பழமொழி நானூறு
111 - 115 of 400 பாடல்கள்
111. குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான்
புக்கு
விலக்குவார்
மேலும் எழுதல் - நிலத்து
நிலையழுங்க
வேண்டிப் புடைத்தக்கால் 'வெண்மாத்
தலைக்கீழாக்
காதி விடல்'.
விளக்கவுரை :
112. சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற்
போலத் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து)
ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி
தாம்கழிக்கு மாறு'.
விளக்கவுரை :
113. நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா
அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி
அவரோடு உடனுறை செய்தல்
'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.
விளக்கவுரை :
114. பொல்லாத சொல்லி மறைத்தொழுகும்
பேதைதன்
சொல்லாலே
தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் !
மணலுள்
முழுகி மறைந்து கிடக்கும்
'நுணலும்தன் வாயால் கெடும்'.
விளக்கவுரை :
115. தாக்குற்ற போழ்தில் தமரேபோல்
நன்குரைத்துப்
போக்குற்ற
போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற்
றவரைப் பழித்தலென்? என்னானும்
'மூக்கற்ற தற்கில் பழி'.
விளக்கவுரை :