ஏலாதி 46 - 50 of 80 பாடல்கள்
46. களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக்
காணான்
ஒளியான்
விருந்துக்(கு) உலையான் - எளியாரை
எள்ளான்நீத்
துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான்
குடிவாழ்வான் கூர்ந்து.
விளக்கவுரை :
47. பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று
பரியா
அடியார்ப் பறியான் - கரியார்சொல்
தேறான்
இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்
மாறான்மண்
ஆளுமாம் மற்று.
விளக்கவுரை :
48. வேற்றரவம் சேரான் விருந்தொழியான்
தன்இல்லுள்
சோற்றரவம்
சொல்லியுண் பானாயின் - மாற்றரவம்
கேளான்
கிளைஓம்பின் கேடில் அரசனாய்
வாளான்மண்
ணாண்டு வரும்.
விளக்கவுரை :
49. யானை குதிரைபொன் கன்னியே
ஆணிரையோ(டு)
ஏனை
ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்
எண்ணனாய்
மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய்
வாழ்வான் வகுத்து.
விளக்கவுரை :
50. எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே
துணியே இவற்றோடு - கொள்ளென
அன்புற்(று)
அசனம் கொடுத்தான் துணையினோ(டு)
இன்புற்(று)
வாழ்வான் இயைந்து.
விளக்கவுரை :
