பழமொழி நானூறு
91 - 95 of 400 பாடல்கள்
91. தக்காரோ(டு) ஒன்றித் தமராய்
ஒழுகினார்
மிக்காரால்
என்று சிறியாரைத் தாம்சேறார்
கொக்கார்
வளவய லூரா! 'தினலாமோ
அக்காரம்
சேர்ந்த மணல்'.
விளக்கவுரை :
92. தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர்
ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை
கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத
எல்லாம் கணக்கு?'.
விளக்கவுரை :
93. பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார்
தாமும் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும்
நாறாத வித்துள பேதைக்கு
'உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு'.
விளக்கவுரை :
94. ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு
யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே
கொண்டு விடானாகும் 'ஆகாதே
உண்டது
நீலம் பிறிது'.
விளக்கவுரை :
95. தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே
அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே
யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே
தேவரே
தின்னினும் வேம்பு'.
விளக்கவுரை :