பழமொழி நானூறு 61 - 65 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 61 - 65 of 400 பாடல்கள்

61. ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.'

விளக்கவுரை :

62. எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.

விளக்கவுரை :

63. முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ
வாழை இருகால் குலை'.

விளக்கவுரை :

64. நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு உடையான் குடி'.

விளக்கவுரை :

9. புகழ்தலின் கூறுபாடு

65. செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம்படார் - எய்த
நலத்தகத் தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்
புள்ளரைக் கால் விற்பேம் எனல்'

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books