தார் கொடி அனாளையே

விளக்கவுரை :


992. அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையைக் கொணர்மின் சென்று எனப்
பைம் பொன் அல்குலைப் பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள்

விளக்கவுரை :


[ads-post]

993. நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல்
திறத்தை வெளவிய சேய் அரிக் கண்ணினாள்
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள்

விளக்கவுரை :


994. குமரி மா நகர்க் கோதை அம் கொம்பு அனாள்
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
அமரர் மேவரத் தோன்றிய அண்ணல் போல்
குமரன் ஆக்கிய காதலின் கூறினாள்

விளக்கவுரை :


995. கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலைத் தடத்து இடை மொய் எருக் குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான் அரோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 986 - 990 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

986. மணி செய் கந்து போல் மருள வீங்கிய
திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய
அணி பொன் கொம்பினை அழுங்கல் என்று தன்
தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார்

விளக்கவுரை :

987. முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி
வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான்
விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய்
குழைந்த கோதையைக் கண்டு கூறினாள்

விளக்கவுரை :

[ads-post]

988. நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய
கை செய் மாலை போல் கரிந்து பொன்நிறம்
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார்

விளக்கவுரை :

989. முருகு விண்டு உலாம் முல்லைக் கத்திகை
பருகி வண்டு உலாம் பல் குழலினாள்
வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து
உருகும் நுண் இடை ஒசியப் புல்லினாள்

விளக்கவுரை :

990. கடம்பு சூடிய கன்னி மாலை போல்
தொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்
குடங்கை உண்கணாள் கொண்ட பண்ணையுள்
அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 981 - 985 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

981. கூற்று என முழங்கிக் கையால் கோட்டு இடைப் புடைப்பக் காய்ந்து
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி
ஆற்றல் அம் குமரன் தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான்
கோல் தொடிப் பாவை தன்னைக் கொண்டு உயப் போமின் என்றான்

விளக்கவுரை :


982. மதியினுக்கு இவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதி அமை பருதி தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்குப்
பொதி அவிழ் கோதை தன் மேல் பொருகளிறு அகன்று பொன்தார்க்
கதி அமை தோளினானை கையகப் படுத்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

983. கையகப் படுத்தலோடும் கார்மழை மின்னின் நொய்தா
மொய் கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பு இடைக் குளித்துக் கால்கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்பச்
செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே

விளக்கவுரை :

984. மல்லல் நீர் மணி வண்ணனைப் பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அச்
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல்
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே

விளக்கவுரை :

985. ஒரு கை இரு மருப்பின் மும் மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேனார்
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவத் தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 976 - 980 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

976. என்னைக் கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி
இன் உயிர் இவளைக் காக்கும் அன்று எனில் என்கண் மாய்ந்தால்
பின்னைத் தான் ஆவது ஆக என்று எண்ணிப் பிணை கொள் நோக்கி
மின்னுப் போல் நுடங்கி நின்றாள் வீததை பொன் கொம்பு ஒப்பாள்

விளக்கவுரை :
977. மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இருங் குஞ்சி ஏறக் கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அருந் தோழர் சூழத் தாழ் குழை திருவில் வீசப்
பணி வரும் குருசில் செல்வான் பாவையது இடரைக் கண்டான்

விளக்கவுரை :

[ads-post]

978. பெண் உயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இனமலர் மாலை சுற்றா
வண்ணப் பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா
அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே

விளக்கவுரை :

979. குண்டலம் குமரன் கொண்டு குன்றின்மேல் விழும் மின்போல்
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ
மண்டில முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே

விளக்கவுரை :

980. படம் விரி நாகம் செற்றுப் பாய் தரு கலுழன்போல
மடவரல் அவளைச் செற்று மதக் களிறு இறைஞ்சும் போழ்தில்
குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவக் குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 971 - 975 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani


971. கத்தி கைக் கண்ணி நெற்றிக் கை தொழு கடவுள் அன்ன
வித்தக இளையர் எல்லாம் விழுமணிக் கலங்கள் தாங்கி
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே

விளக்கவுரை :

972. திருந்து பொன் தேரும் செம் பொன் சிவிகையும் மிடைந்து தெற்றிக்
கருங் கயக் களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடுவரைத் தொடுத்த வெள்ளம்
கருங் கடற்கு இவர்ந்த வண்ணம் கடிநகர்க்கு எழுந்த அன்றே

விளக்கவுரை :


[ads-post]

973. கடல் எனக் காற்று எனக் கடுங் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழித் தீ எனத்
தொடர் பிணி வெளில் முதல் முருக்கித் தோன்றியது
அடல் அருங் கடாக் களிற்று அசனி வேகமே

விளக்கவுரை :


974. பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகிக்
குருதி கொள் மருப்பிற்று ஆகிக் குஞ்சரம் சிதைந்தது என்னக்
கருதிய திசைகள் எல்லாம் கண்மிசைக் கரந்த மாந்தர்
பருதியின் முன்னர்த் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார்

விளக்கவுரை :

975. கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம் போல
இருங் களிறு எய்த ஓடச் சிவிகை விட்டு இளையர் ஏக
அரும் பெறல் அவட்குத் தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சிக் கூப்பிக் களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 966 - 970 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

966. சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேங் கொள்
உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்குத்
தவறு எனத் தாமம் பூட்டித் தருதிறை கொண்டும் இன்பத்து
இவறினார் காம வெள்ளத்து ஏத்து அரும் தன்மையாரே

விளக்கவுரை :

967. சாந்து அகம் நிறைந்த தோணி தண்மலர் மாலைத் தோணி
பூந் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு எறிய ஓடித்
தாம் திரைக் கலங்கள் போலத் தாக்குபு திரியும் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

968. கலிவளர் களிறு கைந்நீர் சொரிவ போல் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கிப் பூஞ்சிகை அலமந்து ஆடக்
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே

விளக்கவுரை :

969. வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி
எண் அருந் திறத்து மைந்தர் எதிர் எதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல
மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே

விளக்கவுரை :

970. உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும்
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம்
இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 961 - 965 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

961. எரிமாலை வேல் நுதியின் இறக்கிக் காமன் அடு கணையால்
திருமாலை வெம் முலை மேல் திளைக்கும் தேவர் திரு உறுக
அருமாலை எண் வினையும் அகற்றி இன்பக் கடல் ஆக்கித்
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ

விளக்கவுரை :

962. ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கைச் செறு உழுது
நன்று ஆய நல்விரதச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர்
குன்றாமல் தாம் கொடுத்து ஐம் பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே

விளக்கவுரை :


[ads-post]

963. இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப
மைத் தலை நெடுங் கணாரும் மைந்தரும் மறலி ஆட
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டிரும் பொய்கை புக்கார்

விளக்கவுரை :


964. கலந்து எழுதிரை நுண் ஆடைக் கடிக்கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரைப் பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம்போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன் நுதல் நலத்தை உண்டார்

விளக்கவுரை :

965. தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அம்கை புறம்கையின் இசைய ஆக்கித்
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 956 - 960 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

956. என்று அவன் உரைப்பக் கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றாப்
பொன் தரு மாரி வண்கைப் புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான்

விளக்கவுரை :

957. சூடுறு கழலினாற்குச் சுதஞ்சணன் இதனைச் சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டிப் பகவனது இறைமை போல
மூடி இவ் உலகம் எல்லாம் நின் அடித் தருவல் இன்னே
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான்

விளக்கவுரை :

[ads-post]

958. வாளொடு வயவர் ஈண்டி வாரணத் தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லாக்
கோள் உடைக் கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான்

விளக்கவுரை :

959. இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தல் உற்றுப்
பொன் எழு அனைய தோளான் புல்லிக் கொண்டு இனைய கூறி
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉப் பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான்

விளக்கவுரை :


960. சொல்லிய நன்மை இல்லாச் சுணங்கன் இவ் உடம்பு நீங்கி
எல் ஒளித் தேவன் ஆகிப் பிறக்குமோ என்ன வேண்டா
கொல் உலை அகத்து இட்டு ஊதிக் கூர் இரும்பு இரதம் குத்த
எல்லை இல் செம் பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 951 - 955 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

951. கற்ற ஐம் பதங்கள் நீராக் கருவினை கழுவப் பட்டு
மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி
இற்ற தன் உடம்பும் இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான்

விளக்கவுரை :

952. இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து
அரும் பொன் ஆக்கிய ஆர் உயிர்த் தோழனை
விரும்பி விண் இறுத்து ஒய் எனத் தோன்றினான்
சுரும்பு உண் கண்ணிச் சுதஞ்சணன் என்பவே

விளக்கவுரை :

[ads-post]

953. ஓசனை நறும் புகை கமழ் ஒண்ணிலா
வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன்
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசு உறு பருதியில் பொலிந்து தோன்றினான்

விளக்கவுரை :

954. குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடுங் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான்

விளக்கவுரை :

955. குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம் வீற்று இருந்த தோளாய்
இங்கு நின் அருளில் போகி இயக்கருள் இறைவன் ஆகிச்
சங்க வெண் மலையின் மற்றுச் சந்திர உதயத்தின் உச்சி
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 946 - 950 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

946. உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம் பத அமிர்தம் உண்டால்
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே

விளக்கவுரை :

947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி
எனைப் பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனைப் பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே

விளக்கவுரை :


[ads-post]

948. பாடு பாணி முகம் எனும் பான்மையின்
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சிமேல்
கூடிக் கோலம் குயிற்றிப் படம் களைந்து
ஆடு கூத்தரின் ஐ எனத் தோன்றினான்

விளக்கவுரை :


949. ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர்க்
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல்
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு
ஆயினார் பரியாளம் அடைந்ததே

விளக்கவுரை :

950. மிடைந்த மா மணி மேகலை எந்து அல்குல்
தடம் கொள் வெம் முலைத் தாமரை வாள் முகத்து
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 941 - 945 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

941. நல் வினை ஒன்றும் இலாதவன் நான் மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல்சுடர் வேல் வல சீவக சாமி சென்று
அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான்

விளக்கவுரை :


942. மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன்
ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான்

விளக்கவுரை :


[ads-post]

943. நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளிக்
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம்
நீ உடம்பட்டு நினைமதி என்றான்

விளக்கவுரை :

944. என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும்
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான்

விளக்கவுரை :


945. நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின்
முன் செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ
தன் செய்கை தளிர்ப்பத் தாழ்ந்து ஆங்கு அதன் செவிச் செப்புகின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 936 - 940 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

936. வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள்
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை
நீள் கயம் பாய்ந்து அது நீந்துத லோடும்

விளக்கவுரை :

937. மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கள் குடக் கன்னியர் இருவரோடு உடன்
துட்கென யாவரும் நடுங்கத் தூய்மை இல்
உட்கு உடைக் களி மகன் ஒருவன் தோன்றினான்

விளக்கவுரை :

[ads-post]

938. தோன்றிய புண் செய் வேலவற்குத் தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர்
கான்றிடு கதிர் மதி இரண்டு போன்றவே

விளக்கவுரை :


939. அழல் அம் பூ நறவார்ந்து அழல் ஊர் தரச்
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலைச் சொற்களின் வைது இவை கூறினான்

விளக்கவுரை :

940. புடைத்து என் நாயினைப் பொன்றுவித்தீர் உயிர்
கடுக்கப் பேர்த்தனிர் தம்மின் கலாய்க்குறின்
தடக்கை மீளிமை தாங்குமின் அன்று எனின்
உடைப்பென் கள்குடம் என்று உரையாடினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 931 - 935 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

931. நீலத் துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம்மணிகள்
கோலச் சுடர்விட்டு உமிழக் குமரி அன்னம் குறுகிச்
சால நெருங்கிப் பூத்த தடம் தாமரைப் பூ என்ன
ஆலிச் சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்மின்

விளக்கவுரை :

932. வடிக் கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள்
ஒடிக்கச் சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகிக்
கொடிப் புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்பத்
தொடிக் கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்மின்

விளக்கவுரை :


[ads-post]

933. இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன்
கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில்
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான்
நவைஇல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம்

விளக்கவுரை :

934. அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுக் குவாலினை
வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர்
உய்ந்து இனிப் போதி எனக் கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார்

விளக்கவுரை :


935. கல்லொடு வன்தடி கையினர் காற்றினும்
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகிக்
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினையார் வலைப் பட்டதை அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 926 - 930 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

926. திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதித் துகிலின் உறையைக் கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவத் தெண் கணாடி காண்மின் தோன்றும் வகையே

விளக்கவுரை :


927. பலகை செம்பொன் ஆகப் பளிங்கு நாயாப் பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருளக்
குலவும் பவழ உழக்கில் கோதை புரளப் பாடி
இலவம் போது ஏர் செவ்வாய் இளையோர் பொருவார்க் காண்மின்

விளக்கவுரை :

[ads-post]

928. தீம் பால் அடிசில் அமிர்தம் செம் பொன் வண்ணப் புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண்பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடித் தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்மின்

விளக்கவுரை :

929. அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்தாங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமைக் கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூமக் கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காமக் கலனும் காண்மின்

விளக்கவுரை :


930. தாய் தன் கையின் மெல்லத் தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளித் துஞ்சும் அணி ஆர் குழவி போலத்
தோயும் திரைகள் அலைப்பத் தோடு ஆர் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 921 - 925 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

921. தூமம் கமழும் கோதை தொடுத்த துயரி முலையாத்
தே மென் கீதம் பாலாச் சுரந்து திறத்தின் ஊட்டிக்
காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலுள் நீங்கிப்
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்மின் இனிதே

விளக்கவுரை :

922. கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய்பொன்
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி
நடலை நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்மின்

விளக்கவுரை :

[ads-post]

923. நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப் பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசாத்
தானம் தழுவிக் கிடப்பச் செல்வோள் தன்மை காண்மின்

விளக்கவுரை :

924. தீம்பால் பசியின் இருந்த செவ்வாய்ச் சிறு பைங் கிளி தன்
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடிப்
பாம்பால் என்ன வெருவிப் பைம்பொன் தோடு கழலக்
காம்பு ஏர் தோளி நடுங்கிக் கரை சேர்பவளைக் காண்மின்

விளக்கவுரை :


925. துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல்
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளைக் காண்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 916 - 920 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

916. விடாக் களி வண்டு உண விரிந்த கோதையர்
படாக் களி இள முலை பாய விண்ட தார்க்
கடாக் களிற்று எறுழ் வலிக் காளை சீவகன்
அடாக் களியவர் தொழில் காண ஏகினான்

விளக்கவுரை :

917. ஒன்றே உயிரை உடையீர் ஒருவிப் போமின் இவள் கண்
அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்பப்
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளைக் காண்மின்

விளக்கவுரை :

[ads-post]

918. அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடுங் கண் இணையின் நோக்கிக்
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்மின்

விளக்கவுரை :

919. கோல நெடுங் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்பப்
பீலி மஞ்ஞை நோக்கிப் பேடை மயில் என்று எண்ணி
ஆலிச் சென்று புல்லி அன்மை கண்டு நாணிச்
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்மின்

விளக்கவுரை :

920. மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழக் காணாள்
அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய்
என்னை அடிமை வேண்டின் நாடித் தா என்று இறைஞ்சிப்
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 911 - 915 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

911. ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மாக் கடல் மன்னவன் ஆடலின்
மீசை நீள் விசும்பில் தலைச் சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள்நிதி உண்டதே

விளக்கவுரை :


912. மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய
சிகரச் செவ்வரைத் தீ நிறப் பொன் எயில்
நிகர் இல் நேமிதன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே

விளக்கவுரை :


[ads-post]

913. உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர்
கவான் முதல் கூப்பிய கனக மாழையால்
தவா வினை அடை கரை தயங்கு சிந்தை நீர்
அவா எனும் உடை கடல் அடைக்கப் பட்டதே

விளக்கவுரை :


914. சீர் அரவச் சிலம்பு ஏந்தும் மென் சீறடி
யார் அரவக் கழல் ஆடவ ரோடும்
போர் அரவக் களம் போன்று பொன்னார் புனல்
நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார்

விளக்கவுரை :


915. கார் விளையாடிய மின் அனையார் கதிர்
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய
நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 906 - 910 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

906. இன்னது ஓர் காலத்து இன்னான் ஒருமகள் இன்னது ஒன்றிற்கு
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல்
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும்
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே

விளக்கவுரை :

907. வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்திச்
செய்கழல் மன்னற்கு உய்த்துத் தன் குறை செப்பலோடும்
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கைபுனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே

விளக்கவுரை :

[ads-post]

908. சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள்

விளக்கவுரை :


909. இன்பக் காரணம் ஆம் விளையாட்டினுள்
துன்பக் காரணமாய்த் துறப்பித்திடும்
என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன்
அன்பினால் அவலித்து அழுதிட்டாள்

விளக்கவுரை :

910. தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர்
வண்ண வார் தளிர்ப் பிண்டியினான் அடிக்கு
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 901 - 905 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

901. கண்கள் கொண்ட கலப்பின ஆயினும்
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்குப்
பண் கொள் தேமொழியால் பயக் கூறினாள்

விளக்கவுரை :


902. விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார்
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர்க் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரை யாடினாள்

விளக்கவுரை :

[ads-post]

903. இன்று நீர் விளையாட்டினுள் ஏந்திழை
தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீலக் கண் நித்திலம் சிந்தினாள்

விளக்கவுரை :


904. பட்டது என் நங்கைக்கு என்னப் பாசிழைப் பசும் பொன் அல்குல்
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலித் தோற்றாள்
கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள்

விளக்கவுரை :

905. பள்ளி கொள் களிறு போலப் பரிவு விட்டு உயிர்த்து என் பாவை
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்பக் கேட்டேன்
வள் இதழ்க் கோதை மற்று நகரொடும் கடியுமேனும்
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான்

விளக்கவுரை :


சீவக சிந்தாமணி 896 - 900 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

896. நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇக்
கோலம் ஆக எழுதிய போல் குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண்
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள்

விளக்கவுரை :

897. சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல் தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள்

விளக்கவுரை :

[ads-post]

898. திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட
பங்கயப் படு ஒத்து உளை பாவாய்
நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள்

விளக்கவுரை :


899. மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கை தொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள்

விளக்கவுரை :

900. கன்னி மாநகர் கன்னியர் சூழ் தரக்
கன்னி மாடம் அடையக் கடி மலர்க்
கன்னி நீலக் கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 891 - 895 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

891. காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் எனக் கை தொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலைக் கொம்பு அனாள்

விளக்கவுரை :

892. மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்

விளக்கவுரை :


[ads-post]

893. சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மடமயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆகக் கொண்டு உண்மின் எனச் சொன்னான்

விளக்கவுரை :

894. வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே

விளக்கவுரை :

895. தத்தும் நீர்ப் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரைமின் இவ்வண்ணம் எனச் சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 886 - 890 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

886. ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றிப் புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்

விளக்கவுரை :

887. நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடைப் பூஞ் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே

விளக்கவுரை :

[ads-post]

888. வாரம் பட்டுழித் தீயவும் நல்ல ஆம்
தீரக் காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடும் கண்ணி விளம்பினாள்

விளக்கவுரை :


889. உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்கப் பெறாய் வளைத்தேன் எனக்
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தௌளி நெஞ்சில் தெளிக எனச் செப்பினான்

விளக்கவுரை :

890. கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம்சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 881 - 885 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

881. சீர்தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார்தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கைக் காட்ட மைந்தர்
ஏர்தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம்போர்க்
கார்தங்கு வண்கைக் கழல் சீவகன் காண்மின் என்றார்

விளக்கவுரை :

882. வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான் தனைச் சூழ மற்றப்
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மாமதித் தோற்றம் ஒத்தே

விளக்கவுரை :

[ads-post]

883. காளை சீவகன் கட்டியங் காரனைத்
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்

விளக்கவுரை :

884. சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கருங் குழல்
வண்ண மாலையினீர் எனக் கூறினான்

விளக்கவுரை :

885. மற்று இம் மா நகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் எனப் புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே கொலோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 876 - 880 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

876. சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே

விளக்கவுரை :

877. பைம் பொன் நீள் உலகு அன்றிப் இப்பார்மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனில்
செம் பொன் பாவை அன்னாய் செப்பு நீ எனக்
கொம்பனாளும் கொதித்துக் கூறினாள்

விளக்கவுரை :

[ads-post]

878. சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே

விளக்கவுரை :

879. மல்லிகை மாலை மணம் கமழ் வார்குழல்
கொல்லியல் வேல் நெடுங் கண்ணியர் கூடிச்
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்

விளக்கவுரை :

880. இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு இடை அம்துகில் மூடி அதன் பினர்
நெட்டு இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 871 - 875 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

871. கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரைப்
பூக்கணம் பொழில் பட்டது போன்றதே

விளக்கவுரை :

872. கூறப் பட்ட அக் கொய்ம் மலர்க் காவகம்
ஊறித் தேன் துளித்து ஒண் மது ஆர் மணம்
நாறி நாள் மலர் வெண் மணல் தாய் நிழல்
தேறித் தெண் கயம் புக்கது போன்றதே

விளக்கவுரை :


[ads-post]

873. காவில் கண்டத் திரை வளைத்து ஆயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம்
பூவையும் கிளியும் மிழற்றப் புகுந்து
ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே

விளக்கவுரை :

874. பௌவ நீர்ப் பவளக் கொடி போல்பவள்
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய்க் குணமாலை யோடு
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள்

விளக்கவுரை :

875. தூமம் சூடிய தூத் துகில் ஏந்து அல்குல்
தாமம் சூடிய வேல்தடம் கண்ணினாள்
நாமம் சூடிய நல்நுதல் நீட்டினாள்
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 866 - 870 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

866. பூக்கள் நீர் விளை யாடிய பொன் உலகு
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய் என
வீக்க மா நகர் வீழ்ந்தது போன்று அவண்
மாக்கள் மாக்கடல் வெள்ளம் அடுத்ததே

விளக்கவுரை :

867. மின்னு வாள்தடம் கண்ணியர் வெம் முலைத்
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து
அன்ன வாட்டத்து அணி மலர்ப் பூம் பொழில்
என்ன வாட்டமும் இன்றிச் சென்று எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

868. அள் உடைக் குவளைக் கயம் நீடிய
கள் உடைக் கழுநீர்ப் புனல் பட்டமும்
புள் உடைக் கனியின் பொலி சோலையும்
உள் உடைப் பொலிவிற்று ஒரு பால் எல்லாம்

விளக்கவுரை :

869. செம்புறக் கனி வாழையும் தேன்சொரி
கொம்பு உறப் பழுத்திட்டன கோழரை
வம்புறக் கனிமாத் தொடு வார் சுளைப்
பைம் புறப் பலவிற்று ஒருபால் எல்லாம்

விளக்கவுரை :

870. கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழத் தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண்
உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 861 - 865 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

861. திருந்து சாமரை வீசுவ தெண் கடல்
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை
புரிந்த தாமங்கள் ஆக அப் பூந்துகள்
விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே

விளக்கவுரை :

862. சோலை சூழ் வரைத் தூங்கு அருவித் திரள்
மாலை ஊர்திகள் வையம் இவற்று இடைச்
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன
நீல மேகம் நிரைத்தன போன்றவே

விளக்கவுரை :

[ads-post]

863. வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்
அழுங்கும் மாந்தர்க்கு அணிகலப் பேழையும்
தழங்கு வெம் மதுத் தண்டும் தலைத் தலைக்
குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே

விளக்கவுரை :

864. வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசு இல்போகக் கலப்பையும் கொண்டு அவண்
மாசு இல் மாசனம் வாயில் மடுத்தவே

விளக்கவுரை :

865. பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 856 - 860 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

856. முழவம் கண் துயிலாத முது நகர்
விழவு நீர் விளையாட்டு விருப்பினால்
தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே

விளக்கவுரை :

857. வள்ள நீர் அரமங்கையர் அங் கையால்
உள்ளம் கூரத் திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின
வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே

விளக்கவுரை :


[ads-post]

858. நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில்
போந்து காய் பொன் சிவிகை நல் போதகம்
கூந்தல் மாலைக் குமரிப் பிடிக் குழாம்

விளக்கவுரை :


859. ஏறுவார் ஒலி ஏற்றுமினோ எனக்
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து
ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி
மாறு கொண்டது ஓர் மாக் கடல் ஒத்தவே

விளக்கவுரை :

860. பொன் செய் வேய்த்தலைப் பூ மரு மண்டலம்
மின் செய் வெண் குடை பிச்சம் மிடைந்து ஒளி
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா
மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 851 - 855 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

குணமாலையார் இலம்பகம்


851. காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசு அறு விசும்பின் வெய்யோன் வடதிசை அயணம் முன்னி
ஆசு அற நடக்கும் நாளுள் ஐங் கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான்

விளக்கவுரை :

852. தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர்க் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய தும்பி

விளக்கவுரை :

[ads-post]

853. நானம் மண்ணிய நல் மண மங்கையர்
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய
வேனிலாற்கு விருந்து எதிர் கொண்டதே

விளக்கவுரை :

854. கொம்பர் இன் குயில் கூய்க் குடை வாவியுள்
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து
உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே

விளக்கவுரை :


855. நாக நண் மலர் நாறு கடிநகர்
ஏக இன்பத்து இராச புரத்தவர்
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல்
போகம் மேவினர் பூமரக் காவினே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 846 - 850 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

846. வந்து தரன் கூறிய இவ் வாய் மொழியும் அன்றி
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடிப்
பந்து புடை பாணி எனப் பாயும் கலி மான் தேர்
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்

விளக்கவுரை :

847. எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்திக்
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா

விளக்கவுரை :

[ads-post]

848. ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணாப்
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
தேம் புனலை நீர்க் கடலும் சென்று தரல் இன்றே
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே

விளக்கவுரை :


849. மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
தந்த எனச் சொல்லி நனி சாமி கொடுத்தானே

விளக்கவுரை :

850. குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
வெம் கண் இளமுலையின் மிசை எழுதி விளையாடிக்
கொங்கு உண் மலர்க் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 841 - 845 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

841. இளமுலை மணிக்கண் சேப்ப எழுது வில் புருவம் ஏறக்
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவளவாய் திகழத் தேன் சோர்
வள மலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப்புல்லி
அளமரல் இலாத இன்பக் கடல் அகத்து அழுந்தினானே

விளக்கவுரை :

842. இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக் காவு காண்பான்
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றித்
துன்னி ஓர் ஓலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்கு கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

843. உருமுக் கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமைக் குருப் பளிங்கில் புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த
திரு மிக்கு உடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்

விளக்கவுரை :

844. தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்னச்
சித்தம் கரிந்து ஆங்குக் கொடியான் செரு விளைத்தான்

விளக்கவுரை :

845. தேன் முழங்கு தார்க் குரிசில் செம் பொன் நெடுந் தேர் மேல்
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 836 - 840 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

836. மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னைக்
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே

விளக்கவுரை :

837. அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
முடி மணி அழுத்திச் செய்த மூரிக் காழ் நெற்றி மூழ்கக்
கடி மலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே

விளக்கவுரை :

[ads-post]

838. ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றிப் பூம்பட்டு
எந்திர எழினி வாங்கி இன் முக வாசச் செப்பும்
சந்தனச் சாந்தச் செப்பும் தண்மலர் மாலை பெய்த
இந்திர நீலச் செப்பும் இளையவர் ஏந்தினாரே

விளக்கவுரை :

839. கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன் காசு அறுதட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணிக் கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
அடைந்து வீசு ஆல வட்டம் அரிவையர் ஏந்தி ஆற்றத்
தடங் கண்கள் குவளைப் பூப்பத் தையலோடு ஆடும் அன்றே

விளக்கவுரை :


840. பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர்க் கலாபம் வீங்கச்
செந் தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து எனப் பருகினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 831 - 835 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

831. உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே

விளக்கவுரை :

832. இலங்கு பொன் கிண் கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்

விளக்கவுரை :

[ads-post]

833. மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
ஊழி வாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
ஆழிவாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்தத்
தாழி வாய்க் குவளை வாள் கண் தையலார் பரவச் சார்ந்தார்

விளக்கவுரை :


834. இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
மின் இயல் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்

விளக்கவுரை :

835. இட்ட உத்தரியம் மின்னும் எரிமணிப் பருமுத்து ஆரம்
மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்கல் ஆற்றா
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர்வளை முன்கை பற்றிக்
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன்கட்டில் தான் ஏறினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 826 - 830 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

826. மரகத மணிப் பசும் காய் கொள்வான் குலை
கவர் பழுக் காய்க் குலை கனியக் கா உறீஇ
இவர் தரு மெல் இலைக் காவும் ஏந்திய
உவரியாய்ச் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்

விளக்கவுரை :


827. சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாசப் பூச் சுமை
கொண்டவர் குழாம் பொலிவு உற்றது ஆங்கு ஓர் பால்

விளக்கவுரை :

[ads-post]

828. ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் எனக் கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழுமரப் பறவை ஒத்தவே

விளக்கவுரை :

829. கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்றன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்னச் சென்றதே

விளக்கவுரை :

830. வால் அரி கழுவிய வண்ணச் செம்புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 821 - 825 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

821. செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே

விளக்கவுரை :

822. கருமணி அழுத்திய காமர் செங் கதிர்த்
திருமணிச் செப்பு எனச் செறிந்த வெம் முலை
அருமணி அலம் வரும் அம்பொன் கொம்பு அனாள்
பெரு மணக் கிழமை யாம் பேசுகின்றதே

விளக்கவுரை :

[ads-post]

823. நான்கு நூறு ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர்மருள்
கோன் தொறுக் காவலன் கொண்டு முன்னினான்

விளக்கவுரை :

824. வளை நிற வார் செந் நெல் அரிசிப் பண்டியோடு
அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்

விளக்கவுரை :

825. சினைத் துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங் கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 816 - 820 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

816. குழை உடை முகத்தினாள் கண் கோணைப் போர் செய்த மன்னர்
மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழையுடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே.

விளக்கவுரை :

817. பார்மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
போர்முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ் சால் கொள் மார்பின்
சீர் முகத் தோழர் சூழச் சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை வயின் கொண்டு புக்கான்

விளக்கவுரை :

[ads-post]

818.  நெய்க் கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பத்தல் கிடத்தப் பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப் பட்டார்
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப் பட்டார்
கைக் கிழி கொடுக்கப் பட்டார் கலம் பல நல்கப் பட்டார்

விளக்கவுரை :

819.  முது மரப் பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரவை மார்பின் நெய்க் கிழி பயிலச் சேர்த்தி
நுதி மயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே

விளக்கவுரை :

820. பார் கெழு பைம் பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கித்
தார் கெழு மின்னு வீசித் தனிவடம் திளைக்கும் மார்பன்
போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 811 - 815 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

811. செங்கண் மால் தெழிக்கப் பட்ட வலம்புரித் துருவம் கொண்ட
சங்குவாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழப் பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே

விளக்கவுரை :
812. அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப் பட்ட கடல் எனக் கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்

விளக்கவுரை :

[ads-post]

813. முளி மரக்காடு மேய்ந்த முழங்கல் போன்று மைந்தன்
தெளி நலக் குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே

விளக்கவுரை :

814. உறுபடை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றிச்
சிறுபடையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்தது அன்றே
உறுபுலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே

விளக்கவுரை :

815. நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 806 - 810 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

806. கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழித் தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்புத் திண்கை அபர காத்திரங்கள் தம்மால்
கொடாம் பிற குமரிப் போருள் பிறர்க்கு எனக் கொன்றது அன்றே

விளக்கவுரை :

807. மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கித் தேர் தடக்கை தன்னால் முழங்கிப் பாய் மாக்கள் காலின்
நெரித்திடாக் கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கிப் பேய் பாடி ஆட உறுசிலை உடன்று கொண்டான்

விளக்கவுரை :

[ads-post]

808. கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவக் களிற்று உச்சி மேலும்
வண் தார்ப் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே

விளக்கவுரை :


809. பைம் பொன் புளகப் பருமக் களியானை ஈட்டம்
செம் பொன் நெடுந் தேர்த் தொகை மாக் கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம்பொன் மணிப் பூண் அரசும் இலை என்று நக்கான்

விளக்கவுரை :


810. ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அருவரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கிக் கொண்டார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 801 - 805 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

801. ஆர்ப்பு எதிர் மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் போலப்
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல்வில்
கார்க்கு எதிர் மேகம் போலக் கணைமழை கான்றது இப்பால்
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சிக் குன்று ஆக்கினானே

விளக்கவுரை :


802. மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப் படை அழுவ மாரி
கொல் நுனை எஃகின் நீக்கிக் குனிந்துவில் பகழி கான்ற
மின் அவிர் இலங்கும் ஒள்வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
தன்மையால் தானை நீந்தித் தான் விளையாடு கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

803. வேழ வெண் கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
சூழ் குடர்க் கண்ணி சூடி நிணத் துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆடக் கண்டு உவந்து நக்கான்

விளக்கவுரை :

804. வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
களிற்று உகிர்ப் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி
அளித்தவை பாடி ஆடக் குறு நரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த அன்றே

விளக்கவுரை :

805. கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார்
உடலின் மேல் திரியும் திண்தேர் காண்டலும் மைந்தர் நெஞ்சத்
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர்த் திறத்தின் மிக்கார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 796 - 800 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

796. அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆர் உயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசை இற்றாகி
மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப்
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை தன் பைம்பொன் தேரே

விளக்கவுரை :

797. கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
கோல் ஒற்றக் குனிந்த வாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே

விளக்கவுரை :

[ads-post]

798. நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
வெம் களித் தடங்கண் கண்டீர் விருந்து எதிர் கொள்மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆகச்
செம் களிப் பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே

விளக்கவுரை :


799. நன் மன வேந்தர் தங்கள் நகை மணி மார்பம் நக்கிப்
புன் மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனிக் கொள்ளும் உடம்பினாலும்
துன்னன்மின் என்பவே போல் சுடுசரம் பரந்த அன்றே

விளக்கவுரை :


800. மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண்தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய் என உலம்பி ஆர்த்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 791 - 795 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

791. பொன் அனாள் புணர் முலைப் போகம் வேண்டிய
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
இன்னணம் இத்தலை மயங்க அத்தலைக்
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்

விளக்கவுரை :


792. தம்பியைச் சீவகன் நோக்கிச் சாமரை
வெம் பரி மான் செவி வீரமந்திரம்
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்

விளக்கவுரை :


[ads-post]

793. மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டிப் புகுவவே போல்
அந்தரத்து இவர்ந்த ஆழிக் கால் நிலம் விட்ட மாலைச்
சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தம் கண்ணுள் இட்ட
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்

விளக்கவுரை :

794. வடி கயிறு ஆய்ந்து முள்கோல் வலக் கையால் தாங்கி வென்றி
முடிகெனப் புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
கடுகிய வண்ணம் மாவின் தாரொலி காமர் பொன்தேர்
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே

விளக்கவுரை :

795. அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கிப்
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 786 - 790 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

786. கூட்டு உற முறுக்கி விட்ட குய மகன் திகிரி போல
வாள் திறல் தேவ தத்தன் கலின மா மாலை வெள்வேல்
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தித் திரியும் அன்றே

விளக்கவுரை :


787. பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி
வேந்தர்தம் வயிறு வேவ நபுல மாவிபுலர் என்பார்
காய்ந்து தம் புரவிக் காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உகச் சேர்த்தி மாலைத் திருமுடித் திலகம் கொண்டார்

விளக்கவுரை :


[ads-post]

788. காயத்தின் குழம்பு தீற்றிக் கார் இரும்பு எறிய மேகம்
தோயும் முள் இலவின் கூன் காய் சினை தொறும்உதிர்வவே போல்
மாயம் கொல் மறவர் மாலைப் பைந்தலை உதிர்ந்த செங் கண்
சேய் அனான் திருவின் பேரான் செழுஞ் சிலைப் பகழியாலே

விளக்கவுரை :


789. நீல் நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை வலாளன்
போன் நிறப் புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்

விளக்கவுரை :

790. வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
சோரும் செங்குருதியுள் மைந்தர் தோன்றுவார்
ஒருமேல் ஒண்மணிச் சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 781 - 785 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

781. மறப் படை பசித்தன வயிறு இன்று ஆர்க எனக்
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மாத் துணித்து
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார்

விளக்கவுரை :

782. ஆற்றுவீர் வம்மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார்
கூற்றம் போல் கொடிய யானைக் கோடு உழுது அகன்ற மார்பம்
கீற்றுப் பட்டு அழகிதாகக் கிடக்க எனக் கொடுத்து நிற்பார்

விளக்கவுரை :

[ads-post]

783. கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் கண்கள் செந்தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கிப்
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார்

விளக்கவுரை :

784. ஐங் கதிக் கலினப் பாய் மாச் சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர் கொண்டு நிற்பார்
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன் மாரே

விளக்கவுரை :


785. ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவுத் தோளார்
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 776 - 780 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

776. குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடைக் குமர வேழமும்
வெடிபடு போர்த் தொழில் காண விஞ்சையர்
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்

விளக்கவுரை :

777. கரை பொரு கடலொடு கார் கண் உற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே

விளக்கவுரை :

[ads-post]

778. தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
எய் கணைப் படுமழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே

விளக்கவுரை :

779. கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
விலங்கின தேர்த்தொகை வேழம் காய்ந்தன
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே

விளக்கவுரை :

780. சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 771 - 775 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

771. தம்முடைப் பண்டம் தன்னைக் கொடுத்து அவர் உடைமை கோடல்
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
அம்முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து
நும்முடைத் திருவும் தேசும் நோக்குமின் கொள்வல் என்றான்

விளக்கவுரை :

772. மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி
கெட்டு உலாய்ச் சிலம்பு செம் பொன் கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்துச் சரங்கள் மூழ்கப்
பட்டு உலாய்க் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார்

விளக்கவுரை :

[ads-post]

773. எரிசுடர்ப் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்கப்
பொருபடை மன்னர் நுங்கள் புறக் கொடை கண்டு மற்று இம்
முருகு உடைக் குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல்
இருசுடர் வழங்கும் வையத்து என்பெயர் கெடுக என்றான்

விளக்கவுரை :


774. ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
காண் வரு காட்டு இனக் களிற்று நீள் வரை
நீள் நில வேந்து எனும் வேழப் பேர் இனம்
பூண் முலைப் பிடிக்கு அவாய்ப் போர் செய்குற்றவே

விளக்கவுரை :

775. தாழ் இரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்
தோழர் தன் தாள்களாச் சொரியும் மும்மதம்
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
ஏழுயர் போதகம் இனத்தொடு ஏற்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 766 - 770 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

766. பதுமுக குமரன் மற்று இப் பாவையைக் காவல் ஓம்பி
மதுமுக மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப
நுதிமுக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்திச்
சதுமுகம் ஆகச் சேனை நமர் தலைப் பெய்க என்றான்

விளக்கவுரை :

767. வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கித்
தட்டு உடைப் பொலிந்த திண் தேர் தனஞ்சயன் போல ஏறிக்
கட்டளைப் புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான்

விளக்கவுரை :


[ads-post]

768. புள் இரைப்பு அன்ன பொன் தார்ப் புரவித் தேர் இரவி போலா
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடிக் குழாம் மன்னர் கேட்பக்
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான்

விளக்கவுரை :

769. முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும்
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ
கருதலாம் படியது அன்றிக் கலதி அம்பு இவையும் காய்ந்த
பொருது உலாம் புகழை வேட்டு இவ் எஃகமும் புகைந்த என்றான்

விளக்கவுரை :

770. வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேண் இகந்து உய்யப் போ நின் செறிதொடி ஒழிய என்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 761 - 765 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

761. மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்

விளக்கவுரை :

762. பாழி நம் படை மேல் அது இப் பார் எலாம்
நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும்
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
தோழி தூத்துகில் தோகையின் நீக்கினாள்

விளக்கவுரை :

[ads-post]

763. எங்கள் பெண்மையும் ஈர்மலர்த் தார் மன்னர்
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
நங்கை வாள் படை நங்கையைச் சூழ்ந்ததே

விளக்கவுரை :

764. கூன்களும் குறளும் அஞ்சிக்குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொளப் பாய ஓடிச்சாந்துக் கோய் புகிய செல்வ
தேன் கொள் பூமாலை சூடித்தாமம் ஆய்த் திரண்டு நிற்ப
வான் பளிங்கு உருவத் தூணே மறைபவும் ஆய அன்றே

விளக்கவுரை :

765. இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரிபொன் மார்பன்
நங்கையைக் காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ்வாய்ச்
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறிப்
பொங்கி மேல் செல்வதே போல் பொலங் கழல் நரலச் சென்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 756 - 760 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

756. சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கிக்
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்

விளக்கவுரை :

757. ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்திச்
சூழ் குடர்ப் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதிப் பல்பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சிச் சோறு ஊட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா

விளக்கவுரை :

[ads-post]

758. போர்ப் பறை முழங்கி எங்கும் பொருவளி புடைக்கப் பட்ட
கார்க் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்பத்
தார் பொலி மார்பன் ஓர்த்துத் தன் கையில் வீணை நீக்கி
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனைச் சொன்னான்

விளக்கவுரை :


759. தேய்ந்து நுண் இடை நைந்து உகச் செப்பினைக்
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள்போல்
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்

விளக்கவுரை :

760. அண்ணல் கூறலும் அம்மனையோ எனாத்
துண் என் நெஞ்சினளாய்த் துடித்து ஆய் இழை
கண்ணின் நீர் முலை பாயக் கலங்கினாள்
வண்ண மாக் கவின் சொல்லொடு மாய்ந்ததே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 751 - 755 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

751. இள வள நாகு புல்லி இனத்து இடை ஏறு நின்றால்
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ

விளக்கவுரை :

752. எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால்
மழுங்க மேல் சென்று பாய்தல் மறப்புலி தனக்கும் ஆமோ
கொழுங் கயல் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால்
அழுங்கச் சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ

விளக்கவுரை :

[ads-post]

753. மத்திரிப்பு உடைய நாகம் வாய் வழி கடாத்தது ஆகி
உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால்
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ

விளக்கவுரை :


754. தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண்மேல்
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது
ஏம் உற்றீர் இன்னும் கேண்மின் இரதியைப் புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்குக் காமனில் பிரிக்கல் ஆமே

விளக்கவுரை :


755. எம்மை நீர் வெல்லப் பெற்றீர் வென்றபின் இருந்த வேந்தன்
நும்மையும் வேறு செய்து நும் உளே பொருது வீந்தால்
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான்

விளக்கவுரை :
Powered by Blogger.