சீவக சிந்தாமணி 291 - 295 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 291 - 295 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

291. பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
     நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
     கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
     மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
     விண்ணோர்க்கு விருந்து ஆயினானே.

விளக்கவுரை :

சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்


292. செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
     தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
     தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை
     போய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
     இரங்கிப் பள்ளி படுத்தார்களே.

விளக்கவுரை :



[ads-post]

சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்


293. மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
     செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
     உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
     பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
     மின்னுப் போல் புலம்பினாரே.

விளக்கவுரை :

294. அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
     வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
     கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
     ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
     பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.

விளக்கவுரை :

295. கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
     ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
     நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
     கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
     என்பார் கோல் வளையினார்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books