சீவக சிந்தாமணி 696 - 700 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

696. கரு நெறி பயின்ற குஞ்சிக் காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம் பட மிலைச்சி வாள் ஆர்
திரு நிற முகத்திற்கு ஏற்பச் செம் பொன் ஓர் ஓலை சேர்த்தி
எரி நிறக் குழை ஓர் காதிற்கு இருள் அறச் சுடர வைத்தான்

விளக்கவுரை :

697. தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை தேம் கொள்
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
மின் விரித்து அன்னயது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்

விளக்கவுரை :

[ads-post]

698. இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப் பட்ட
அரும் பெறல் சுரிகை அம் பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
பெருந் தகைக் குருசில் கொண்டு பெருவலம் சுடர வீக்கித்
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளங் குமரன் ஒத்தான்

விளக்கவுரை :

699. வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணிக் கலங்கள் தாங்கி
நுரை கிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார்

விளக்கவுரை :

700. அரக்கு நீர் எறியப் பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன
திருக் கிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறுபுலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்நதாங்கு அண்ணல் தான் ஏறினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 691 - 695 of 3145 பாடல்கள்
 
seevaga-chinthamani

691. வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
அம் சில் ஓதியார் புனைந்த செஞ் சொல் மாலை சூடினான்

விளக்கவுரை :

692. தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே

விளக்கவுரை :

[ads-post]

693. இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
அன்னதால் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்னதால் படை அமைத்து எழுமின் என்று இயம்பினான்

விளக்கவுரை :

694. தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர்த் தோழன் கூறக்
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கைப்
போது உலாம் கண்ணி மைந்தர் போர்ப் புலிக் குழாத்தின் சூழ்ந்தார்

விளக்கவுரை :

695. கண் நுதல் கடவுள் சீறக் கனல் எரி குளித்த காமன்
மண் மிசைத் தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
தௌ மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 686 - 690 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

686. தேன் உடைந்து ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி
ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்குக்
கான் உடை மாலை தன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே

விளக்கவுரை :

687. கலையினில் கன்னி நீக்கித் தாமரைக் கண்கள் தம்மால்
முலையினில் எழுதிச் செவ்வாய் பயந்த தேன் பருகி முள்கும்
சிலை வலாய் புல்லு நம்பி சீவக சாமியோ என்று
அலை கடல் புலம்பின் நோவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்

விளக்கவுரை :


[ads-post]

688. பிறன் நலம் அரற்றக் கேட்டும் பீடினால் கனிந்த காம
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்தொடிக்கு உருகிப் பின்னும்
திறன் அல தமர்க்குச் செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்

விளக்கவுரை :

689. விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இந் நல்நகர்க்கு மன்னனோ
உலம் கலந்த தோளினீர் நீர் உரைமின் நீவிர் என்னவே

விளக்கவுரை :

690. மட்டு அவிழ்ந்த தாரினான் இம் மாநகர்க்குள் ஆயிரர்
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 681 - 685 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

681. கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்குமச் சேறு ஆட்டினார்கள்
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்துகாண்பாரும் உளரே செங்கண்
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல்மதியோ வாள் முகமோ நோக்கிக் காணீர்

விளக்கவுரை :

682. நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல்கற்றை கண்டு நிறை
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள்ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றிப் பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகிக் கண் உருகி நெஞ்சு உருகிக் காம வெயில் வெண்ணெய்ப் பாவை போல் மெலிகின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

683. ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
ஓடு அரி நெடுங் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடிய வாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே

விளக்கவுரை :

684. வள மலர் அணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன்
இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்

விளக்கவுரை :

685. என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்கண் ஆர்வம்
சென்றமை குறிப்பில் தேறிக் கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கித் தன் கோயில் புக்கான்
மன்றல மடந்தை தன்னை வலிதில் கொண்டு ஒலிகொள் தாரான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 676 - 680 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

676. தௌ மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்கள்
உள் நட்ட குவளை போலும் உருவக் கண் வெருவி ஆட
விண் விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல்மணிக் கழலி னார்க்கே

விளக்கவுரை :

677. செங் கதிர்ச் சிலம்பு செம் பொன் கிண்கிணி சிலம்பக் கோதை
பொங்கப் பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்பப் போர்த்த
குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள்

விளக்கவுரை :

[ads-post]

678. மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க
அரங்கின் மேல் இவளைத் தந்த தாய் கொலோ கயத்தி அன்றேல்
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர் கொலோ கயவர் சொல்லீர்

விளக்கவுரை :

679. அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லின்
பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இதுகண்டும் உளளே பாவம்

விளக்கவுரை :

680. தேந் தாமம் செம் பவளத் தாமம் செம் பொன் எரி தாமம் மின்னுத்திரள் தாமங்கள்
தாம்தாம் தாம் எனத் தாழ்ந்த பொன் மேகலைத் தாம அரங்கின்மேல் தாது ஆர் முல்லைப்
பூந் தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர்மகள் என்பாரும் ஆயினாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 671 - 675 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

671. ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணிக் குழையும் முத்தும்
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான்

விளக்கவுரை :

672. கடி அரங்கு அணிந்து மூதூர்க் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான்
குடை உடையவனொடு எண்ணிச் சீவகன் கொணர்மின் என்னத்
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காணச் சென்றார்

விளக்கவுரை :

[ads-post]

673. நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடிக் கோதை சூட்டி
அலர் முலைக் குருதிச் சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்திக்
குலவிய குருதிப் பட்டின் கலைநலம் கொளுத்தி இட்டான்

விளக்கவுரை :

674. திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம் பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கிப்
பரி அகம் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான்

விளக்கவுரை :

675. தோல் பொலி முழவும் துளை பயில் குழலும் ஏங்கக்
காற்கு ஒசி கொம்பு போலப் போந்து கைத் தலங்கள் காட்டி
மேல் பட வெருவி நோக்கித் தானையை விட்டிட்டு ஒல்கித்
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 666 - 670 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

666. தம்பியும் தோழன் மாரும் தானும் மற்று எண்ணிச் சூழ்ந்து
வெம்பிய வீணைப் போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அறப் புத்திசேன சொல் இது குரவற்கு என்னக்
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே

விளக்கவுரை :

667. ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம்பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்குக் கந்துகன் இதுவும் கூறும்

விளக்கவுரை :

[ads-post]

668. மறை வல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலைப்
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கிப் பைந்தாள் ஒண்மணிக் குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூக் கொண்டானே

விளக்கவுரை :

669. நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூங் குவளைப் போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி
வல்லிதில் சலாகை சுற்றி ஓலையை வாசிக் கின்றான்

விளக்கவுரை :

670. நம்பனை நகரின் நீக்கிச் சேமத்தால் வைக்க தீயுள்
செம் பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டிக் கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்குச் சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 661 - 665 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

661. சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்றபின்
நரம்பு உறு தௌவிளி நவின்ற நால் மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்

விளக்கவுரை :

662. திருமலர்க் கமலத்து அங் கண் தேனின் முரல்வது ஒப்ப
விரிமலர்க் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார்
எரிமலர்ப் பவளச் செவ்வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே

விளக்கவுரை :

[ads-post]

663. வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகிக்
கோல் பொரச் சிவந்த கோலக் குவிவிரல் மடந்தை வீணை
நூல் பொரப் புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ
கால் பொரக் கரிந்த காமர் பங்கயப் பழனம் ஒத்தார்

விளக்கவுரை :

664. தேன் உயர் மகரவீணைத் தீம் சுவை இவளை வெல்வான்
வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமன் ஆகும்
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலைக் கட்டியங் காரன் அன்றே

விளக்கவுரை :

665. மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடையப் பட்ட
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அந்நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 656 - 660 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

656. உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
மறை ஒளி மணிச் சுவர் இடை இட்டு இத்தலை
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலைக்
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே

விளக்கவுரை :


657. சிலைத் தொழில் சிறு நுதல் தெய்வப் பாவை போல்
கலைத் தொழில் பட எழீஇ இப் பாடினாள் கனிந்து
இலைப் பொழில் குரங்கின ஈன்ற தூண்தளிர்
நிலத்து இடைப் பறவை மெய்ம் மறந்து வீழ்ந்தவே

விளக்கவுரை :

[ads-post]

658. கருங் கொடிப் புருவம் ஏறா கயல் நெடுங் கண்ணும் ஆடா
அருங் கடி மிடறும் விம்மாது அணிமணி எயிறும் தோன்றா
இரும் கடல் பவளச் செவ்வாய் திறந்து இவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்

விளக்கவுரை :

659. இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார்
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவிப் புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே

விளக்கவுரை :

660. மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
போதரப் பாடினாள் புகுந்த போயின
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 651 - 655 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

651. தளை அவிழ் கோதை பாடித் தான் அமர்ந்து இருப்பத் தோழி
விளை மதுக் கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண்
இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல்
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள்

விளக்கவுரை :

652. வேயே திரள் மென்தோள் வில்லே கொடும் புருவம் வாயே
வளர்பவளம் மாந்தளிரே மாமேனி நோயே முலை சுமப்பது
என்றார்க்கு அருகு இருந்தார் ஏ இவள் ஒருத்தி பேடியோ
என்றார் எரி மணீப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்

விளக்கவுரை :


[ads-post]

653. பலி கொண்டு பேராத பாசம் இவள் கண் ஒலி கொண்டு
உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே கலி கொண்டு
தேவர் முலை கரந்து வைத்தார் இலை கொண்ட பூணினீர் என்று
எழினி சேர்ந்தாள் இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்

விளக்கவுரை :

654. நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
கண்டு அறிகிலா இடைக் காம வல்லி யாழ்
கொண்டவர் குழாத்து இடைக் கொடியின் ஒல்கினாள்

விளக்கவுரை :

655. பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி பையவே
கிளிச் சொலின் இனியவர் நீக்கக் கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்கச் சென்று அணையில் ஏறினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 646 - 650 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

646. பைம் பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று
செம் பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழலச் சில் என்று
அம்பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூஞ்
செம்பொன் புரிசை அடைந்தாள் செந் தாமரை மேல் திருவோடு ஒப்பாள்

விளக்கவுரை :

647. பட்டு இயன்ற கண்டத் திரை வளைத்துப் பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலாச் சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறித் தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇப் பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே

விளக்கவுரை :

[ads-post]

648. புன் காஞ்சித் தாது தன் புறம் புதையக் கிளி எனக் கண்டு
அன்பு கொள் மடப் பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்துத்
தன் பெடையைக் குயில் தழுவத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :
649. தண் காஞ்சித் தாது ஆடித் தன் நிறம் கரந்ததனைக்
கண்டு ஆனா மடப் பெடை கிளி எனப் போய்க் கை அகல
நுண்தூவி இளஞ் சேவல் நோக்கோடு விளி பயிற்றித்
தன் சிறகால் பெடை தழுவத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :

650. குறுத் தாள் குயில் சேவல் கொழுங் காஞ்சித் தாது ஆடி
வெறுத்து ஆங்கே மடப் பெடை விழைவு அகன்று நடப்பதனை
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி
உறுப்பினால் அடி பணியத் தலை வந்தது இளவேனில்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 641 - 645 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

641. குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்

விளக்கவுரை :

642. ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
காட்டி எம்மைக் கொன்றாய் எனக் கைதொழுது
ஓட்டை நெஞ்சினர் ஆய் உழல்வார் களும்

விளக்கவுரை :

[ads-post]

643. திங்கள் மதி முகத்த சேலும் பவளமும்சிலையும் முத்தும்
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
அங் கை குழியா அரக்கு ஈத்த செந்தளிர் நெய் தோய்த்த போலும்
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார்

விளக்கவுரை :

644. பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழைக் கீழ் இலங்கும் ஆறும்
மன் மகர வெல் கொடியான் மால் கொள்ளக் கால் கொண்ட முலையினாளை
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார்

விளக்கவுரை :


645. கோள் வயிர நீள் அருவிக் குன்று இவர்ந்த சென்சுடர் போல் கொலை வேல் மன்னர்
நீள்வயிர வெண் மருப்பின் நீலக் களிற்றின் மேல் நிரைத் தார் பொங்கத்
தோள் வயிரம் தோன்றத் தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்கொலோ பெறுவார் என்பார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 636 - 640 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

636. இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்குப் பூத்த போலும்
வனம் சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும் கண்மலரும் வளையல் ஆகாக்
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டு உலகம் காணார் போலும்

விளக்கவுரை :


637. மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம்
ஊன் சேர் உயிர் உய்யக் கொண்டு ஓடிப் போமின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார்

விளக்கவுரை :


[ads-post]

638. கள் வாய்ப் பெயப் பட்ட மாலைக் கருங் குழல்கள் கண்டார் நைய
உள் வாய்ப் பெயப் பட்ட வெம்மதுச் செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
புள் வாய் மணி மழலைப் பொன் சிலம்பின் இக் கொடியை ஈன்றாள் போலும்
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடிய வாறே

விளக்கவுரை :


639. செய்ய தாமரை மேல் திருவே கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ
மையில் வானவர் தம் மகளே கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்

விளக்கவுரை :


640. வீணை வென்று இவள் வெம் முலைப் பூந் தடம்
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணைப் போரில் குளிக்குவம் அன்று எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 631 - 635 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

631. ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் படக் கையை மெய்வழி வீசித்
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
ஓரும் நடந்தன ஒண்தொடி முன்னே

விளக்கவுரை :

632. வட்டச் சூரையர் வார் முலைக் கச்சினர்
பட்டு வீக்கிய அல்குலர் பல்கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்

விளக்கவுரை :

[ads-post]

633. வம்பு வீக்கி வருமுலை உள் கரந்து
அம்பின் நொய்யவர் ஆண் உடைத் தானையர்
பைம் பொன் கேடகம் வாளொடு பற்றுபுளளள
செம் பொன் பாவையைச் சேவித்து முன்னினர்

விளக்கவுரை :

634. ஆணை ஆணை அகலுமின் நீர் என
வேணுக் கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணை இன்று எமதே என்று அணிநகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே

விளக்கவுரை :

635. கண்ணி னோடு பிறந்தது காரிகை
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 626 - 630 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

626. அருங் கயம் விசும்பில் பார்க்கும் அணிச் சிறு சிரலை அஞ்சி
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணிவில் காப்ப நீண்டு உலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
கருங் கயல் அல்ல கண்ணே எனக் கரி போக்கினாரே

விளக்கவுரை :
627. பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து
இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல்
திருந்தச் செய்து அதன்பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்

விளக்கவுரை :

[ads-post]

628. மண் கனை முழவம் விம்ம வரிவளை துவைப்ப வள்வார்க்
கண் கனைந்து இடியின் வெம்பிக் கடல் என முரசம் ஆர்ப்ப
விண் கனிந்து உருகு நீர்மை வெள்வளைத் தோளி போந்தாள்
பண் கனிந்து உருகு நல் யாழ்ப் படை பொருது உடைக்கல் உற்றே

விளக்கவுரை :

629. பரந்து ஒளி உமிழும் பைம் பொன் கண்ணடி பதாகை தோட்டி
விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு வெண்முரசு கும்பம்
சுரந்த வெண் மதியைச் சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும்
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே

விளக்கவுரை :


630. வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின்
நின்று எரி பசும் பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல்யாழ் போந்தன உருவம் மாலை
தின்று தேன் இசைகள் பாடத் திருநகர்ச் சுடர அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 621 - 625 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

621. பசும் கதிர்க் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழுநிதி சிதறினானே

விளக்கவுரை :

622. வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்பப்
பூசி வெள்ளி லோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளைக் காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அறத் திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ் வித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

623. கங்கையின் களிற்றின் உச்சிக் கதிர் மணிக்குடத்தில் தந்த
மங்கல வாச நல்நீர் மணிநிறம் கழீஇயது ஒப்ப
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி
அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார்

விளக்கவுரை :


624. வெண் நிற மழையின் மின்போல் வெண் துகில் கலாபம் வீக்கிக்
கண் நிறம் முலையும் தோளும் சந்தனத் தேய்வை கொட்டித்
தௌ நிறச் சிலம்பு செம் பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
பண் நிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்

விளக்கவுரை :


625. எரிமணிச் சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தித்
திருமணி முலையின் நெற்றிச் சிறு புறம் செறியத் தீட்டிப்
புரிமணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரிமணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 616 - 620 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

616. உருக்கு அமைந்து எரியும் செம் பொன் ஓர் ஐவில் அகலம் ஆகத்
திருக் குழல் மடந்தை செல்லத் திரு நிலம் திருத்திப் பின்னர்
விரைத் தகு நான நீரால் வெண் நிறப் பொடியை மாற்றிப்
பரப்பினர் படு வண்டு ஆர்ப்பப் பல் மலர் பக்கம் எல்லாம்

விளக்கவுரை :

617. விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆகப்
பல படப் பரப்பிப் பாவை மெல் அடிப் பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான்

விளக்கவுரை :

[ads-post]

618. மண்டலம் நிறைந்த மாசு இல்மதிப் புடை வியாழம் போனறு ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினைக் குறுகித் தோழி
விண்டு அலர் கோதை விம்மும் விரைக் குழல் தொழுது நீவிப்
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அறப் பணிந்து சொன்னாள்

விளக்கவுரை :


619.  எரிமணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது கொல் என்னப்
புரிமணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை
திருமணி வீணைக் குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து
அருமுடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள்

விளக்கவுரை :

620. மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண் பொன் ஆட்சித்
தௌ நிற விசும்பில் நின்ற தெளிமதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாள் போர்க் கலாம் இன்று காண்டும் என்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 611 - 615 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

611. சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின் செய் கழல் நரல வீக்கி
மதக் களிறு அடர்த்துக் குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
கதக் களி ஒளிறு வைவேல் காம்பிலிக் காவல் மன்னன்
பதைப்பு அரும் பரும யானைப் பாலமா குமரன் வந்தான்

விளக்கவுரை :

612. இலை பொர எழுதி அன்ன எரிமணிக் கடக முன்கைச்
சிலை பொரத் திரண்ட திண்தோள் சில்லரிச் சிலம்பினார் தம்
முலை பொர உடைந்த தண்தார் மொய்ம் மதுத் துளிப்ப வந்தான்
மலை பொர அரிய மார்பின் வாரண வாசி மன்னன்

விளக்கவுரை :

[ads-post]

613. கதிர் முடி மன்னர் சூழ்ந்து கை தொழுது இறைஞ்சி மாலைத்
திருமுடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி
அருமுடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப
ஒரு பிடி நுசுப்பினானை உள்ளுபு வந்து விட்டான்

விளக்கவுரை :

614. வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர் தம் முடியில் கொண்ட
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள்
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல்
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான்

விளக்கவுரை :

615. நீள் நிதி வணிகர் ஈறா நிலமிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்க்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர்
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 606 - 610 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

606. அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம் உறு நுசுப்பு நைய வீற்று இருந்து அணங்கு சேர்ந்த
வெம் முலைப் பரவை அல்குல் மிடை மணிக் கலாபம் வேய்த் தோள்
செம் மலர்த் திருவின் சாயல் தேமொழி தத்தை என்பாள்

விளக்கவுரை :

607. மற்று அவள் தந்தை நாய்கன் வண்கைச் சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனைக் கனிக்கும் நீராள்

விளக்கவுரை :

[ads-post]

608. தீம் தொடை மகர வீணைத் தெளி விளி எடுப்பித் தேற்றிப்
பூந் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
ஈந்திடும் இறைவர் ஆதி மூவகைக் குலத்து உளார்க்கும்
வேந்தடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான்

விளக்கவுரை :

609. மண்ணக மடந்தை ஆகம் மார்பு உற முயங்கி நின்ற
அண்ணலை ஆதி ஆக அருங் கடி நகரை வாழ்த்தி
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடிமுரசு அறைந்த காலை

விளக்கவுரை :

610. வணக்க அருந் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த
நிணம் கொழுங் குருதி வாள் கை நிலம் புடை பெயர்க்கும் ஆற்றல்
அணைப்ப அரும் களிகொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
கணைக் கவின் அழித்த உண்கண் கன்னியைக் கருதி வந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 601 - 605 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

601. அரைசனது அருளினொடு அகல்மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே

விளக்கவுரை :

602. விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
படு பணையவர் உறை பதி அது குறுகி
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
கடி நகர் இடி முரசு அறைமினம் எனவே

விளக்கவுரை :

[ads-post]

603. மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்

விளக்கவுரை :

604. வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
ஊன்றுக ஊழிதோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்

விளக்கவுரை :

605. தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பிப்
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈமின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அருந் தவம் முயல்மின் யாரும்
சிவம்புரி நெறியைச் சேரச் செப்பும் இப் பொருளும் கேள்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 596 - 600 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

596. காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
ஏம் உறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே

விளக்கவுரை :

597. உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
விழுங்கும் எனப் பறவைகளும் பிற விலங்கும் அடையா
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
எழுந்து கொடி ஆடும் இது அவ் எழில் நகரின் இயல்பே

விளக்கவுரை :


[ads-post]

598. ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்

விளக்கவுரை :


599. கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
கொண்டு உலகம் ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும்
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே

விளக்கவுரை :

600. முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
பகல் கதிர்ப் பரப்பிற்று ஆகிப் பஞ்சவர் விமானம் முட்டிப்
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 591 - 595 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

591. நட்புப் பகை உட்கினொடு நன்பொன் விளை கழனி
பட்டினொடு பஞ்சு துகில் பைம் பொன்னொடு காணம்
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
ஒட்டிப் பதினாயிரவர் உற்று முயல்கின்றார்

விளக்கவுரை :

592. வண்டு படு தேறல் நறவு வாய் விடொடு பருகிக்
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு
எண்திசையும் ஏற்பப் படுத்து ஏற்றி அதன் மேலால்
கண்டு உருகு பொன்னின் நிலம் காமுறுவ புனைந்தார்

விளக்கவுரை :


[ads-post]

593. பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி
பொன் தூண் மின் செய் பசும் பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார்

விளக்கவுரை :

594. பாவை அவள் இருக்கும் இடம் பளிக்குச் சுவர் இயற்றிக்
கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன்
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார்

விளக்கவுரை :

595. ஆய் இதழ் பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின்போல்
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய்
பாய திரை முத்த மணல் பரந்து பயின்று உளதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 586 - 590 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

586. பாசிழைப் பரவை அல்குல் பசுங் கதிர்க் கலாபம் வீங்கக்
காசு கண் பரிய வைகிக் கடன் தலை கழிந்த பின்னாத்
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறியச் சொன்னான்

விளக்கவுரை :


587. வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேரத்
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்து வீங்கிப்
பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாளைக்
கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்தும் என்றான்

விளக்கவுரை :


[ads-post]

588. மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
பால் வரை மணியும் பொன்னும் பற் பல கொண்டு புக்குக்
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்

விளக்கவுரை :

589. மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனாப்
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்

விளக்கவுரை :

590. நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்து இடை நன் பொன்
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
கானத்து இடை வேங்கை எழக் கண்ணினர்கள் அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 581 - 585 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

581. தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சைக்
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கனமணிக் குழையினானே

விளக்கவுரை :

582. தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு காதல்
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவத் தார் குழையப் புல்லிப்
பாடிரும் பௌவம் முந்நீர்ப் பட்டது பகர்தலோடும்
நாடகம் நாங்கள் உற்றது என்று கை எறிந்து நக்கார்

விளக்கவுரை :

[ads-post]

583. கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்க்
கட்டு அவிழ் தாரினான் தன் கடிமனை மகிழ்ந்து புக்கான்

விளக்கவுரை :

584. பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கித் தோன்றும்
திரு நுதல் மனைவி செம் பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரியப் புல்லிக்
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்

விளக்கவுரை :

585. சந்திர காந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
வெந்து எரி பசும் பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்திப்
பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 576 - 580 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

576. ஈர் அலங்கல் ஏந்து வேல், ஆர் அலங்கல் மார்பினான்
கார் கலந்த கைக் கணி, சீர் கலந்து செப்பினான்

விளக்கவுரை :

577. மாதர் வாழ்வு மண்ணதே, ஆதலால் அலங்கல் அம்
தாது அவிழ்ந்த மார்ப நின், காதலன் கடல் உளான்

விளக்கவுரை :

[ads-post]

578. என்று கூற என்னையே, துன்று காதல் தோழனைச்
சென்று நீ கொணர்க என, அன்று வந்த வண்ணமே

விளக்கவுரை :

579. துன்பம் உற்றவர்க்கு அலால், இன்பம் இல்லை ஆதலின்
அன்ப மற்று யான் நினைத், துன்பத்தால் தொடக்கினேன்

விளக்கவுரை :

580. பீழை செய்து பெற்றனன், வாழி என்று மாக்கடல்
ஆழ்வித்து இட்ட அம்பியைத், தோழர்ச் சுட்டிக் காட்டினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 571 - 575 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

571. வேழம் மும் மதத்தொடு, தாழ் புயல் கலந்து உடன்
ஆழ் கடல் அகம் புறம், வீழ் தர விரைந்ததே

விளக்கவுரை :

572. மல்லல் மாக் கடல் இடைக், கல் எனக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்று அழுங்கிய, செல்வன் உற்ற செப்புவாம்

விளக்கவுரை :

[ads-post]

573. பால் நிறப் பனி வரை, மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி, தான் நிரைத்து அகம் எலாம்

விளக்கவுரை :

574. வஞ்சம் இல் மனத்தினான், நெஞ்சு அகம் புகன்று உக
விஞ்சை அம் பெருமகன், வஞ்சம் என்று உணர்த்தினான்

விளக்கவுரை :

575. நங்கை தன் நலத்தினால், மங்குல் வெள்ளி மால்வரை
எங்கும் மன்னர் ஈண்டினர், சங்கு விம்மு தானையார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 566 - 570 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

566. கண் அயல் களிப்பன, அண்ணல் யானை ஆயிரம்
விண் அகத்து இயங்கு தேர், எண் அவற்று இரட்டியே

விளக்கவுரை :

567. வில்படை விலக்குவ, பொன்படைப் புரவியும்
முன்படக் கிளந்த அவற்றின், நல்புடைய நாற்றியே

விளக்கவுரை :

[ads-post]

568. பாறு உடைப் பருதி வேல், வீறு உடை இளையரும்
ஆறு இரட்டி ஆயிரர், கூறுதற்கு அரியரே

விளக்கவுரை :

569. மாகம் நீள் விசும்பு இடை, மேகம் நின்று இடித்தலின்
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு, ஏகல் ஆவது இல்லையே

விளக்கவுரை :

570. வெம் சின வெகுளியில், குஞ்சரம் முழங்கலின்
மஞ்சு தம் வயிறு அழிந்து, அஞ்சி நீர் உகுத்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 561 - 565 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

561. காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணிக் குடையொடு ஏந்தித்
தாம் பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப்
பாம்பு பைத்த அனைய அல்குல் பல்கலை மிழற்ற ஏகி
ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் அரசனைத் தொழுது நின்றாள்

விளக்கவுரை :

562. அடிக் கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம்
முடிக் கலம் சொரியச் சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னுக்
கொடிப் பல நுடங்கி ஆங்குத் தோழியர் குழாத்துள் நிற்ப
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

563. வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசை அவர்கட்கு அல்லால்
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்த அனைய காதல் தேவி தன் நவையை நீங்கக்
குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே

விளக்கவுரை :


564. இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர்ப் புறவம் பொன்னார்
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆகத்
தன் புறம் சூழப் போகித் தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்

விளக்கவுரை :

565. வெற்றி வேல் மணிமுடிக், கொற்றவன் ஒரு மகள்
அற்றம் இல் பெரும் படைச், சுற்றமோடு இயங்கினாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 556 - 560 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

556. உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா
நெடுங் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின்
தடங் கணி தனிமை நீங்கத் தந்தையும் தாயும் ஆகி
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றான்

விளக்கவுரை :


557. அரு மணி வயிரம் வேய்ந்த அருங் கலப் பேழை ஐந்நூறு
எரிமணி செம்பொன் ஆர்ந்த ஈர் ஆயிரம் யவனப் பேழை
திருமணி பூணினாற்குச் சினம் தலை மழுங்கல் இன்றிக்
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான்

விளக்கவுரை :


[ads-post]

558. பல் வினைப் பவளப் பாய் கால் பசுமணி இழிகை வம்பு ஆர்
நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலைக் கண்ணாடி
மெல்லிய தூபமுட்டி மேதகு நானச் செப்போடு அல்லவும்
கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான்

விளக்கவுரை :

559. விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறு போர்வைத் தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அருஞ் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான்

விளக்கவுரை :

560. அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளைத் தோளினாளைப்
பரப்பு அமை கதல் தாயர் பற்பல் கால் புல்லிக் கொண்டு
திருப் புறக் கொடுத்த செம் பொன் தாமரை போன்று கோயில்
புரிக் குழல் மடந்தை போகப் புலம்பொடு மடிந்தது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 551 - 555 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

551. விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அருமணி முகிழ்த்தவே போல்
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே

விளக்கவுரை :

552. நின் மகள் இவளை நீயே நின் பதிக் கொண்டு போகி
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக
அன்னவற்கு உரியள் என்ன அடிப் பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கது என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

553. முனிவு அரும் போக பூமிப் போகம் முட்டாது பெற்றும்
தனியவர் ஆகி வாழ்தல் சாதுயர் அதனின் இல்லை
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின்
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்

விளக்கவுரை :

554. நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங் கண் நங்கை
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார்

விளக்கவுரை :

555. படைப்பு அருங் கற்பினாள் தன் பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அருந் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 546 - 550 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

546. வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடிப் பாலில்
கள் அவிழ் கைதை வேலிக் காசு இல் காந்தார நாட்டுப்
புள் அணி கிடங்கின் விச்சா லோகமா நகரில் போகா
வெள்ளி வேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்

விளக்கவுரை :

547. சங்கு உடைந்த அனைய வெண் தாமரை மலர்த் தடங்கள் போலும்
நம் குடித் தெய்வம் கண்டீர் நமரங்காள் அறிமின் என்னக்
கொங்கு உடை முல்லைப் பைம் போது இருவடம் கிடந்த மார்ப
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

548. பெருந் தகைக் குருசில் தோழன் பெருவிலைக் கடகம் முன்கை
திருந்துபு வணங்கப் பற்றிச் சென்று தன் உரிமை காட்டப்
பொருந்துபு பொற்ப ஓம்பிப் பொன் இழை சுடர நின்ற
கருங் கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று நின்றான்

விளக்கவுரை :


549. எரி மணிப் பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி
அரு மணிக் கொடிகொல் மின்கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல் என்று நாய்கன்
திரு மணிக் கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான்

விளக்கவுரை :

550. தூசு உலாய்க் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்
வாச வான் குழலின் மின் போல் வரு முலைச் சாந்து நக்கி
ஊசல் பாய்ந்து ஆடிக் காதில் குண்டலம் இலங்க நின்றாள்
காசு இல் யாழ்க் கணம் கொள் தெய்வக் காந்தர்வ தத்தை என்பாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 541 - 545 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

541. பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும் பொன் கட்டில்
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
வேல் பரந்து அனைய கண்ணார் வெண் மதிக் கதிர் பெய் கற்றை
போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின்

விளக்கவுரை :

542. என்வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி
மன்னர் தம் முடிகள் வேந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழைத் தடக்கை கூப்ப
இன் உரை முகமன் கூறித் தானத்தில் இருக்க என்றான்

விளக்கவுரை :

[ads-post]

543. முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்பக்
கதிர் விரி பூணினாற்குத் தந்தை தாய் தாரம் காதல்
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான்

விளக்கவுரை :


544. இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான்

விளக்கவுரை :

545. மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்குத் தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுது எடுத்து இயம்புகின்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 536 - 540 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

536. நல் நகர் நோக்கி நாய்கன் நாகம் கொல் புகுந்தது என்னப்
பொன்னகர் பொலிய புக்குப் பொங்குமா மழைகள் தங்கும்
மின் அவிர் செம் பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்குப்
பின் அவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான்

விளக்கவுரை :

537. மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆகக் கேடு
இல் சீர்க் கலுழன் ஆய கலுழ வேகற்குத் தேவி தோடு
அலர் கோதைத் தொல் சீர்த் தார் அணி சுரும்பு உண் கண்ணி
ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள்

விளக்கவுரை :

[ads-post]

538. விண் அகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல்
பண் அகத்து இனிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இம் மலை இறை கொண்டு ஈண்டி
அண்ணல் அம் களிற்றின் உச்சி அருங் கலம் வெறுக்கை ஈந்தார்

விளக்கவுரை :

539. மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான்
இந்திரத் திருவில் ஏய்ப்பக் குலவிய புருவத்தாட்கு
வந்து அடை பான்மை மண் மேல் இராசமா புரத்து என்றான்

விளக்கவுரை :


540. அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்பக்
கவனம் கொள் புரவிக் கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்று ஆம் கொல் அன்று கொல் அறியல் ஆகாது
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 531 - 535 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

531. செம் பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
அம் பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம் பொன் கொப்புள் பரந்தன போன்றவே

விளக்கவுரை :

532. உருளி மாமதி ஓட்டு ஒழிதள்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே

விளக்கவுரை :

[ads-post]

533. அசும்பு பொன் வரை ஆய் மணிப் பூண்களும்
பசும் பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே

விளக்கவுரை :

534. தேன்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
ஆக்கப் பட்ட அளவில் கொழும் புகை
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே

விளக்கவுரை :

535. தப்பு இல் வாய் மொழித் தானவர் வைகிய
ஒப்பு இல் மா நகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச்
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 526 - 530 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

526. மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளிக் குன்றம்
மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட பால் மதி போன்றது அன்றே

விளக்கவுரை :

527. துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால்
இளங் கதிரப் பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே

விளக்கவுரை :

[ads-post]

528. பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
செங் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
தங்குகின்றது போல் தகை சான்றதே

விளக்கவுரை :

529. கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூங் கொடி
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண்மதி உள் குளிரத் தம்
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே

விளக்கவுரை :


530. திருவ மேகலை தௌளரிக் கிண் கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 521 - 525 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

521. உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
வரை அகம் ஏற வலிமின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றிக்
குரை கழல் மைந்தனைக் கொண்டு பறந்தான்

விளக்கவுரை :

522. விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
நயந்தனர் போகி நறு மலர்ச் சோலை
அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார்

விளக்கவுரை :

[ads-post]

523. கண்டால் இனியன காண்டற்கு அரியன
தண் தாமரை அவள் தாழும் தகையன
கொண்டான் கொழுங் கனி கோட்டு இடைத் தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்

விளக்கவுரை :

524. மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தனச் சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்

விளக்கவுரை :

525. கோதை அருவிக் குளிர் வரை மேல் நின்று
காதம் கடந்த பின் கன்னிக் கொடிமதில்
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்குப்
போதும் எழுக எனப் போயினர் சார்ந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 516 - 520 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

516. ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
நீடிய நெய்தல் அம் கானல் நெடுந் தகை
வாடி இருந்தான் வரும்கலம் நோக்கா

விளக்கவுரை :

517. ஆளிய மொய்ம்பன் இரும் தவப் பூம் பொழில்
தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டுக்
கேளிர் எனக்கு உற்ற கேண்மின் நீர் எனத்
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்

விளக்கவுரை :

[ads-post]

518. கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்

விளக்கவுரை :


519. மானும் மரனும் இரங்க மத வலி
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்

விளக்கவுரை :

520. விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 511 - 515 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

511. வினை அது விளைவின் வந்த வீவு அரும் துன்பம் முன்னீர்க்
கனை கடல் அழுவம் நீந்திக் கண் கனிந்து இரங்கல் வேண்டா
நனை மலர்ப் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையுமின் நீவிர் எல்லாம் நீங்குமின் அச்சம் என்றான்

விளக்கவுரை :

512. பருமித்த களிறு அனானும் பை எனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பு இறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
உரும் இடித்து இட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்

விளக்கவுரை :


[ads-post]

513. ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும்
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் கொழித்துத்
தேம் பெற்ற பைந்தார் அவனைத் திரை உய்த்தது அன்றே

விளக்கவுரை :

514. நாவாய் இழந்து நடு ஆரும் இல் யாமம் நீந்திப்
போவாய் தமியே பொருளைப் பொருள் என்று கொண்டாய்
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் எனப் போய்ப் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்

விளக்கவுரை :

515. பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்தாங்கு
அருவரை மார்பன் அவலித்து இருந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 506 - 510 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

506. அரசனைக் கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறிக்
கரை கடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடைக் காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே

விளக்கவுரை :
 
507. களித் தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
துளித் தலை முகில்கள் ஈண்டித் தூங்கு இருள் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்றும்
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன்

விளக்கவுரை :

[ads-post]

508. எண் திசை வளியும் ஈண்டி எதிர் எதிர் கலாவிப் பவ்வம்
கொண்டு மேல் எழுவது ஒப்பக் குளிறி நின்று அதிர்ந்து மேகம்
தண் துளி பளிக்குக் கோல் போல் தாரையாய்ச் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்மின் என்று கூறும்

விளக்கவுரை :

509. இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்குப் போல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக தாம் நக்க போழ்து அவ்
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார்
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே

விளக்கவுரை :

510. ஆடகச் செம் பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 501 - 505 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

501. ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபடச் செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்க்
கோடு பறை ஆர்ப்பக் கொழுந் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே.

விளக்கவுரை :

502. திரைகள் தரும் சங்கு கலம் தாக்கித் திரள் முத்தம்
கரை கடலுள் காலக் கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது எனக் கீறி வளர் தீவின்
நிரை இடறிப் பாய்ந்து இரிய ஏகியது மாதோ.

விளக்கவுரை :

[ads-post]

503. மின்னும் மிளிர் பூங் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே.

விளக்கவுரை :


504. தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலும் திருமுத்தாரம்
கோவினைக் குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்.

விளக்கவுரை :


505. புணர்ந்தவர் பிரிதல் ஆற்றாப்போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்றகொழுநிதிக் குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 496 - 500 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

496. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி
னெள்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே.

விளக்கவுரை :

497. செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு
மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு
மையமிலை யின்பமற னோடெவையு மாக்கும்
பொய்யில்பொரு ளெபொருண்மற் றல்லபிற பொருளே.

விளக்கவுரை :


[ads-post]

498. தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ
னீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான்.

விளக்கவுரை :

499. மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி
மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற
தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன்
கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான்.

விளக்கவுரை :

500. வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள
றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி
யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 491 - 495 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

491. கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி
வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை
முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக்
கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான்.

விளக்கவுரை :

492. தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள்
ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே.

விளக்கவுரை :


[ads-post]

கோவிந்தையார் இலம்பகம் முற்றியது

3. காந்தருவ தத்தையார் இலம்பகம்


493. இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்
சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்
பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர்
வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்.

விளக்கவுரை :

494. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன்
கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந்
தன்வழிய காளைச் தத்தனவன் றன்போற்
பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான்.

விளக்கவுரை :

495. இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி
யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 486 - 490 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

486. கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார்.

விளக்கவுரை :

487. நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.

விளக்கவுரை :

[ads-post]

488. நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்.

விளக்கவுரை :

489. ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே.

விளக்கவுரை :

பதுமுகன் இன்பம் நுகர்தல்


490. நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன்
இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 481 - 485 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

481. சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்.

விளக்கவுரை :

482. குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.

விளக்கவுரை :


[ads-post]

பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்


483. கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.

விளக்கவுரை :

484. கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான்.

விளக்கவுரை :

485. தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 476 - 480 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

476. கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்.

விளக்கவுரை :


477. குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்.

விளக்கவுரை :

[ads-post]

478. வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்.

விளக்கவுரை :

479. பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்.

விளக்கவுரை :

480. வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல்
தீம் சொல்லள் உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 471 - 475 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

471. பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி
இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே.

விளக்கவுரை :


472. இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார்.

விளக்கவுரை :

[ads-post]

473. தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக்
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்.

விளக்கவுரை :

நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்


474. தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்.

விளக்கவுரை :

475. கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 466 - 470 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

466. சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக்
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்.

விளக்கவுரை :

467. விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார்.

விளக்கவுரை :

[ads-post]

468. வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ
அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக்
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்.

விளக்கவுரை :

469. வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே.

விளக்கவுரை :

470. வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித்
தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 461 - 465 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

461. வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே.

விளக்கவுரை :

462. வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம்.

விளக்கவுரை :

[ads-post]

463. மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப்
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார்.

விளக்கவுரை :

464. கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்.

விளக்கவுரை :


465. செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார்
எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்.

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி 456 - 460 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்

456. இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார்.

விளக்கவுரை :


457. இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்.

விளக்கவுரை :

[ads-post]

458. சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச்
செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே.

விளக்கவுரை :

459. நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக்
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக்
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்.

விளக்கவுரை :

460. ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப்
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப்
பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார்.

விளக்கவுரை :
Powered by Blogger.