சீவக சிந்தாமணி 501 - 505 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 501 - 505 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

501. ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபடச் செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்க்
கோடு பறை ஆர்ப்பக் கொழுந் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே.

விளக்கவுரை :

502. திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம்
கரை கடலுள் காலக் கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது எனக் கீறி வளர் தீவின்
நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ.

விளக்கவுரை :

[ads-post]

503. மின்னும் மிளிர் பூங் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே.

விளக்கவுரை :


504. தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலும் திருமுத்தாரம்
கோவினைக் குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்.

விளக்கவுரை :


505. புணர்ந்தவர் பிரிதல் ஆற்றாப்போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்றகொழுநிதிக் குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books