பழமொழி நானூறு 151 - 155 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 151 - 155 of 400 பாடல்கள்

151. வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் தாளாண்மை
தாழ்க்கு மடிகோள் இலராய் 'வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று'.

விளக்கவுரை :

152. ஒன்றால் சிறிதால் உதவுவதொன்(று) இல்லையால்
என்றாங்(கு) இருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
'சென்றது பேரா தவர்'.

விளக்கவுரை :

153. இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க 'முனிவில்லார்
முன்னிய(து) எய்தாமை இல்'.

விளக்கவுரை :

154. தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
'யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்'.

விளக்கவுரை :

155. வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books