சீவக சிந்தாமணி 491 - 495 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 491 - 495 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

491. கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி
வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை
முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக்
கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான்.

விளக்கவுரை :

492. தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள்
ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே.

விளக்கவுரை :


[ads-post]

கோவிந்தையார் இலம்பகம் முற்றியது

3. காந்தருவ தத்தையார் இலம்பகம்


493. இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்
சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்
பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர்
வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்.

விளக்கவுரை :

494. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன்
கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந்
தன்வழிய காளைச் தத்தனவன் றன்போற்
பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான்.

விளக்கவுரை :

495. இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி
யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books