ஏலாதி 41 - 45 of 80 பாடல்கள்
41. குறுகான் சிறியாரைக் கொள்ளான்
புலால்பொய்
மறுகான்
பிறர்பொருள் வெளவான் - இறுகானாய்
ஈ(டு)அற்
றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப
பன்னும் இடத்து.
விளக்கவுரை :
42. கொல்லான் உடன்படான் கொல்வார்
இனஞ்சேரான்
புல்லான்
பிறர்பால் புலான்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக்
கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான்
மண்ஆண்(டு) அரசு.
விளக்கவுரை :
43. சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான்
யார்திறத்தும்
வா(து)உவவான்
மாதரார் சொல்தேறான் - காதுதாழ்
வான்மகர
வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான்மகர
வாய்மாடத் தான்.
விளக்கவுரை :
44. பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான்
யாவரையும்
வையான்
வழிசீத்து வால்அடிசில் - நையாதே
ஈத்துண்பான்
ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பான்
ஏத்துண்பான் பாடு.
விளக்கவுரை :
45. இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான்
மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால்
செல்வான்
செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு
வெல்வான்
விடுப்பான் விரைந்து.
விளக்கவுரை :
