பழமொழி நானூறு
71 - 75 of 400 பாடல்கள்
71. மாடம் அழிந்தக்கால் மற்றும்
எடுப்பதோர்
கூடம்
மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக்
கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.
விளக்கவுரை :
72. இணரோங்கி வந்தாரை என்னுற்றக்
கண்ணும்
உணர்பவர்
அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை
நாட ! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி
யாகி விடும்'.
விளக்கவுரை :
73. கற்றதொன் றின்றி விடினும்
குடிப்பிறந்தார்
மற்றொன
றறிவாரின் மாணமிக நல்லால்
பொற்ப
உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்
துன்னூசி
விற்பவர் இல்'.
விளக்கவுரை :
74. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப்
போர்வையும்
தொல்லை
அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற்
பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.
விளக்கவுரை :
75. பல்லார் அவைநடுவண் பாற்பட்ட
சான்றவர்
சொல்லார்
ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங்
காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.
விளக்கவுரை :