பழமொழி நானூறு
271 - 275 of 400 பாடல்கள்
271. செருக்கெழு மன்னர் திறலுடையார்
சேர்ந்தார்
ஒருத்தரை
அஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த
சுணங்கின் ஒளியிழாய் ! 'கூரிது
எருத்து
வலியநன் கொம்பு'.
விளக்கவுரை :
272. வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக்
கொண்டேனை
மாந்தரும்
ஆங்கே மதித்துணர்வர் - ஆய்ந்த
நலமென்
கதுப்பினாய் ! நாடின 'நெய்பெய்த
கலனேநெய்
பெய்து விடும்'.
விளக்கவுரை :
273. ஆண்டகை மன்னரைத் சார்ந்தார்தாம்
அல்லுறினும்
ஆண்டொன்று
வேண்டுதும் என்பது உரையற்க
பூண்தாங்கு
மார்ப! பொருள்தக்கார் 'வேண்டாமை
வேண்டிய
தெல்லாம் தரும்'.
விளக்கவுரை :
274. காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்
ஏவல்
வினைசெய் திருந்தார்க்(கு) உதவடுத்தல்
ஆவணைய
நின்றதன் கன்று 'முலையிருப்பத்
தாயணல்
தான்சுவைத் தற்று'.
விளக்கவுரை :
275. சிறப்புடை மன்னவரைச் செவ்வியின்
நோக்கித்
திறத்தின்
உரைப்பாரைக்கொன் (று) ஆகாத தில்லை
விறற்புகழ்
மன்னர்க்(கு) உயிரன்ன ரேனும்
'புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்'.
விளக்கவுரை :