சீவக சிந்தாமணி 496 - 500 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 496 - 500 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

496. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி
னெள்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே.

விளக்கவுரை :

497. செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு
மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு
மையமிலை யின்பமற னோடெவையு மாக்கும்
பொய்யில்பொரு ளெபொருண்மற் றல்லபிற பொருளே.

விளக்கவுரை :


[ads-post]

498. தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ
னீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான்.

விளக்கவுரை :

499. மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி
மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற
தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன்
கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான்.

விளக்கவுரை :

500. வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள
றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி
யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books