இனியவை நாற்பது
11 - 15 of 40 பாடல்கள்
11. அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று
கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று
தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற்
பீடுடையது இல்.
விளக்கவுரை :
12. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும்
அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக
ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர்
வின்றேல் இனிது.
விளக்கவுரை :
13. மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான
மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண்
றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க்
கெல்லாம் இனிது.
விளக்கவுரை :
14. குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை
கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான்
வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான்
ஆகல் இனிது.
விளக்கவுரை :
15. பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும்
பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர்
தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங்
கேட்டல் இனிது.
விளக்கவுரை :
