பழமொழி நானூறு 266 - 270 of 400 பாடல்கள்



பழமொழி நானூறு 266 - 270 of 400 பாடல்கள்

27. மன்னரைச் சேர்ந்தொழுகல்

266. கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்'.

விளக்கவுரை :

267. வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வம் இலராகிச் செய்க அதுவன்றோ
'செய்கென்றான் உண்கென்னு மாறு'.

விளக்கவுரை :

268. எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.

விளக்கவுரை :

269. விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரு மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
'கடல்படா வெல்லாம் படும்'.

விளக்கவுரை :

270. உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின் செய்தான்மேல் ஏறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்'.

விளக்கவுரை :

பழமொழி நானூறு, மூன்றுறை அரையனார், palamozhi nanooru, moontrurai araiyanaar, tamil books