கார் நாற்பது 26 - 30 of 40 பாடல்கள்
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
26. நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள்
விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம்
பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு
வந்த மழை.
விளக்கவுரை :
ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது
27. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை
பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா
தகன்றாரென் றூடியாம் பாராட்டப்
பள்ளியுட்
பாயும் பசப்பு.
விளக்கவுரை :
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
28. இமிழிசை வானம் முழங்கக்
குமிழின்பூப்
பொன்செய்
குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி
யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை
யழுங்கச் செலற்கு.
விளக்கவுரை :
29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு
பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத்
திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி
யுடைய கரம்.
விளக்கவுரை :
30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந்
தீம்பெய றாழ - விரைநாற
ஊதை
யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட
நம்மாட் டுரைத்து.
விளக்கவுரை :
