பழமொழி நானூறு 296 - 300 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 296 - 300 of 400 பாடல்கள்

296. தழங்குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
'பழம்பகை நட்பதால் இல்'.

விளக்கவுரை :

297. வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர ! அஃதன்றோ
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.

விளக்கவுரை :

298. இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா அடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
'மைம்மைப்பின் நன்று குருடு.'

விளக்கவுரை :

299. பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு'.

விளக்கவுரை :

300. வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலம் தண்சேர்ப்ப!
'வெண்பாட்டம் வெள்ளம் தரும்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books