இனியவை நாற்பது 6
- 10 of 40 பாடல்கள்
6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார்
கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய
ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக்
கோடல் இனிது.
விளக்கவுரை :
7. அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம்
உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே
ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா
னாகல் இனிது.
விளக்கவுரை :
8. ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை
மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை
யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ
முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார்
கேட்டல் இனிது.
விளக்கவுரை :
9. தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல்
முன்இனிதே
அங்கண்
விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில்
செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய
ராதல் இனிது.
விளக்கவுரை :
10. கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில்
பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி
லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந்
தான்இனிது நன்கு.
விளக்கவுரை :
