களவழி நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்



களவழி நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

36. ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்தடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து.

விளக்கவுரை :

38. பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து)
உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற்
பொன்னார மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்
துன்னாரை யட்ட களத்து.

விளக்கவுரை :

39. மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்ட களத்து.

விளக்கவுரை :

40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல்
எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற்
பணைமுழங்கு போர்த்தானைடச் செங்கட் சினமால்
கணைமாரி பெய்த களத்து.

விளக்கவுரை :

41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே
பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து.

விளக்கவுரை :
 
களவழி நாற்பது முற்றிற்று

களவழி நாற்பது, பொய்கையார், kalavazhi narpathu, poigaiyaar, tamil books