சீவக சிந்தாமணி 666 - 670 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 666 - 670 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

666. தம்பியும் தோழன் மாரும் தானும் மற்று எண்ணிச் சூழ்ந்து
வெம்பிய வீணைப் போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அறப் புத்திசேன சொல் இது குரவற்கு என்னக்
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே

விளக்கவுரை :

667. ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம்பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்குக் கந்துகன் இதுவும் கூறும்

விளக்கவுரை :

[ads-post]

668. மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலைப்
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கிப் பைந்தாள் ஒண்மணிக் குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூக் கொண்டானே

விளக்கவுரை :

669. நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூங் குவளைப் போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி
வல்லிதில் சலாகை சுற்றி ஓலையை வாசிக் கின்றான்

விளக்கவுரை :

670. நம்பனை நகரின் நீக்கிச் சேமத்தால் வைக்க தீயுள்
செம் பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டிக் கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்குச் சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books